Powered By Blogger

Saturday, June 15, 2019

பிரிவினையின் சாட்சி



இந்தியாவின் தேசத்தந்தையான மகாத்மா காந்தியும், பாகிஸ்தானின்  தேசத் தந்தையான முகமது அலி ஜின்னாவும் (Mohammad Ali Jinnah) காரசாரமாக விவாதித்துக்கொண்டிருக்கும் இந்தப் படம் 1944-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட சோக வரலாற்றின் சாட்சியாக இந்தப் படம் விளங்குகிறது. 
1930-ம் ஆண்டில் அலகாபாத்தில் கூடிய முஸ்லிம் லீக் மாநாட்டில் இந்தியாவை 2 நாடுகளாகப் பிரித்து இஸ்லாமியருக்காக தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முழக்கம் ஒலித்தது. அப்போது இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த எண்ணத்தில் இருந்து அவர்களை திருப்பிவிட முடியும் என்று மகாத்மா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருதினர். ஆனால் நாளடையில் முஸ்லிம் லீக் தலைவர்கள் மத்தியில் இந்தியாவை பிரித்து தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது.
1940-ல் நடந்த லாகூர் மாநாட்டில் தனிநாடு கோரிக்கையை   முகமது அலி ஜின்னா வலியுறுத்தினார். முஸ்லிம் லீக் தலைவர்கள் அவர் பின்னால் அணிவகுக்க, மனதளவில் நொறுங்கிப் போனார் காந்தி. “என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” என்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காந்தியடிகள், இந்தியா பிளவுபடாமல் இருக்க தன்னால் இயன்றவரை போராடினார்.
 இந்த காலகட்டத்தில் மும்பையில் இருந்த ஜின்னாவின் இல்லமான ‘ஜின்னா ஹவுஸ்’ மிகவும் புகழ்பெற்றது. 1936-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய காலகட்டத்தில் தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் இந்த வீட்டை வாங்கினார்  ஜின்னா. முதலில் இது  ‘சவுத் கோர்ட்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தனிநாடு  கோரிக்கையை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த வீட்டில்தான்   முஸ்லிம்  லீக் தலைவர்களுடன் ஜின்னா  ஆலோசனை நடத்தினார். இந்தியாவை இரண்டாக பிரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக  பேச்சுவார்த்தை நடத்த மகாத்மா காந்தி விரும்பியபோது, அவர் தனது இல்லத்துக்கு வந்துதான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் ஜின்னா. ஆனால் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாத காந்தி, ஜின்னா ஹவுஸுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
1944-ம் ஆண்டு இரு தலைவர்களுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. 14 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நாட்டைப் பிரிக்கக்கூடாது என்ற காந்தியின் பேச்சை ஏற்க ஜின்னா மறுத்தார். இப்படி இருவரிடையே நடந்த ஒரு பேச்சுவார்த்தையின்போது ஜின்னா ஹவுஸின் முன்பு காந்தியும்- ஜின்னாவும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைத்தான் இங்கே படமாக்கி இருக்கிறார் குல்வந்த் ராய்.
14 சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகும் ஜின்னாவை தன் வழிக்கு கொண்டுவர முடியாததால் இந்தியாவை பிரிக்க ஒப்புக்கொண்டார் மகாத்மா காந்தி. இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக உருவானது.
 குல்வந்த் ராய் (Kulwant Roy).
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய தருணங்களை தனது கேமராவில் பதிவு செய்தவர் குல்வந்த் ராய் (Kulwant Roy). பஞ்சாபில் உள்ள லூதியானாவில் 1914-ம் ஆண்டு பிறந்த இவர், தனது இளமைக் காலத்தில் ராயல் இந்திய ஏர்போர்ஸில் இணைந்து சேவையாற்றினார். அதிலிருந்து விலகிய பிறகு டெல்லியில் ஃபோட்டோ எஜென்ஸியைத் தொடங்கி புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினார். மகாத்மா காந்தியின் பயணங்களின்போது அவருடன் பல இடங்களுக்கு சென்று வரலாற்று சிறப்புமிக்க படங்களை இவர் எடுத்துள்ளார்.
காந்தியுடன் ஜின்னா விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த படம் ஹல்டன் - கெட்டி ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகத்தான் சமீப காலம் வரை குறிப்பிடப்பட்டு வந்தது. சமீபத்தில்தான் இந்த படத்தை எடுத்தவர் குல்வந்த் ராய் என்பது தெரியவந்தது. நேரு, படேல் போன்ற பல முக்கியத் தலைவர்களையும், பல்வேறு தருணங்களில் இவர் படம் பிடித்துள்ளார். இந்தியாவின் புகைப்படக்காரர்களில் ஜாம்பவானாக கருதப்பட்ட இவர் 1984-ம் ஆண்டு காலமானார்.
  

