Powered By Blogger

Tuesday, February 14, 2012

’சிங்”கம் கர்ஜிக்கட்டும்



இந்திய கிரிக்கெட்டுக்கு இது மிகவும் சோதனைக் காலம். ஆஸ்திரேலிய அணியியிடம் இருந்து இந்திய அணி அடிமேல் அடி வாங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும்விட ஒரு பெரிய அடியை இந்தியக் கிரிக்கெட்டுக்கு புற்றுநோய் கொடுத்திருக்கிறது. இக்கட்டான நேரத்தில் எல்லாம் அணியைக் காப்பாற்ற வல்லமை படைத்த யுவராஜ் சிங்குக்கு நுரையீரலில் புற்றுநோயாம்! அணிக்காக போராடவேண்டியவி இப்போது புற்றுநோயோடு போராடிக்கொண்டிருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்களில் இரண்டு வகை உண்டு. தனக்காக ஆடி சாதனைகளைக் குவித்து அணியைப் பற்றி கவலைப்படாத வீரர்கள் ஒருவகை. சாதனைகளைப் பற்றியே கவலைப்படாமல் அணிக்கு தேவையான நேரத்தில் தேவையானவற்றை செய்யும் வீரர்கள் மற்றொரு வகை. இதில் யுவராஜ் சிங் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

 இந்திய அணி உலகக் கோப்பையையும், 20 ட்வென்டி கோப்பையையும் வென்றபோது அந்த இரண்டு தொடர்களிலும் யுவராஜ்தான் தொடர் நாயகன். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்ததைத் தவிர அவருக்கென்று சொல்லிக்கொள்ள சாதனைகள் ஏதுமில்லை. அணியின் வெற்றிகள்தான் அவரது கனவு. தன்னைவிட ஜூனியரான டோனியின் தலிமையில் ஆடுமாறு கிரிக்கெட் வாரியம் கூறியபோதும் ஒரு முணுமுணுப்புகூட இல்லாமல் அதை ஏற்றுக்கொண்ட வீரர் யுவராஜ் சிங். இந்த பக்குவத்துக்கு காரணம் தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதாக அவருக்கு கொடுத்த வாக்குறுதி.

யுவராஜின் அப்பா யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரைதான். ஹரியானாவைச் சேர்ந்த இவர் கபில்தேவுக்கு இணையாக வேகப்பந்தில் கலக்கியவர். இருவரும் ஒரே சமயத்தில் வாய்ப்புதேடி கிரிக்கெட் வாரியத்தின் கதவுகளைத் தட்டினர். இருவரில் கபில்தேவுக்கு முதலில் வாய்ப்பளித்த தெர்ர்வுக்குழு யோக்ராஜை மட்டும் காக்கவைத்தது. அதற்கு காரணம் தேர்வுமுறை.

ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் குறிப்பிட்ட சில வீரர்கலை மட்டுமே தேர்ந்தெடுப்பது என்ற விதிமுறையை கிரிக்கெட் வாரியம் அப்போது வைத்திருந்தது.70களின் இறுதியில் கபில்தேவ் அணிக்குள் நுழைய வடக்கு மண்டலத்துக்கான கோட்டா முடிந்தது. அதனால் யோக்ராஜ் காக்க வைக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டுகளில் சிறப்பாக அடியதால் அவருக்கு வாய்பலித்தே ஆகவேண்டிய நிலை. அதனால் போனால் போகிறதென்று  1981ல் ஒரு டெஸ்ட் மேட்சில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் டெஸ்ட்டில் எந்த வீரருக்கும் ஒரு பதட்டம் வருவது இயற்கைதானே? அது யோக்ராஜுக்கும் வந்தது. அவரால் அந்த டெஸ்டில் ஒரு விகெட்டை மட்டுமே எடுக்கமுடிந்தது. இதுதான் சமயமென்று கிரிக்கெட் வாரியம் அவரைக் கழற்றிவிட முதல் டெஸ்டே அவருக்கு கடைசி டெஸ்ட் ஆனது.

