Powered By Blogger

Sunday, December 23, 2012

அவார்ட்ஸ் 2012


அவார்ட்ஸ் 2012

சிறந்த குடுகுடுப்பைக்காரர் - நாராயணசாமி
இவர் வாயைத் திறந்தாலே முதலில் வரும் வார்த்தை இன்னும் 15 நாளில் என்பதுதான். 15 நாளில் மின்சாரம் வரும், 15 நாளில் தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு வரும், 15 நாளில் காவிரி பிரச்னை தீர்க்கப்படும்” என்று நல்வாக்கு! சொல்வதுதான் இவரது வேலை. இவர் சொல்வது நடக்கிறதோ இல்லையோ 15 நாட்களில் தங்கள் பிரச்னை தீர்ந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு விடுகிறது.

சிறந்த போஸ்ட்மேன் - மு.க.ஸ்டாலின்
பேக்ஸ், இண்டர்னெட், ஈமெயில் என்று விஞ்ஞானம் வளர்ந்து வரும் நிலையிலும் டெசோ மாநாட்டு தீர்மானத்தை ஒரு போஸ்ட்மேனின் கண்ணியத்துடனும் கடமை உணர்ச்சியுடனும் எடுத்துச் சென்ற தளபதியைத் தவிர இந்த விருதுக்கு உரிய நபரை மைக்ரோஸ்கோப் வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

சிறந்த ஆமை விருது - ராகுல் காந்தி
சாதாரணமாக ஒரு கட்சித் தலைவர் பிரசாரத்துக்கு வந்தால் அவரது கட்சியினர் வெற்றி உறுதி என்று சந்தோஷப்படுவார்கள். ஆனால் அதே சந்தோஷத்தை எதிர்கட்சியினருக்கு கொடுத்த தலைவர் இந்திரா காந்தியின் பேரனான ராகுல் காந்தி. காங்கிரஸிப்ன் பிரசார பீரங்கியான இவர் சென்ற இடமெல்லம் எதிர்கட்சிகளுக்கு அமோக விளைச்சல். குறிப்பிடத்தக்க உதாரணம் உத்திரப் பிரதேசம்.

சிறந்த வெளிநடப்பாளர் விருது - சச்சின் டெண்டுல்கர்.
இந்திய ஜனநாயகத்தில் இப்போதைக்கு ஒரு எம்.பிக்கான குணங்களில் ஒன்று அடிக்கடி வெளிநடப்பு செய்வது. நியமன எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ராஜ்யசபாவுக்கு போகிறாரோ இல்லையோ கிரிக்கெட் மைதானத்தில் அந்த கடமையை தட்டாமல் செய்கிறார் இந்த கிரிக்கெட் கடவுள். மதானத்துக்குள் நுழைந்த சில பந்துகளிலேயே வெளிநடப்பு செய்து நம் க்ஜனநாயகத்தின் சிறப்பை உலகுக்கே எடுத்துக்கூறி வருகிறார்.

சிறந்த பூச்சாண்டி - கேப்டன் விஜயகாந்த்
  சட்டமன்றத்துக்குள் நாக்கை மடித்துக் காட்டி எம்.எல்.ஏக்களுக்கு கிலி காட்டியது, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுடன் குஸ்தி போட்டது என்று பல்வேறு சாதனைகளை அசத்திய கேப்டனைத் தவிற வேறு யாருக்கும் இந்த விருதைப் பெற தகுதியில்லை.

சிறந்த ஜிம்னாஸ்ட் விருது - டெசோ கருணாநிதி
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்தது, பிறகு மதசார்பற்ற ஆட்சியை காக்க அதே அன்னிய முதலீட்டை ஆதரித்து ஓட்டு போட்டது, ஓட்டு போட்ட கையோடு தமிழகத்தில் வால்மார்ட் கிளை ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்தது என்று இவர் அடித்த பல்டிகளின் சாதனையை ஒலிம்பிக் சாம்பியன்கள்கூட முறியடிக்க முடியாது.

சிறந்த ஓட்டக்காரர்- துரை தயாநிதி
திறமை வாய்ந்த தமிழக போலீஸாருக்கே தண்ணி காட்டி சுமார் 5 மாதங்கள் யார் கையிலும் பிடிபடாமல் முன் ஜாமீன் கிடைக்கும்வரை ஓடிக்கொண்டே இருந்த துரை தயாநிதிக்கு சிறந்த ஓட்டக்காரருக்கான குமுதம் விருதை அளிக்கிறோம். கூடவே தாத்தாவுக்கு கூட தெரியாமல் ஒளிந்துகொண்டதற்காக சிறந்த ஐஸ்பாய் வீரர் விருதும் இவருக்கே.

சிறந்த புடவை கட்டுபவர் விருது - குஷ்பு
ஒரு காலத்தில் ஜாக்பாட் ஜாக்கெட்டால் தமிழகத்தைக் கலக்கிய குஷ்பு, இன்று சேலை விவகாரத்தால் தமிழகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார். தி.மு.கவில் வாரிசுகளின் பரபரப்பையும் மீறி வெற்றிகரமாக பரபரப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் குஷ்புவுக்கு இந்த ஆண்டின் சிறந்த் புடவை கட்டுபவர் விருதை வழங்கலாம்.








No comments:

Post a Comment