“ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நாளை நீ ஆடப் போகிறாய். உன்னிடமிருந்து 5 விக்கெட்களையாவது நான் எதிர்பார்க்கிறேன்” - தர்மசாலாவில் உள்ள ஓட்டல் அறையில் குல்தீப் யாதவைப் பார்த்து இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியபோது இரவு மணி 10.
“நீங்கள் நினைப்பதுபோல் நிச்சயமாக செயல்படுவேன்” என்று கும்ப்ளேவை வழியனுப்பி வைத்தாலும் குல்தீப்பின் மனது அடித்துக்கொண்டு இருந்தது. “எத்தனை நாட்களாக காத்திருந்து கிடைத்த வாய்ப்பு இது. இதை நாம் நிச்சயமாக தவற விடக் கூடாது” என்று அவரது மனம் சொன்னது. கண்கள் தூக்கத்தை இழந்தன. புரண்டு புரண்டு படுத்தவர், அதிகாலை 3 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்தார். விடியலை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவரது மனது தூங்க மறுத்தது. பந்தை எடுத்தார். பாதுகாப்பு விதிப்படி வெளியே செல்லக்கூடாது என்பதால் தனது கட்டிலிலேயே பந்தை வீசி பயிற்சியைத் தொடங்கினார். அடுத்த நாள் காலை களம் புகுந்தவர், தன் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 68 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இப்படி முதல் போட்டிக்கு முன்தினம் இரவு தூக்கம் இல்லாமல் பயிற்சி செய்தவர்தான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்கள் பலரை தூக்கமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். குல்தீப் யாதவின் வெற்றிகளுக்கு அவரது பயிற்சியாளர் கபில்தேவ் பாண்டேவும் ஒரு முக்கிய காரணம். வேகப்பந்து வீச்சாளராக தன்னிடம் பயிற்சி பெற வந்த குல்தீப் யாதவை ஒரு சுழற்பந்து வீச்சாளராக மாற்றிக் காட்டியவர் அவர்தான்.
இதுபற்றி கூறும் கபில்தேவ் பாண்டே, “குல்தீப் யாதவுக்கு வாசிம் அக்ரமை மிகவும் பிடிக்கும். அவரைப் போல் தானும் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளனுக்கு ஏற்ற உடல் வலிமை குல்தீப் யாதவிடம் இல்லை என்பதை நான் கண்டுகொண்டேன். அதனால் அவனை ஒரு சுழற்பந்து வீச்சாளராக்க முடிவு செய்தேன். இதுபற்றி கூறியதும் குல்தீப் யாதவ் என்னிடம் கோபம் கொண்டான். பின்னர் அரைமனதாக ஒப்புக்கொண்டான். அதன் பிறகும் நான் இல்லாத நேரங்களில் அவன் வேகப்பந்து வீசி பயிற்சி செய்திருக்கிறான். காலம் செல்லச் செல்ல அவனுக்கு சுழற்பந்து வீச்சு பிடித்துப் போனது.
சுழற்பந்து வீச்சாளராக அவன் வீசிய முதல் பந்தே ஒரு சைனா மேன் பந்துதான். அவனிடம் இப்படி ஒரு ஆற்றல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பிரமித்துப் போய்விட்டேன். பின்னர் தொடர்ந்து அதே முறையில் பந்து வீசச் சொல்லி அவனை உற்சாகப்படுத்தினேன். அவனிடம் உள்ள நல்ல குணமே, ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதை உடனடியாக கற்றுக்கொள்வான். அடுத்த நாளைக்கு தள்ளிப் போட மாட்டான்” என்கிறார் கபில்தேவ் பாண்டே.