துவண்டு போனார் யோனார் யோக்ராஜ் சிங். இந்திய அணியில் இடமில்லாததால் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து அதன் விசையை அழுத்த முயன்றபோதுதான் மகன் யுவராஜ் சிங்கின் படம் கண்ணில் பட்டுள்ளது. தன்னால் முடியாததை தன் மகனை வைத்து முடிப்பேன் என்று சவால் விட்டுல்லார் யோக்ராஜ் சிங். மகனுக்கு தானே பவுலிங் போட்டு பயிற்சியளித்துள்ளார்

சிறுவயதில் கிரிக்கெட்டுக்கு இணையாக ரோலார் ஸ்கேட்டிங்கிலும் ஆர்வமாக இருந்துல்லார் யுவராஜ் சிங். ஒருமுறை பள்ளியில் நடந்த ரோலார் ஸ்கேட்டிங் விளையாட்டில் யுவராஜுக்கு முதல்பரிசாக வெள்ளிக்கோப்பை கிடைக்க அதை ஆசையோடு அப்பாவிடம் காட்டியிருக்கிறார். தான் எதிலும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்பும் தந்தை கோப்பையைப் பார்த்தால் தன்னை உச்சி முகர்ந்து பாராட்டுவார் என்று அவர் எதிர்பாத்திருந்தார். ஆனால் அதற்கு நேர் எதிராக அந்த கோப்பையையும், ரோலார் ஸ்கேட்டிங் ஷூவையும் தெருவில் வீசியிருக்கிறார் யோக்ராஜ் சிங்.

‘‘கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. படிப்புகூட எனக்கு இரண்டாம் பட்சம்தான்.’’ என்று யுவராஜுக்கு அவர் கட்டளை இட்டுல்ளார். அன்று முதல் யுவராஜுக்கு வாழ்க்கையே கிரிக்கெட் என்றாகிப் போனது. வீட்டில் இருந்தால் அம்மா செல்லம் கொடுத்து கெடுத்துவிடுவார் என்று சண்டிகரில் முன்னால் சுழற்பந்து வீச்சாளர் பிஷன்சிங் பேடி நடத்திவந்த கிரிக்கெட் பயிற்சிமுகாமில் அவரை சேர்த்துவிட்டார். யுவராஜின் கிரிக்கெட் திறமைகள் அங்கே மெருகூட்டப்பட்டது.

19 வயதிலேயே ஒரு இளம் புயலாக 2000_ம் ஆண்டில் இந்திய அணிக்குள் நுழைந்தார் யுவராஜ். உள்ளூரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஜெயிக்கும் இந்திய அணி எப்போதும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் தோற்பது 2001ம் ஆண்டுவரை சகஜமாக இருந்தது. அதற்கு காரணம் அங்குள்ள பிட்சுகள். சாதாரணமாக இந்திய பிட்சுகலில் ஒரு பந்துவீச்சாளர் என்னதான் அழுத்தம் கொடுத்து பந்துவீசினாலும் அது பேட்ஸ்மேனின் முட்டிக்கு கீழேதான் எழும்பும். ஆனால் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள கிரிக்கெட் பிட்சுகளில் பந்துகள் பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே எழும்பும். இதை சமாளிக்கத் தெரியாமல் இந்திய வீரர்கள் எளிதில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிவிடுவார்கள். ஆனால் யுவராஜ் இந்திய அணியில் தடம் பதித்த பிறகு அது முடிவுக்கு வந்தது. இடுப்புக்கு மேலே பந்து வீசினால் அதைத் துணிந்து சிக்சருக்கு விரட்டுவது யுவராஜின் பாணி. இவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ற வீரர்கலௌம் இதைக் கையாள வெளிநாடுகளில் இந்தியா ஜெயிக்கத் தொடங்கியது. கிரிக்கெட்டில் வீழ்த்தமுடியாதவராக கருதப்பட்ட யுவராஜுக்கு காதலிகளும் குவிந்தனர். தீபிகா படுகோன், மந்திரா பேடி, ப்ரீத்தி ஜிந்தா என்று பலருடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் ஒரு காதல் மன்னனாகவும் வலம்வந்தார்.

