Powered By Blogger

Tuesday, December 1, 2020

விளையாட்டாய் சில கதைகள் - நவம்பர் 20 - 23

 

Rajesh Muthusamy
Mon 11/16/2020 6:38 PM
sir pls..
Sudhir P. M.
Mon 11/16/2020 10:14 AM
  •  Rajesh Muthusamy
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
Attachment thumbnail
நவம்பர் 20
முதல் போட்டியில் சதம் அடித்த விஸ்வநாத்
-----------------------------------------------------------------------------
இந்திய கிரிக்கெட்டை கவாஸ்கர் ஆக்கிரமித்திருந்த காலத்தில், சில போட்டிகளில் அவரையும் கடந்து  ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் குண்டப்பா விஸ்வநாத். ரசிகர்களை மட்டுமின்றி கவாஸ்கரையும் இவரது பேட்டிங் ஸ்டைல்  கவர்ந்திருந்தது.  அதனால்தான் கவாஸ்கர் தன் மகனுக்கு விஸ்வநாத்தின் பெயரையும் சேர்த்து ரோஹன் ஜெய்விஷ்வா  என்று பெயரிட்டார். இப்படி கவாஸ்கரையே கவர்ந்த விஸ்வநாத், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த நாள் இன்று (20-11-1969).
பேட்டிங்கில் பெரியவராக இருந்தாலும், உயரத்தில் குள்ளமானவர் விஸ்வநாத்.   பிற்காலத்தில் கர்நாடக ஜூனியர் அணிக்கான தேர்வு நடைபெற்றபோது, விஸ்வநாத்தின்  உயரத்தைப் பார்த்த தேர்வாளர்கள்,  அவரால் பவுன்சர் பந்துகளைச் சமாளிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டனர். ஆனால் பிற்காலத்தில் கர்நாடக ஜூனியர் அணிக்காகவும், ரஞ்சி போட்டிகளில் கர்நாடக அணிக்காகவும் அவர் அதிக சதங்களை விளாசினார். அனைத்துவகை பந்துகளையும் அடித்து நொறுக்கினார்.
ரஞ்சி போட்டிகளில் சாதித்ததால், இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.  1969-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் களம் இறங்கினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில்  ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கவலையோடு பெவிலியன் திரும்பிய  அவரை அழைத்த அப்போதைய இந்திய  கேப்டன் பட்டோடி, “கவலைப்படாதீர்கள். அடுத்த இன்னிங்ஸில் நீங்கள் சதம் அடிப்பீர்கள்” என்று   ஆறுதல் கூறினார். அவரது ஆறுதல் வார்த்தை அடுத்த 2 நாட்களில் நிறைவேறியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வநாத்  137 ரன்களை விளாசினார். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்களை விஸ்வநாத் அடித்துள்ளார். இதில் 12 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------

நவம்பர்   21
இந்தியாவின் முதல் ஓட்ட வீராங்கனை
---------------------------------------------------------------------
சர்வதேச தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்று கொடுத்தவர்கள் பெண்கள்தான். பி.டி உஷா, ஷைனி வில்சன், வல்சம்மா, அஞ்சு ஜார்ஜ், டுட்டி சந்த் என்று இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில் இந்திய வீராங்கனைகள்  சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நீலிமா கோஷ்.
1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 17 வயது பெண்ணாக நீலிமா கோஷ் பங்கேற்றார். அந்தக் காலத்தில் பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு இந்திய  சமூகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது. பெண்கள் வெளியில் வருவதே பாவம் என்ற சூழல் இருந்தது.  இந்தச் சூழலில் சமூகத்தின் எதிர்ப்பை புறம்தள்ளி கடும் பயிற்சியின் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு நீலிமா கோஷ் தகுதி பெற்றார்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் நீலிமா கோஷுடன்  மேரி டிசோசா என்ற மற்றொரு வீராங்கனையும் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். இருப்பினும் நீலிமா கோஷ் பங்கேற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் முதலில் நடந்ததால், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பங்கேற்ற முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையை  அவர் பெற்றார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 13.8 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த நீலிமா கோஷ்,  இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். அடுத்து நடந்த 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில், முதலிடம் பெற்ற வீராங்கனையை விட  2 விநாடிகள் பின்தங்கினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் நீலிமா கோஷ் பதக்கங்களை வெல்லாவிட்டாலும், இந்தியப் பெண்களாலும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நவம்பர் -  22
கிரிக்கெட் ஹெல்மெட்  பிறந்த  கதை
-------------------------------------------------------------------
இன்றைய தினம் கிரிக்கெட்  போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டுக்கு அடுத்து முக்கிய தேவையாக இருக்கும் விஷயம் ஹெல்மெட்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களின் தலையில் காயம் ஏற்படாதவாறு அவர்களை ஹெல்மெட்கள் காக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர்கள்  மட்டுமின்றி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடும்போதும் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என சட்டம் இயற்றுமாறு சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகில் கிரிக்கெட் அறிமுகமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகே ஹெல்மெட்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 1930-களில் ஹெல்மெட் போன்ற ஒரு நவீன தலைக்கவசத்தை அணிந்து பாஸ்டி ஹெண்டிரன் என்ற இங்கிலாந்து வீரர் ஆடியுள்ளார். 3 தொப்பிகள் மற்றும் கால்காப்பின் சில பாகங்களைக் கொண்டு இந்த தலைக்கவசத்தை அவரது மனைவி உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
 