வேகப்பந்து வீச்சில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு மாறியதும் குல்தீப் யாதவின் கண்கள், அக்ரமை விட்டு ஷேன் வார்னேவை பார்க்கத் தொடங்கிவிட்டது. வார்னேயின் பந்து வீச்சு வீடியோக்களை தொடர்ந்து பார்க்கத் தொடங்கினார் குல்தீப் யாதவ். தனது பந்து வீச்சு முறையில் தவறு இருப்பதுபோல தோன்றும்போதெல்லாம், அவரது வீடியோக்கள்தான் குல்தீப்புக்கு பாடம் நடத்தியுள்ளன.
பந்துவீச்சில் குல்தீப் யாதவுக்கு உள்ள ஆற்றலைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ், 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தங்கள் அணியில் அவரைச் சேர்த்துக்கொண்டது. ஆனால் ஒரு போட்டியில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தளர்ந்து போகாத குல்தீப், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார். இந்த நேரத்தில்தான் 2014-ம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட குல்தீப் யாதவ், 6 போட்டிகளில் 14 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதில் ஒரு போட்டியில் ஹாட்ரிக் சாதனையும் படைத்தார்.
இந்த சாதனையைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த அணியில் ஏற்கெனவே சுனில் நரைன், பிராட் ஹாக், யூசுப் பதான் ஆகிய ஜாம்பவான்கள் இருந்ததால் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரும் அதைப்பற்றி வருத்தப்படவில்லை. தனது வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருந்தார்.
கொல்கத்தா அணியில் இணைந்த பிறகு, வார்னேயின் வீடியோக்கள் செய்ததை பிராட் ஹாக் செய்தார். கொல்கத்தா அணியின் சீனியர் பந்துவீச்சாளரான பிராட் ஹாக்கிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கினார் குல்தீப் யாதவ். இதுபற்றி பேட்டி ஒன்றில், “பந்துவீச்சு பயிற்சியில் 50 சதவீதத்தை நான் வார்னேவிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றால், மீதிப் பாதியை பிராட் ஹாகிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். இப்போதுகூட அடிக்கடி ஸ்கைப் மூலம் ஹாகைத் தொடர்புகொண்டு என் சந்தேகங்களை தீர்த்துக் கொள்கிறேன். வார்னேவிடம் இருந்து ரிஸ்ட் பந்து வீச்சையும், ஹாகிடம் இருந்து சைனா மேன் பந்துவீச்சு நுணுக்கங்கங்களையும் நான் கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.
பிராட் ஹாக் என்றில்லை தன்னைவிட மூத்த பந்து வீச்சாளர்கள் யாரை சந்தித்தாலும், அவர்களிடம் இருந்து பந்து வீச்சு நுணுக்கத்தை கற்றுக்கொள்ள குல்தீப் யாதவ் தயங்குவதில்லை. அவருடைய அந்த வேட்கைதான் இறு உலகமே கண்டு பயப்படும் அளவுக்கு ஒரு சிறந்த பந்து வீச்சாளராக அவரை மாற்றியுள்ளது.
2016-ம் ஆண்டு கொல்கத்தா அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மாறிய குல்தீப் யாதவ், துலீப் கோப்பை கிரிக்கெட்டிலும் தடம் பதித்து 3 போட்டிகளில் 17 விக்கெட்களை அள்ளினார். அது இந்திய அணியில் இணைய குல்தீப்புக்கு பாதை வகுத்துக் கொடுத்தது. இந்திய அணியில் சேர்ந்த பிறகு கும்பிளேவால் பட்டை தீட்டப்பட்டு இன்று நட்சத்திர பந்து வீச்சாளராக மின்னுகிறார்.