யுவராஜ் வளர வளர ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியாவின் புகழும் வளர்ந்தது. நேட்வெஸ்ட் தொடர், 20 ட்வென்டி உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை என்று இந்தியா சாம்பியன்பட்டங்களாக அள்ளியது. ஒர்நாள் போட்டிக்கான சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்குக்கு தொடர் நாயகன் பட்டமும் கிடைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. உலக்கக் கோப்பையை இந்தியா வென்ற ஒரு வாரத்திலேயே இரவு நேரங்களில் இருமலால் பாதிக்கப்பட்டார் யுவராஜ் சிங். மருத்துவ பரிசோதனை செய்ய வீட்டில் வற்புறுத்தியபோது கேட்கவில்லை. உலகக் கோப்பையைத் தொடர்ந்துவந்த ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கப் போய்விட்டார்.

 ஆனால் நோயின் கடுமை அவரை ஒழுங்காக ஆட விடவில்லை. மூச்சிறைக்கத் தொடங்கியது. டாக்டரிடம் சென்றபோது அவரது நுரையீரலில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனாலதான் இருமல் வருவதாகவும் கண்டறியப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு நடுவிலும் கிரிக்கெட் போட்டிகலில் விளையாடுவதை யுவராஜ் நிறுத்தவில்லை. ஆனால் நோயின் கடுமையால் அவரால் முன்போல சிறப்பாக பீல்டிங் செய்ய முடியவில்லை.
‘‘இருமலுக்காக பல ஊசிகள் போடுவதால் அவன் கைகளின் நரம்புகள் அதிக வலியைக் கொடுத்தன உடம்பும் கொஞ்சம் ஊதிவிட்டது. அதனால் அவன் வலிகளுடன்தான் போட்டிகளில் ஆடப்போவான். அதனாலேயே அவனால் சரியாக பீல்டிங் செய்ய முடியவில்லை. ஏற்கனவே ‘பார்ட்டி பாய்’ என்று முத்திரை குத்தப்படிருந்த யுவராஜ் சிங் உலகக் கோப்பைக்குப் பின் ஏராளமான பார்ட்டிகளில் கலந்துகொள்வதாகவும், அதனாலேயே பீல்டிங்கில் அவர் வேகம் குறைந்துவிட்டதாகவும் பத்திரிகைகள் எழுதின. இது உடல் வலியை விட அதிகமாக யுவராஜை சோர்வாக்கியது’’ என்று கூறுகிறார் அவரது தாய் ஷப்னம் சிங்
. இந்நேரத்தில் அந்த கட்டி புற்றுநோயின் ஆரம்ப நிலை என்று டாக்டர்கள் சொல்ல உடைந்துபோய்விட்டார் யுவராஜ்.உற்சாகமான மனிதராக நம் கண்முன் வளையவந்த யுவராஜ் தனக்கு வந்த நோயை நினைத்து வருந்தி பல நாட்கள் அறையிலேயே முடங்கிக் கிடந்ததாக அவரது தாய் கூறுகிறார். இது ஆரம்ப நிலையில் இருப்பதால் 10 வாரங்களுக்கு கீமோதெரபி செய்தாலே குணப்படுத்தலாம் என்று டாக்டர்கள் தைரியம் சொல்ல இப்போது அமெரிக்கா சென்றிருக்கிறார் யுவராஜ் சிங்.

‘‘பிரபல சைக்கிள் பந்தய வீரர் லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்கிற்கு புற்றுநோய் வந்தபோது அவரை குணப்படுத்திய டாக்டர்தான் இப்போது யுவராஜ் சிங்கிற்கும் சிகிச்சை அளித்து வருகிறர். புற்றுநோயை வென்று உலக சைக்கிள் சாம்பியனாக பட்டம் வென்ற ஆம்ஸ்ட்ராங்கின் வரலார்றை அவன் படித்து வருகிறான். அதேபோல் தானும் மீண்டுவந்து ஜெயிப்பேன் என்று யுவராஜ் உறுதியாகப் பேசுகிறான் என் மகன் ஒரு சிங்கம். எந்த ஒரு சவாலையும் மீண்டு வரும் திறமை அவனுக்கு உண்டு. இந்த சவாலையும் அவன் நிச்சயம் மீண்டுவருவான். அந்த நம்பிக்கையுடன் காத்திருப்போம்’’ என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார் யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் பேட்டி கொடுத்துள்ளார்.
நமக்கு வேண்டியதும் அதுதான். யுவராஜ் சிங்கம் மீண்டும் கர்ஜிக்கட்டும்.

No comments:

Post a Comment