‘கழுகும் சிறு பெண்ணும்’



ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான்,  1993-ம் ஆண்டில்  மிக மோசமான காலகட்டத்தைச் சந்தித்ததுஒருபக்கம் பஞ்சம்மறுபக்கம் உள்நாட்டுப் போர் என அந்நாட்டின் கழுத்து நெரிபட்டுக் கொண்டிருந்தது.  சூடான் மக்கள் உணவில்லாமல் திண்டாடிக்கொண்டு இருந்தார்கள்.  சர்வதேச பத்திரிகைகள் இதைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதிக்கொண்டிருந்தன. 
 சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் இதுதொடர்பாக செய்திகளை சேகரிக்க சூடானில் முகாமிட்டு இருந்தனர்அவர்களில் ஒருவர்தான்  கெவின் கார்ட்டர் (Kevin Carter)தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரான அவர்ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத விஷயங்களை ஒரே புகைப்படம் மூலம் எடுத்துச் சொல்வதில் வல்லவர்துடிப்பான போட்டோகிராபரான அவரது  படங்களை சர்வதேச பத்திரிகைகள் பலவும் ஆவலுடன் வாங்கி வெளியிட்டு வந்தன.      சூடானின் நிலையை ஒருசில படங்களில்   விளங்கவைக்கும் முயற்சியில்  கேமராவும் கையுமாக சூடான் முழுக்க அலைந்தார்.
ஒட்டிய வயிறுடன் பிச்சை எடுக்கும் சிறுவர்கள்உணவு  வேன்களின் பின்னால் வெறிபிடித்து ஓடும் மக்கள் கூட்டம்ஒரு துண்டு ரொட்டிக்காக அடித்துக்கொள்ளும் குடிமக்கள் என்று  பல விஷயங்களை அவரது கேமரா க்ளிக்கிக்கொண்டிருந்தது 
 இந்த நேரத்தில்தான் அயோட் (Ayod) என்ற கிராமத்தில் ஒரு  காட்சி அவரது கண்களில் பட்டதுபசியால் குற்றுயிரும் கொலையுயிருமாக ஒரு குழந்தை சோர்ந்துபோய் அமர்ந்திருக்கஅதன் அருகே கழுகு ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது.இதைப் பார்த்ததும் குழந்தையை காப்பாற்றுவதா அல்லது அந்தச் சூழலை படமெடுப்பதா  என்று ஒரு மினி பட்டிமன்றமே கெவின் கார்ட்டரின்  மனதில் நடந்தது கடைசியில் கடமை உணர்ச்சிதான் வென்றதுபடம் எடுப்பதுதான் முதல் லட்சியம் என்று  கேமராவை ஸ்டாண்டில் பொருத்தி நிதானமாக காத்திருந்தார்சுமார் 20 நிமிட நேரம் குழந்தையை வட்டமிட்ட கழுகுகடைசியில் அதன் அருகில் போய் அமர்ந்ததுஇதுதான் சமயமென்று,அதை க்ளிக்கினார் கார்ட்டர்.
இதுபற்றி கூறும் கார்ட்டர்அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் விமானத்தில் இருந்து கீழே போடப்படும் உணவுகளை சேகரிப்பதில் கவனமாக இருந்ததால் குழந்தையை கவனிக்கவில்லைஇதனால் தனித்திருந்த குழந்தையை தாக்கும் எண்ணத்துடன் கழுகு நெருங்கிக்கொண்டிருந்ததுகுழந்தையை காக்கவேண்டும் என்ற  எண்ணம் ஒருபுறம் இருந்தாலும்எனக்குள் இருந்த புகைப்படக்கார மனசாட்சி  அதை முதலில் படமெடுக்கத் தூண்டியது 20 நிமிடங்கள் காத்திருந்துகுழந்தையை அந்த கழுகு நெருங்கியதும் படமெடுத்தேன்சில படங்களை எடுத்த பிறகு அந்த கழுகைத் துரத்திவிட்டு குழந்தையையும் காப்பாற்றினேன் என்கிறார்.
 நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு விற்கப்பட்ட அந்த படம்,  தி வல்ச்சர் அண்ட் தி லிட்டில் கேர்ள் (The vulture and the little gir) என்ற தலைப்பில் 1993-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி முதலில் வெளியானதுஇந்த படத்தைப் பார்த்த வாசகர்கள் பலரும்நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையைத் தொடர்புண்டுஅந்த குழந்தை காப்பாற்றப்பட்டதா என்று பதற்றத்துடன் விசாரித்தனர்மேலும் அந்தச் சூழலில் குழந்தையை காப்பாற்றாமல் படமெடுப்பதில் ஆர்வம் காட்டிய புகைப்படக்காரரை விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