குல்தீப்பின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் சாஹல். பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான கூட்டணி எப்படி ஒரு அணியின் ரன்கள் உயர முக்கிய காரணமாக இருக்குமோ, அதேபோல் பந்து வீச்சாளர்கள் இடையிலான கூட்டணி, எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை சாஹலும், குல்தீப் யாதவும் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். ஒருவரைப் பற்றி மற்றவர் நன்றாக புரிந்துகொண்டுள்ளதால் மைதானத்தில் இணைந்து செயல்பட்டு எதிரணிகளை மிரட்டி வருகிறார்கள். இந்த நட்சத்திர ஜோடியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
“நீங்கள் நினைப்பதுபோல் நிச்சயமாக செயல்படுவேன்” என்று கும்ப்ளேவை வழியனுப்பி வைத்தாலும் குல்தீப்பின் மனது அடித்துக்கொண்டு இருந்தது. “எத்தனை நாட்களாக காத்திருந்து கிடைத்த வாய்ப்பு இது. இதை நாம் நிச்சயமாக தவற விடக் கூடாது” என்று அவரது மனம் சொன்னது. கண்கள் தூக்கத்தை இழந்தன. புரண்டு புரண்டு படுத்தவர், அதிகாலை 3 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்தார். விடியலை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவரது மனது தூங்க மறுத்தது. பந்தை எடுத்தார். பாதுகாப்பு விதிப்படி வெளியே செல்லக்கூடாது என்பதால் தனது கட்டிலிலேயே பந்தை வீசி பயிற்சியைத் தொடங்கினார். அடுத்த நாள் காலை களம் புகுந்தவர், தன் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 68 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இப்படி முதல் போட்டிக்கு முன்தினம் இரவு தூக்கம் இல்லாமல் பயிற்சி செய்தவர்தான் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்கள் பலரை தூக்கமில்லாமல் செய்துகொண்டிருக்கிறார். குல்தீப் யாதவின் வெற்றிகளுக்கு அவரது பயிற்சியாளர் கபில்தேவ் பாண்டேவும் ஒரு முக்கிய காரணம். வேகப்பந்து வீச்சாளராக தன்னிடம் பயிற்சி பெற வந்த குல்தீப் யாதவை ஒரு சுழற்பந்து வீச்சாளராக மாற்றிக் காட்டியவர் அவர்தான்.
இதுபற்றி கூறும் கபில்தேவ் பாண்டே, “குல்தீப் யாதவுக்கு வாசிம் அக்ரமை மிகவும் பிடிக்கும். அவரைப் போல் தானும் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று விரும்பினான். ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளனுக்கு ஏற்ற உடல் வலிமை குல்தீப் யாதவிடம் இல்லை என்பதை நான் கண்டுகொண்டேன். அதனால் அவனை ஒரு சுழற்பந்து வீச்சாளராக்க முடிவு செய்தேன். இதுபற்றி கூறியதும் குல்தீப் யாதவ் என்னிடம் கோபம் கொண்டான். பின்னர் அரைமனதாக ஒப்புக்கொண்டான். அதன் பிறகும் நான் இல்லாத நேரங்களில் அவன் வேகப்பந்து வீசி பயிற்சி செய்திருக்கிறான். காலம் செல்லச் செல்ல அவனுக்கு சுழற்பந்து வீச்சு பிடித்துப் போனது.
சுழற்பந்து வீச்சாளராக அவன் வீசிய முதல் பந்தே ஒரு சைனா மேன் பந்துதான். அவனிடம் இப்படி ஒரு ஆற்றல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பிரமித்துப் போய்விட்டேன். பின்னர் தொடர்ந்து அதே முறையில் பந்து வீசச் சொல்லி அவனை உற்சாகப்படுத்தினேன். அவனிடம் உள்ள நல்ல குணமே, ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதை உடனடியாக கற்றுக்கொள்வான். அடுத்த நாளைக்கு தள்ளிப் போட மாட்டான்” என்கிறார் கபில்தேவ் பாண்டே.
வேகப்பந்து வீச்சில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு மாறியதும் குல்தீப் யாதவின் கண்கள், அக்ரமை விட்டு ஷேன் வார்னேவை பார்க்கத் தொடங்கிவிட்டது. வார்னேயின் பந்து வீச்சு வீடியோக்களை தொடர்ந்து பார்க்கத் தொடங்கினார் குல்தீப் யாதவ். தனது பந்து வீச்சு முறையில் தவறு இருப்பதுபோல தோன்றும்போதெல்லாம், அவரது வீடியோக்கள்தான் குல்தீப்புக்கு பாடம் நடத்தியுள்ளன.
