குஜராத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்லார் மோடி. அவரைப் பற்றி சில தகவல்கள்
தன் பர்சனாலிட்டியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மோடிக்கு அக்கறை அதிகம். சீராக வெட்டப்பட்ட தாடிடும், ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலும் இதற்கு முக்கிய உதாரணங்கள். ஜேட் ப்ளூ எனும் நிறுவனம் பிரத்யேகமாக தயாரிக்கும் குர்தாக்களையே இவர் எப்போதும் அணிவார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு தன் சகோதரருடன் டீக்கடையில் வேலை பார்த்துள்ளார் மோடி. அப்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு இவர் டீ சப்ளை செய்யப் போக, அப்படியே அந்த இயக்கத்தில் ஈடுபாடு வந்து அதில் இணைந்திருக்கிறார்.
2001ம் ஆண்டுமுதல் குஜராத்தின் முதல்வராக மோடி இருந்துள்ளார். ஆனால் இதுவரை மோடியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூட முதல்வர் இல்லத்தில் தங்கியதில்லை.
இந்திய அரசியல் தலைவர்களிலேயே இண்டர்நெட்டில் அதிகம் புகழ்பெற்றவர் மோடிதான். ட்விட்டரில் அதிகம் பேர் பாலோ செய்யும் தலைவரும் இவர்தான். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மத்திய அமைச்சர் சசி தரூர்.
அரசியலுக்கு அடுத்ததாக மோடிக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். இதனாலேயே முன்னாள் பிரதமர் வஜ்பாயின் கவனத்தைக் கவர்ந்த மோடி, பல கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார். சிகரெட்டும், மதுவும் சுத்தமாக ஆகாது.
இவருக்கு மிகவும் பிடித்தது விவேகானந்தர்தான். அவரது எழுத்துக்களால் கவரப்பட்டவர், பல மாதங்கள் ஊர் சுற்றி இந்திய மக்களின் கஷ்டங்களை தெரிந்துகொண்டு பிறகு அரசியலில் கால் வைத்துள்ளார்.
மோடியின் 17 வயதில் ஜசோதா பென் என்பவருடன் இவருக்கு திருமணமனதாக கூறப்படுகிறது. ஆனால் சில கரணங்களால் இவர் மனைவியைப் பிரிந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment