Powered By Blogger

Saturday, January 25, 2020

விளையாட்டை தெரிந்துகொள்ளுங்கள் - வாலிபால்


1892-ம் ஆண்டுஸ்பிரிங்பீல்ட் கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டை  ஜேம்ஸ் நைஸ்மித் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில்அக்கல்லூரியில் மாவராக இருந்தார் வில்லியம் ஜி.மோர்கன்மற்ற மாவர்கள் எல்லோரும் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமாக ஈடுபடமோர்கனுக்கு அதில் அதிக விருப்பம் இல்லாமல் இருந்ததுஇவ்விளையாட்டில் மாணவர்கள் பந்தை கடத்திச் செல்லும் சமயங்களில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாலும்இவ்விளையாட்டை ஆட மாணவர்கள் அதிக ஆற்றலை வெளிப்படுத்த வேண்டியிருந்ததாலும், கூடைப்பந்து ஆட்டத்தை அவர் விரும்பவில்லை. மாணவர்கள் அதிக அளவில் ஆற்றலை செலவழிக்காமல்அதே நேரத்தில் அவர்களின் உடற்பயிற்சிக்கு உதவும் வகையில் ஒரு விளையாட்டை உருவாக்க விரும்பினார்.
 பின்னர் தே கல்லூரியில் இவர் விளையாட்டுத் துறை ஆசிரியராக சேர்ந்ததும், உள் விளையாட்டு அரங்கில் ஆடும் புதிய விளையாட்டை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தினார்அப்படி நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அவர் கண்டுபிடித்த விளையாட்டுதான் வாலிபால்கூடைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்துடென்னிஸ் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வலைகைப்பந்து விளையாட்டில் இருந்து கைகளைப் பயன்படுத்தும் முறை மற்றும் பேஸ்பால் விளையாட்டில் இருந்து சில விதிகள் என பல விளையாட்டுகளில் இருந்து சிற்சில விஷயங்களை கடன்வாங்கிஅவற்றை ஒன்றாக கலந்து  1895-ம் ஆண்டில் அவர் வாலிபால் விளையாட்டை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் ‘மிண்டோனெட்’ என்று பெயரிடப்பட்ட இந்த விளையாட்டுமிகக்குறைந்த நாட்களிலேயே கல்லூரி மாணவர்களிடமும்ஒய்எம்சிஏ அங்கத்தினரிடமும் பிரபலமடைந்தது. பின்னாளில் ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர். ஆல்பிரட் ஹல்ஸ்டெட்இவ்விளையாட்டுக்கு ‘வாலிபால்’ என்று பெயரிட்டார் ஆரம்பத்தில் இவ்விளையாட்டில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விதிகளெல்லாம் இல்லைவலையில் இருபுறமும் ஆடும் அணிகளில் எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலைதான் இருந்ததுஇதனால் இவ்விளையாட்டை ஒரே நேரத்தில் பலரும் ஆடினார்கள் 
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வந்த வாலிபால், 1913-ம் ஆண்டில் ஆசியாவுக்குள் அடியெடுத்து வைத்ததுதொடக்கத்தில் இங்கு நடந்த வாலிபால் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் தலா 16 வீரர்கள் இடம்பெற்னர்.  1916-ம் ஆண்டில் வாலிபால் விளையாட்டுக்கென  விதிகள் வகுக்கப்பட்டனமற்ற நாடுகளில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வாலிபால் போட்டிகள் தொடங்கியபோதிலும்இந்தியாவில் 1951-ம் ஆண்டு இந்திய வாலிபால் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட பிறகே இந்த ஆட்டம் பிரபலமடைந்தது.
திருத்தப்பட்ட விதிகளின் கீழ் வாலிபால் விளையாட்டில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைக் கொண்டிருக்கலாம்இதில் 3 வீரர்கள் முன்வரிசையிலும், 3 வீரர்கள் பின்வரிசையிலும் இருக்க வேண்டும்தேவைப்பட்டால் ஆட்டத்தின்போது  வெளியில் உள்ள உபரி வீரர்களை மாற்று வீரர்களாக களத்தில் இறக்கலாம் வாலிபால் போட்டிகள் 3 செட்களைக் கொண்டதாக இருக்கும் முதல் 2 செட்களில் 25 புள்ளிகளை முதலில் எட்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்இரு அணிகளும் தலா ஒரு செட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் 15 புள்ளிகளைக் கொண்ட 3-வது செட் போட்டி நடத்தப்படும்.
1964-ம் ஆண்டுமுதல் வாலிபால் விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் ஆடப்பட்டு வருகிறதுஅமெரிக்காரஷ்யாபிரேசில் ஆகிய நாடுகள் இப்போட்டியில் அதிக முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.
  



  

இந்தியன் நெம் 1: இந்தியாவின் முதல் பெண் டாக்டர்



பெண்கள் கல்வி கற்பது இன்றைக்கு வேண்டுமென்றால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கைகள் மிகுந்த 19-ம் நூற்றாண்டில் இது மிகவும் கடினமான காரியம். இந்த காலகட்டத்திலேயே மருத்துவம் படித்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆனந்தி கோபால் ஜோஷி.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே நகரில், வசதியான குடும்பத்தில் 1865-ம் ஆண்டு பிறந்தவர் யமுனா. அவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக நிலச்சுவான்தார்களாக இருந்துள்ளனர்.  ஆனால் ஆங்கிலேய அரசு விதித்த கடுமையான வரிகளால், கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் செல்வத்தை இழந்த யமுனாவின் குடும்பம், அவர் பிறந்த சில ஆண்டுகளேயே ஏழ்மை நிலையை எட்டியது. இந்நிலையில் யமுனாவுக்கு 9 வயதாக இருந்தபோது, அவரைவிட 21 வயது மூத்தவரான கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் அக்காலத்தில் திருமணத்துக்கு பிறகு பெண்களின் பெயரை மாற்றும் வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்தின்படி யமுனாவின் பெயர் ஆனந்தி கோபால் ஜோஷி என்று மாற்றப்பட்டது.
தானே நகரில் இருந்த தபால் ஆபீஸில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார் கோபால் ஜோஷி. ஏற்கெனவே திருமணமாகி   மனைவியை இழந்தவரான கோபால் ஜோஷி, தன் புது மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். ஆனந்திக்கு படிப்பில் அதிக ஆசை இருப்பதை அறிந்த கோபால் ஜோஷி, அவரை நன்றாகப் படிக்கவைத்தார்.
ஆனந்திக்கு 14 வயதில் ஒரு குழந்தை பிறந்துள்ளது., ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நோயுற்ற காரணத்தால், பிறந்த 10 நாட்களிலேயே அந்த குழந்தை இறந்துள்ளது. குழந்தையை இழந்த ஆனந்தியும், அவரது கணவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் தங்கள் குழந்தை பிழைத்திருக்குமே என்று சொல்லிச் சொல்லி அழுது தீர்த்தனர்.
இந்த சமயத்தில் ஆனந்தியின் மனதில் ஒரு ஆசை எழுந்துள்ளது. தனக்கு நேர்ந்ததைப் போல் மற்றவர்களுக்கு நேராமல் இருக்க, தானே ஒரு டாக்டராக வேண்டும் என்பதே அந்த ஆசை.   இந்த ஆசையை தயக்கத்துடன் தன் கணவரிடம் கூறியுள்ளார் ஆனந்தி.
 மனைவியின் விருப்பத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அவரது தோளை ஆதரவாகப் பற்றியுள்ளார்  கோபால் ஜோஷி. “உனக்கு டாக்டர் ஆகவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதற்கு தேவையான தகுதி உனக்கு உள்ளது என்று நம்பினால் மேற்கொண்டு படி. உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்” என்று கூறியுள்ளார் கோபால் ஜோஷி. அத்துடன் தன் மனைவி டாக்டருக்கு படிக்க தேவையான நடவடிக்கைகளையும்  எடுத்துள்ளார்.
ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்கவைக்க திட்டமிட்ட கோபால், அதற்கு உதவுமாறு கூறி அமெரிக்கன் மெஷினரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதிக்க, மனைவியை ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது உறவினர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட நம் சமூகத்தில் ஆண்களே கடல்தாண்டி போகக்கூடாது என்று கூறுவார்கள். இந்த சூழலில் பெண்ணான உன் மனைவியை எப்படி கடல் கடந்து அனுப்பலாம்” என்று பலரும் கோபால் ஜோஷியை எதிர்த்துள்ளனர். ஆனால் இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்பினார் கோபால் ஜோஷி. அவரும் கனவுகளை சுமந்தபடி கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு கப்பலில் புறப்பட்டு சென்றார் ஆனந்தி.
அமெரிக்காவுக்கு சென்ற ஆனந்திக்கு, பென்ஸில்வேனியா நகரில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்தியாவில் இருந்த காலகட்டத்திலேயே அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் ஆனந்தி. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள குளிர்ச்சியான சீதோஷண நிலை அவரது உடல்நிலையை மேலும் பாதித்தது. அங்கு அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் படிப்பை அவர் கைவிடவில்லை. நோயுடன் போராடியவாறே அவர் மருத்துவப் படிப்பை முடித்தார்.
இந்தியாவைச் சேர்த்த பெண் ஒருவர் முதன்முதலாக மருத்துவப் படிப்பை முடித்தது அந்நாளில் மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்டது.   ஆனந்தியை பாராட்டி, பல்வேறு பத்திரிகைகளும் கட்டுரைகளை வெளியிட்டன. ஆனந்தியைப் பற்றியும், அவரது சாதனையைப் பற்றியும் கேள்விப்பட்ட விக்டோரியா மகாராணி,  பால கங்காதர திலகர் ஆகியோர் அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.  
அமெரிக்காவில் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில் 1886-ம் ஆண்டு, ஆனந்தி இந்தியாவுக்கு திரும்பினார். துறைமுகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஆனந்திக்கு கோலாப்பூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் வேலை கிடைத்தது. இந்த மருத்துவமனையில் சேர்ந்து ஏராளமான இந்தியர்களுக்கு மருத்துவம் பார்க்க ஆர்வமாக இருந்தார் ஆனந்தி. ஆனால் இந்த சமயத்தில்தான் விதி விளையாடியது.
ஏற்கெனவே காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்தி, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சிறிது நாட்களிலேயே மேலும் மோசமாக பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தனது 22-வது பிறந்தநாளுக்கு ஒரு மாதம் முன்னதாக அவர் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவே கண்ணீர் சிந்தியது. இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால் காசநோய் காரணமாக இளம் வயதிலேயே, தன் கனவை நனவாக்க முடியாமல் அவர் உயிரிழந்தார்.
ஆனந்தி கோபால் ஜோஷி இளம் வயதில் மறைந்தாலும், ஏராளமான இந்தியப் பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக விளங்கினார். அவரைப் பின்பற்றி பலர் மருத்துவத் துறையில் நுழைந்து சாதனை படைத்துள்ளனர்.

