Powered By Blogger

Monday, February 14, 2011

உலகக் கோப்பை அனுபவங்கள்

1983-ல் இருந்து இதுவரை ஏழு உலகக்கோப்பை போட்டிகளைப் பார்த்திருந்தாலும் நேரடியாகப் பார்த்து விமர்சனம் செய்வது இதுவே முதல் முறை. அதனால்தானோ என்னவோ முன்பு கிரிக்கெட் போட்டிகளைக் காண சேப்பாக்கத்துக்கு சென்றதை விட அதிக த்ரில்.அந்த அனுபவங்களில் சில.

கிரிக்கெட்டின் வளர்ச்சி எந்த வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறதோ, அதே வேகத்தில் கிரிக்கெட்டுக்கும் மீடியாவுக்குமான இடைவெளி அதிகரிக்கிறது. 1998ல் முதல் முறையாக கிரிக்கெட் கவர் செய்ய போகும்போது பெவிலியனுக்கு மேலேயே ப்ரெஸ் பாக்ஸ் இருந்தது. வீரர்களை கிட்டே இருந்து பார்க்கலாம். அவர்களோடு பேசவோ, கைகுலுக்கவோ செய்யலாம். ஆனால் இப்போது. பெவிலியனுக்கு நேர் எதிரே ஒரு கண்ணாடிக் கூண்டை  பிரஸ் பாக்ஸ் என்ற பெயரில் [ இதுபற்றிக் கேட்டால் உங்களுக்கு ஏசி பண்ணித் தரத்தான் இது என்கிறார்கள்.]அமைத்திருக்கிறார்கள். வீரர்களுக்கும் எங்களுக்கும் அரை கிலோமீட்டர் தூரம். பைனாக்குலர் வைத்துதான் பார்க்க முடியும் மற்றபடி அந்த அறைக்குள் இருக்கும் எல்.சி.டி டிவிக்கள்தான் எங்கள் துணை.

வீரர்களோடு பேசவேண்டுமென்றால் ஒரே வழி பிரஸ் மீட்டில் பேசுவதுதான். இந்த அழகில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ‘உங்களுக்கு என்னப்பா கிரிக்கெட் பிளேயர்ஸோட எல்லாம் ஜாலியா பேசுவீங்க ‘ என்று சொல்வதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் கஷ்டப்படும் ஆத்மாக்கள் என்று உண்டென்றால் அது பத்திரிக்கை போட்டோகிராபர்கள்தான். கடந்த சனிக்கிழமை நடந்த தென் ஆப்ரிக்கா-ஜிம்பாப்வே பயிற்சி ஆட்டத்துக்கு நாங்களெல்லாம் நேரடியாய் நுழைந்துவிட்டோம். ஆனால் போட்டோகிராபர்கள் பாவம். ஐ.சி.சி. நியமித்த மீடியா கோ ஆர்டினேட்டரான ஒரு பெண்ணின் வகுப்பை ஒவ்வொரு போட்டியன் றும் ஒரு மணிநேரம் அட்டெண்ட் செய்யவேண்டும் என்பது விதியாம். அதோடு மைதானத்தில் போட்டி நடக்கும்போது ஒரு இடத்தில் உட்கார வேண்டும், லெதர்கோட் அணிந்துதான் உள்ளே செல்ல வேண்டும் என்றெல்லாம் ஏக கெடுபிடி.அவ்ர்கள் வெயிலில் வேர்க்கவைக்கும் கோட் அணிந்து நிற்கும்போது நாங்கள் ஏசி பாக்ஸில் பெப்ஸி குடிக்கும்போது வருத்தம் நெஞ்சம் கொஞ்சம் கனக்கிறது

No comments:

Post a Comment