பந்துவீச்சில் குல்தீப் யாதவுக்கு உள்ள ஆற்றலைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ், 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தங்கள் அணியில் அவரைச் சேர்த்துக்கொண்டது. ஆனால் ஒரு போட்டியில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தளர்ந்து போகாத குல்தீப், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார். இந்த நேரத்தில்தான் 2014-ம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட குல்தீப் யாதவ், 6 போட்டிகளில் 14 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதில் ஒரு போட்டியில் ஹாட்ரிக் சாதனையும் படைத்தார்.
இந்த சாதனையைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த அணியில் ஏற்கெனவே சுனில் நரைன், பிராட் ஹாக், யூசுப் பதான் ஆகிய ஜாம்பவான்கள் இருந்ததால் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரும் அதைப்பற்றி வருத்தப்படவில்லை. தனது வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருந்தார்.
கொல்கத்தா அணியில் இணைந்த பிறகு, வார்னேயின் வீடியோக்கள் செய்ததை பிராட் ஹாக் செய்தார். கொல்கத்தா அணியின் சீனியர் பந்துவீச்சாளரான பிராட் ஹாக்கிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கினார் குல்தீப் யாதவ். இதுபற்றி பேட்டி ஒன்றில், “பந்துவீச்சு பயிற்சியில் 50 சதவீதத்தை நான் வார்னேவிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றால், மீதிப் பாதியை பிராட் ஹாகிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். இப்போதுகூட அடிக்கடி ஸ்கைப் மூலம் ஹாகைத் தொடர்புகொண்டு என் சந்தேகங்களை தீர்த்துக் கொள்கிறேன். வார்னேவிடம் இருந்து ரிஸ்ட் பந்து வீச்சையும், ஹாகிடம் இருந்து சைனா மேன் பந்துவீச்சு நுணுக்கங்கங்களையும் நான் கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.
பிராட் ஹாக் என்றில்லை தன்னைவிட மூத்த பந்து வீச்சாளர்கள் யாரை சந்தித்தாலும், அவர்களிடம் இருந்து பந்து வீச்சு நுணுக்கத்தை கற்றுக்கொள்ள குல்தீப் யாதவ் தயங்குவதில்லை. அவருடைய அந்த வேட்கைதான் இறு உலகமே கண்டு பயப்படும் அளவுக்கு ஒரு சிறந்த பந்து வீச்சாளராக அவரை மாற்றியுள்ளது.
2016-ம் ஆண்டு கொல்கத்தா அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மாறிய குல்தீப் யாதவ், துலீப் கோப்பை கிரிக்கெட்டிலும் தடம் பதித்து 3 போட்டிகளில் 17 விக்கெட்களை அள்ளினார். அது இந்திய அணியில் இணைய குல்தீப்புக்கு பாதை வகுத்துக் கொடுத்தது. இந்திய அணியில் சேர்ந்த பிறகு கும்பிளேவால் பட்டை தீட்டப்பட்டு இன்று நட்சத்திர பந்து வீச்சாளராக மின்னுகிறார்.
குல்தீப்பின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் சாஹல். பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான கூட்டணி எப்படி ஒரு அணியின் ரன்கள் உயர முக்கிய காரணமாக இருக்குமோ, அதேபோல் பந்து வீச்சாளர்கள் இடையிலான கூட்டணி, எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை சாஹலும், குல்தீப் யாதவும் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். ஒருவரைப் பற்றி மற்றவர் நன்றாக புரிந்துகொண்டுள்ளதால் மைதானத்தில் இணைந்து செயல்பட்டு எதிரணிகளை மிரட்டி வருகிறார்கள். இந்த நட்சத்திர ஜோடியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
No comments:
Post a Comment