வாழ்க்கைப் பாதை
இந்தியாவின் முதல் பெண் டாக்டரான ஆனந்தி கோபால் ஜோஷி, 1865-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பிறந்தார். 1883-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சென்ற அவர் அங்கு மருத்துவம் படித்து 1886-ல் இந்தியாவுக்கு திரும்பினார். ஏழைகளுக்கு இளம் இலவசமாக மருத்துவம் பார்ப்பதை லட்சியமாக கொண்டிருந்த ஆனந்தி, அது நிறைவேறாமலேயே தனது 21-வது வயதில் காலமானார். இந்தியாவில் காலமான அவரது அஸ்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இவரது வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் வந்துள்ளது. மகாராஷ்டிர அரசு இவரது பெயரில் பெல்லோஷிப் வழங்கி வருகிறது.  

இந்தியன் நெம் 1: தாதாசாகேப் பால்கே

 

 

  இந்தியர்களை ஒன்றிணைக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாக இன்று சினிமா விளங்குகிறது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியையே பிடிக்கும் அளவுக்கு சக்தி பெற்ற ஊடகமாக இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் படங்கள் இந்தியாவில் தயாராகி வருகின்றன. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிழல்தரும் ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கும் சினிமா உலகுக்கு விதைபோட்டவரான தாதா சாகேப் பால்கேவைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

நாசிக் நகருக்கு அருகில் உள்ள திரும்பகேஸ்வர் (Trimbakeshwar) எனும் ஊரில் 1870-ம் ஆண்டு பிறந்தவர் தாதாசாகேப் பால்கே.  மும்பையில் பள்ளிப் படிப்பையும், வடோதராவில் கல்லூரிப் படிப்பையும் முடித்த பால்கே, சூரத் நகரில் ஒரு புகைப்படக்காரராக தன்    வாழ்க்கையைத் தொடங்கினார். குஜராத்தின்  சூரத் நகரில்  மனைவி மற்றும்  மகனுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் பால்கே.   1899-ல்  சூரத் நகரில் பரவிய பிளேக் நோயில் பால்கேவின் மனைவியும் மகனும் உயிரிழக்க, சோகத்துடன் மும்பைக்கே திரும்பியுள்ளார்.

மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்த தாதா சாகேப் பால்கேவுக்கு, 1902-ம் ஆண்டில் அவரைவிட 19 வயது இளையவரான காவேரிபாய் என்பவரை  குடும்பத்தினர் மணமுடித்து வைத்துள்ளனர். தனக்கு விருப்பம் இல்லாதபோதிலும், மற்றவர்களின் வற்புறுத்தலால் இந்த திருமணத்துக்கு சம்மதித்துள்ளார் பால்கே.  மராத்திய வழக்கப்படி  திருமணத்துக்கு பிறகு காவேரிபாயின் பெயர் சரஸ்வதிபாய் என மாற்றப்பட்டுள்ளது. திருமணத்துக்கு பின் அகழ்வாராய்ச்சி மையத்தில், வேலை பார்த்துவந்த பால்கே, பின்னர் 1906-ல்  மேனாவலி என்ற  நகரில், ‘பால்கேஸ் ஆர்ட் அண்ட் பிரிண்டிங் வொர்க்ஸ்’ என்ற அச்சகத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர் போதிய லாபம் கிடைக்காததால் அதையும் மூடிவிட்டார். 

 1910-ம் ஆண்டு, ஈஸ்டர் தினத்தன்று பால்கேவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அன்றைய தினம் மும்பையில் உள்ள ‘அமெரிக்கா இந்தியா சினிமாட்டோகிராபி’ என்ற தியேட்டரில் இயேசுநாதரின் வாழ்க்கையை மையப்படுத்திய வெளிநாட்டு குறும்படம் ஒன்று திரையிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தைக் காண தனது மனைவி சரஸ்வதிபாயை அழைத்துச் சென்றுள்ளார் பால்கே. தியேட்டரில் தன் கண் எதிரே மனிதர்களின் பிம்பங்கள்  நகர்வதையும், ஓடுவதையும் மெய்மறந்து பார்த்துள்ளார் சரஸ்வதிபாய்.   படம் முடிந்த பிறகு, அந்த தியேட்டரின் புரொஜக்‌ஷன் ரூமுக்குள் காவேரிபாயை அழைத்துச் சென்ற பால்கே, படம் எப்படி திரையில் தெரிந்தது என்பதை விளக்கியுள்ளார். இதைக் கேட்டு அவர் வாய்பிளந்து நிற்க, “இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி? இதே போல ஒரு படத்தை நானும் எடுக்கப்போறேன்” என்று  தனது கனவை வெளிப்படுத்தி உள்ளார்.

பால்கேவின் இந்த முடிவை அவரது மனைவி வரவேற்றாலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர். இதனால் குடும்பத்தின் செல்வம்  கரைந்து போய்விடும் என்று எச்சரித்துள்ளனர். ஆனால் சினிமா எடுக்கும் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார் பால்கே.  இருப்பினும் அதை செயல்படுத்த பணம் வேண்டுமே...

இந்த நேரத்தில் அவருக்கு உதவ சரஸ்வதிபாய் முன்வந்தார். பிறந்த வீட்டில் இருந்து தான் கொண்டுவந்த நகைகள் அனைத்தையும் பால்கேவிடம் கொடுத்த அவர், அதை வைத்துக்கொண்டு ஐரோப்பாவுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். மனைவியின் நகையை விற்றுக் கிடைத்த பணத்தில், ஜெர்மனி சென்ற பால்கே, கேமரா மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை வாங்கியுள்ளார். பின்னர் லண்டன் சென்றவர், திரைப்படங்களை எடுப்பது பற்றிய நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துள்ளார்.

சினிமா பற்றிய நுணுக்கங்களை கற்றபோதிலும், அதற்குத் தேவையான கருவிகளை வாங்கி வந்தபோதிலும்  தாதா சாகேப் பால்கேவின் திரைப்படக் கனவு அத்தனை எளிதில் நனவாகவில்லை.   படம் தயாரிக்க போதுமான பணம் கிடைக்காததால் மிகவும் கஷ்டப்பட்டார் பால்கே. கடைசியில்  தன் சொத்துகளையும், மனைவின் சொத்துகளையும் விற்று சினிமா எடுக்கும்  பணிகளைத் தொடங்கியுள்ளார்.

அடுத்தகட்டமாக நடிகர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. போட்டோ எடுத்தாலே ஆயுள் குறையும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க யார்தான் முன்வருவார்கள். நாடகக் கலைஞர்கள் பலரை பால்கே அணுகியும், யாரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நீண்ட வற்புறுத்தல்களுக்கு பிறகு நடிக்கவைக்க முடிவெடுத்தார் பால்கே.

நடிகர்கள் கிடைப்பதற்கே இத்தனை பாடென்றால் கதாநாயகி கிடைக்க அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் அவரது துயரங்களைப் பார்த்த சரஸ்வதி பாய், தானே படத்தின் நாயகியாக நடிக்கவும் முன்வந்துள்ளார். ஏற்கெனவே படப்பிடிப்புக்கு வரும் கலைஞர்களுக்கு சரஸ்வதிபாய்தான் சமைத்துப் போட வேண்டும் என்பதால், அவரை நாயகியாக்க யோசித்தார் பால்கே. கடைசியில் மும்பை ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வந்த  அன்னா சலுன்கே (Anna Salunkhe) என்ற  பெண்ணை வற்புறுத்தி நாயகியாக நடிக்க சம்மதிக்க வைத்தார்.

இப்படியாக பல்வேறு தடைகளைக் கடந்து 1913-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி மும்பையில் உள்ள ஒலிம்பியா தியேட்டரில் இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’ பிரபலங்கள் பார்ப்பதற்காக திரையிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மும்பையில் உள்ள காரனேஷன் சினிமா என்ற அரங்கில் இப்படம் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்திய சினிமாவின் தந்தை என்ற புகழையும் தாதா சாகேப் பால்கேவுக்கு பெற்றுத்தந்தது. அன்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் பயணம், இன்று ஜெட் வேகமெடுத்து ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவு வளர்ந்துகொண்டு இருக்கிறது.


வாழ்க்கைப் பாதை
தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke), 1870-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பிறந்தார். 1913-ம் ஆண்டில்  ராஜா ஹரிச்சந்திரா’ என்ற படத்தை முதல் முறையாக திரையிட்ட தாதாசாகேப் பால்கே, அதன்பிறகு 95 படங்களையும் 27 குறும்படங்களையும் தயாரித்து, இயக்கி  வெளியிட்டுள்ளார். 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி அவர் காலமானார். இந்திய திரையுலகுக்கு அவர் செய்துள்ள மகத்தான பணிகளை பாராட்டும் வகையில் 1969-ம் ஆண்டுமுதல் சினிமா உலகில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு, ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியன் நெம் 1: முதல் பெண் ஆசிரியை



