Powered By Blogger

Saturday, January 25, 2020

இந்திய கிரிக்கெட் வரலாறு : கவாஸ்கரின் சாதனையும் சோதனையும்



1971-ம் ஆண்டில்  தங்கள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியை  உற்சாகமாக வரவேற்றது மேற்கிந்திய தீவுகள் அணிகடந்த முறை நடந்த தொடரில் இந்தியாவை  5-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றதே இதற்கு காரணம்.  கடந்த முறை இந்திய அணியை வென்தைப் போலவே இம்முறையும் இந்தியாவை எளிதில் வெல்லலாம் என மேற்கிந்திய தீவு வீரர்கள் கருதியிருந்தனர். ஆனால் கவாஸ்கரின் வருகை அதை தலைகீழாக்கி விட்டது.
இந்த டெஸ்ட் தொடரில் தான் ஆடிய முதல் ஆட்டத்தில் 2 அரைசதங்களை (65, 67) அடித்த கவாஸ்கர்அதற்கடுத்த போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகளை துவைத்து எடுத்தார். 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த முதல் தொடரில் மட்டும் சதங்கள் உட்பட 774 ரன்களைக் குவித்தார் கவாஸ்கர்அவரது உக்கிரமான பேட்டிங்கால் இந்திய அணிஇத்தொடரைக் கைப்பற்றியதுஅத்துடன் கிரிக்கெட் உலகின் கவனம்  கவாஸ்கர் மீது விழுந்தது.
ஒருபுறம் கவாஸ்கர் ரன்களை எடுத்தபோதிலும்இந்திய அணியின் இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சார்களும் முக்கிய காரணமாய் இருந்தனர்வெங்கட்ராகவன்பிரசன்னாபேடி என்ற இந்தியாவின் மூவர் கூட்டணிதங்களின் அதிரடி பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகளை திணறடித்தது
மேற்கிந்திய தீவுகளில் தொடரை வென்ற இந்திய அணிஅடுத்ததாக இங்கிலாந்துக்கு பறந்தது சுழற்பந்து வீச்சாளரான சந்திரசேகரின் அபார பந்துவீச்சால் இந்திய அணி இந்த தொடரையும் கைப்பற்றியது. மொத்தத்தில் இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாக 1971 அமைந்தது.
அதேநேரத்தில் 1971-ம் ஆண்டு, உலக கிரிக்கெட் வரலாற்றிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டில்தான் முதல் முறையாக 60 ஓவர்களைக் கொண்ட (முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 60 ஓவர்களைக் கொண்டதாக இருந்தது) ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்றிருந்ததால் இத்தொடரில் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகளைத் தவிர வேறெதுவும் அறியாத இந்திய அணியோ, அப்போட்டிகளில் காட்டிய அதே நத்தை வேகத்தை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் காட்டியது.
முக்கியமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுனில் கவாஸ்கர், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை 60 ஓவர்களும் பேட்டிங் செய்து 36 ரன்களை மட்டுமே சேர்த்தார். இப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 334 ரன்களை குவிக்க, இந்திய அணியோ 60 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கோப்பையை வெல்ல, ஒருநாள் போட்டிக்கு இந்தியா லாயக்கே இல்லை என்ற தோற்றம் ஏற்பட்டது. இந்த தோற்றத்தை மாற்றும் வகையில் இந்திய கிரிக்கெட்டில் நுழைந்தார் கபில்தேவ்.      

No comments:

Post a Comment