நவீன கிரிக்கெட் உலகில் ஹெல்மெட்கள் நடைமுறைக்கு வரத் தொடங்கியது 1970-களில்தான்  இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான டென்னிஸ் அமிஸ்,   உலக சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளின்போது, பைக் ஓட்டுபவர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட்டை சற்று மாற்றி வடிவமைத்து,  கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது  ரசிகர்கள் அவரைக் கிண்டல் செய்தனர். ஆனால் இந்த தொடரின்போது அவரது தலையை ஒரு பந்து தாக்கியபோது, அவர் காயமின்றி தப்ப, ஹெல்மெட்டின் அவசியத்தை மற்ற வீரர்களும் உணர்ந்தனர். இதைத்தொடர்ந்து  டோனி கிரேக், ஜாகிர் அப்பாஸ் , கவாஸ்கர் போன்ற வீரர்களும் தங்களுக்கு ஏற்ற வகையில் ஹெல்மெட்களை வடிவமைத்து அணிந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு நவீன மாற்றங்களுடன் ஹெல்மெட்கள் வரத் தொடங்கின.  
இன்றைய காலகட்டத்தில் அதிநவீன பிளாஸ்டிக்குகள் மற்றும் பைபர்களால் தயாரிக்கப்படும் ஹெல்மெட்களின் எடை 750 கிராம்தான். ஆனால் விலைமதிப்பிலாத பல வீரர்களின் உயிரை அவை காக்கின்றன
----------------------------------------------------------------------------------------------------------------------
நவம்பர் 23
நம்பர் 1 கிரிக்கெட் தம்பதி
டென்னிஸ், தடகளம், நீச்சல் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்துகொள்வது அடிக்கடி நடக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் இது குறைவு. இந்தச் சூழலில்   சர்வதேச கிரிக்கெட் உலகின் ஒரே காதல் தம்பதியாக  வலம் வருகிறார்கள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும், அந்நாட்டு பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரான அலிஸா ஹீலியும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு முன்பே, அதாவது ஸ்டார்க்கின் 9-வது வயதிலேயே அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார் அலிஸா ஹீலி. பிரபல ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான இயான் ஹீலியின் மருமகள்தான் அலிஸா ஹீலி. தன் மாமாவைப் பின்பற்றி தானும் விக்கெட் கீப்பராக விரும்பிய அலிஸா, சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இணைய, அங்கேதான் ஸ்டார்க்கை முதல் முறையாக சந்தித்துள்ளார்.

இப்போது வேகப்பந்து வீச்சாளராக உள்ள ஸ்டார்க், அப்போது சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விக்கெட் கீப்பராக பயிற்சி பெற்று வந்துள்ளார். இருவரும் சிறுவயதில் இன்றாக பயிற்சி பெற, காதல் தீ  பற்றிக்கொண்டுள்ளது. பிற்காலத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியில் விக்கெட் கீப்பராக அலிஸா இணைய, வேகப்பந்து வீச்சாளராக மாறி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். இருவரின் பாதை மாறினாலும், காதல் மாறவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டில் அலிஸாவை மணமுடித்துள்ளார் ஸ்டார்க்.
இருவரும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதால், இந்த தம்பதி ஒன்றாக இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அலிஸா கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் நேரத்தில் ஸ்டார்க் வீட்டிலும், அலிஸா வீட்டில் இருக்கும் நேரங்களில் ஸ்டார்க் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதிலும் பிஸியாக இருப்பதால் இவர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதனால்தானோ என்னவோ எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வருகிறது இந்த ஜோடி.

No comments:

Post a Comment