கோயில் கோபுரங்களைப் பார்ப்பவர்களின் கண்களுக்கு எப்போதும் அதன் உச்சியில் உள்ள கலசங்கள்தான் முதலில்  தெரியும்அந்த உயர்ந்த கோபுரம் உருவாகக் காரணமானஅதைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரம் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லைஅந்த அஸ்திவாரத்தைப் போலத்தான் சில மனிதர்களும்சமூகத்தின் மேம்பாட்டுக்கான அடித்தத்தை அமைத்துக் கொடுத்த பல மனிதர்களை சரித்திரம் சரியாக கண்டறிந்து கொண்டாடுவதில்லைஅப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சாவித்திரி பாய் புலேஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியை.
பெண்கள் படிப்பதற்கே தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில்,  பல்வேறு தடைகளைக் கடந்து பெண்களுக்காகஅதிலும் கவனை இழந்த பெண்களுக்காக பள்ளிக்கூடம் நடத்தியவர் சாவித்திரிபாய் புலே.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நைகான் எனும் ஊரில், 1831-ம் ஆண்டு பிறந்தவர் சாவித்திரி பாய் புலேகல்வி கற்கக்கூடிய வாய்ப்பு இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவரான இவருக்கு, 9-வது வயதில்  ஜோராவ் புலே என்பவருடன் திருமம் நடந்துள்ளதுதாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான ஜோதிராவ் புலேஇளம் வயதில் கல்வி கற்க மேல்ஜாதியினர் பல்வேறு தடைகளை விதித்துள்ளனர்இந்நிலையில் ஸ்காட்டிஷ் மிஷினரி பள்ளியில் சேர்ந்து  படிப்பை முடித்துள்ளார்முற்போக்கு சிந்தனையாளரான ஜோதிராவ் புலேதன்னைப் போலவே தன் மனைவியும் கல்வியில் கல்வியில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதற்காக  சாவித்திரி பாய்க்கு  ஆண்டுகள் வீட்டிலேயே கல்வி அளித்துள்ளார்பின்னர் அவரை அமெரிக்கன் மிஷனரியில் மேற்படிப்பு படிக்க வைத்துள்ளார்ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

சாவித்திரி பாய் நன்கு கற்றுத் தேர்ந்ததும் அவருடன் இணைந்து ஒடுக்கப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக 1847-ம் ஆண்டில் புனேவில் ஒரு பள்ளியைத் திறந்துள்ளார் ஜோதிராவ் புலேஇந்த பள்ளியில் முதல் முறையாக பாடம் நடத்தியிருக்கிறார் சாவித்திரி பாய் புலேஇதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
  கணவனை இழந்த பெண்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதையே பாவம் என்று நினைத்த காலகட்டம் அதுஇத்தகைய காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்கள் படிக்கச் சென்றால் ஒப்புக்கொள்வர்களா என்ன 
கணவனை இழந்த பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ளாத ஆதிக்க சமூகத்தினரின் கோபம்அவர்களுக்கு பாடம் நடத்த துணிந்த சாவித்திரி பாய் மீது திரும்பியது.  தினமும் பள்ளியில் பாடம் நடத்தச் செல்லும் சாவித்திரி பாய் மீது சாணியையும்சேற்றையும் எடுத்து எறிந்துள்ளனர்.  இதைப்பார்த்து பயந்துபோய் அவர் பாடம் நடத்த பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பிவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்ஆனால் சாவித்திரி பாய் இதற்காக கலங்கவில்லை.
தனது கணவரின் அறிவுரைப்படி தினமும் ஒரு சேலையை பையில் போட்டுக்கொண்டுபழைய சேலையை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு சென்றார்.   மற்றவர்களால் எறியப்படும் சாணிசேறு உள்ளிட்டவற்றால் அழுக்கான சேலையை பள்ளிக்கு சென்றதும் மாற்றி பையில் இருக்கும் சேலையை அணிந்துகொண்டு பாடம் நடத்தினார்ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும்  கணவரை இழந்த பெண்களுக்காக ஒரு பள்ளியை நடத்தியவர்பின்னர் தினந்தோறும் பல்வேறு இடங்களுக்கு சென்று கல்வி கற்பிக்க தொடங்கினார் 
சாவித்திரி பாயின் இந்த உறுதிஅவரை எதிர்த்தவர்களை நிலைகுலைய வைத்துள்ளதுஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் சாவித்திரி பாயின் செயல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.
 கல்விப் பணிகளுடன்  தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளாத சாவித்திரி பாய் புலேசமூக சீர்திருத்தப் பணிகளிலும் கவனம் தீவிரமாக ஈடுபட்டார்.  தீண்டாமை கொடுமை காரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில்தங்கள் வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்ட மக்களை புலே தம்பதியினர் அனுமதித்தனர்அத்துடன் விதவைகளுக்கு திருமணம் செய்துவைப்பதிலும் இத்தம்பதியினர் தீவிரமாக ஈடுபட்டனர் குழந்தை திருமணம்உடன்கட்டை ஏறும் கலாச்சாரம் மற்றும் பெண் குழந்தைகளை பச்சிளம் வயதில் கொல்லும் வழக்கம் ஆகியற்றுக்கு எதிராகவும் தன் கவருடன் இணைந்து சாவித்திரி பாய் புலே போராட்டங்களை நடத்தினார்.
 இளம் விதவைகள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுப்பதற்காக போராடிய சாவித்திரி பாய்அவர்கள் தங்குவதற்காக பால்ஹத்யா பிரதிபந்தக் கிரஹா (Balhatya Pratibandhak Griha) என்ற இல்லத்தையும் கட்டினார். 1952-ல் மஹிளா சேவா மண்டல் என் பெண்கள் சேவை மையத்தை தொடங்கிய சாவித்திரி பாய்பெண்களிடையே சமூக விழிப்புர்வு ஏற்பட பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
1897-ம் ஆண்டில்    இந்தியாவில் பிளேக் நோய் பரவநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைத்துமற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஆங்கிலேய அரசு ஈடுபட்டதுஇந்த சமயத்தில் சாவித்திரி பாயும்மருத்துவரான அவரது வளர்ப்பு மகன் யஷ்வந்தும்  சேர்ந்து பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புனே புறநகர் பகுதியில் ஒரு மருத்துவமனையை அமைத்தனர்தங்களையும் இந்நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற கவலையின்றி நோயுற்றவர்களுக்கு சேவைகளை செய்துவந்தனர்.
இந்த சமயத்தில்  பாண்டுரங்க பாபாஜி கெய்க்வாட் என்பவரின் மகன் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவரஅவரை தனது தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துப் போய் சேர்த்தார் சாவித்திரி பாய் புலேஅங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பாண்டுரங்க பாபாஜியின் மகன் காப்பாற்ப்பட்டார்ஆனால் அவரை தோளில் சுமந்துவந்த சமயத்தில் சாவித்திரி பாய் புலேவுக்கும் பிளேக் நோய் பரவஅடுத்த சில நாட்களிலேயே அவர் காலமானார்.
 இந்திய நாட்டுக்கு சாவித்திரி பாய் புலே செய்துள்ள சேவைகளைப் போற்றும் வகையில் புனே பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டில் மத்திய அரசு சாவித்திரி பாய் புலேயின் நினைவாக தபால் தலையையும் வெளியிட்டது.





வாழ்க்கைப் பாதை


1931-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி புனேயில் இருந்து 50 கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள நிகான் என்ற கிராமத்தில் சாவித்திரி பாய் புலே பிறந்தார். தன் கணவருடன் இணைந்து 1853-ம் ஆண்டுமுதல் அவர் கல்விப்பணிகளில் ஈடுபட்டார். சாவித்திரி பாயின் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநின்ர அவரது கணவர் 1890-ம் ஆண்டில் காலமானார். இந்த சமயத்தில் ஊர்மக்களின் எதிர்ப்பையும் மீறி அவரது இறுதிச் சடங்குகளை சாவித்திரிபாயே செய்துள்ளார்.ஆசிரியராக மட்டுமின்றி மிகச்சிறந்த கவிஞராகவும் விளங்கிய சாவித்திரி பாய் புலே 1897-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி காலமானார்.