சூடானில் எடுத்த அந்தப் படம்கெவின் கார்ட்டரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றதுஇதற்காக 1994-ம் ஆண்டில் அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.ஆனாலும் சூடானில் தான் கண்ட காட்சிகளால் மனதளவில் பாதிக்கப்பட்ட கார்ட்டர்,புலிட்சர் விருது வாங்கிய சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
  கெவின் கார்ட்டர்
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜொகன்னஸ்பர்க்கில் 1960-ம் ஆண்டு பிறந்த கெவின் கார்ட்டர்சிறு  வயதில் இருந்தே புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்ஜொகன்னஸ்பர்க் ஸ்டார் என்ற பத்திரிகையில் புகைப்படக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர்பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி உள்ளார்.
அந்த காலக்கட்டத்தில் பஞ்சம் நிறைந்த பகுதிகளில் படம் எடுக்கச் செல்பவர்கள்,அங்குள்ளவர்களை தொடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர்அவர்களிடம் இருந்து புகைப்படக்கரர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க இவ்வாறு சொல்லப்பட்டிருந்ததுஇதனால் கழுகுக்கு முன்னால் தான் படம் எடுத்த குழந்தை உட்படபசியால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை தொட்டு ஆறுதல் கூறக்கூட முடியாததால் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டார்மேலும்  வறுமை நிலையும் கெவினை அலைக்கழித்தது.  இறுதியில் 1994-ம் ஆண்டு  தான் சிறுவயதில் விளையாடிய பார்க்மோர் என்ற இடத்தில்ஒரு டிரக்கை இயக்கி அதன் புகைபோக்கி அருகே முகத்தை வைத்துபுஅதிலிருந்து  வெளியான  கார்பன் மோனோக்ஸைடை சுவாசித்து இறந்தார். 

ஆலன் குர்தியின் மரணம்


2015-ம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகின் மனசாட்சியை உலுக்கிய படம் என்று ஆலன் குர்தியின் படத்தைச் சொல்லலாம். கிரேக்க நாட்டின் கடற்கரைப் பகுதியில் மணலில் முகம்புதைந்த நிலையில் கிடந்த ஆலன் குர்தியின் உடல், நிலுபர் டெமிரின்  கேமரா வழியாக பதிவாகி உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்படும் அகதிகளின் அவலத்தை  உரக்கச் சொன்னது.  
தன் மரணத்தால் உலகை உலுக்கிய  ஆலன் குர்தி, சிரியாவின் கொம்பானி நகரத்தைச் சேர்ந்தவன். உள்நாட்டுச் சண்டையால் சிரியாவின் அமைதி பாதிக்கப்பட, 3 வயதான மகன் ஆலன் குர்தியையும், 5 வயதான அவன் அண்ணன் காலிப் குர்தியையும் அழைத்துக்கொண்டு மனைவியுடன் கனடாவில் தஞ்சம் புக திட்டமிட்டார் அப்துல்லா குர்தி. ஏற்கெனவே கனடாவில் இருக்கும் அப்துல்லாவின் சகோதரி இதற்கான செலவை ஏற்பதாக கூறியிருந்தார். ஆனால் அகதிகள் விஷயத்தில் கனடா அரசு கொண்டிருந்த கொள்கை மாற்றத்தால், அப்துல்லாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கனடா வருவதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது.   இந்நிலையில் சிரியாவில் இருந்து துருக்கிக்கு சென்று அங்கிருந்து கிரேக்கத்துக்கு செல்லும் ஒரு நெரிசல் மிகுந்த படகில்  3 லட்ச ரூபாய் செலுத்தி,  குடும்பத்துடன் புறப்பட்டார் அப்துல்லா. ஏராளமான அகதிகளின் நம்பிக்கையைச் சுமந்து,  துருக்கியின் போட்ரம் பகுதியில் இருந்து படகு புறப்பட்டது.
கிரேக்க நாட்டில் உள்ள கோஸ் தீவில் அவர்களை இறக்கி விடுவதுதான்  படகின் நோக்கமாக இருந்தது. ஆனால் கடலில் எழுந்த ராட்சத அலைகளாலும், படகில் அதிகம் அகதிகள் குவிந்து இருந்ததாலும் புறப்பட்ட  3 கிலோமீட்டர் தொலைவிலேயே படகு தத்தளிக்கத் தொடங்கியது. பயத்தில் பயணிகள் அங்குமிங்கும் சாய, ஒட்டுமொத்தமாக கவிழ்ந்தது. அப்துல்லாவின் கண் முன்பே அவரது மனைவியும் மகன்களான ஆலனும், காலிப்பும் தண்ணீரில் மூழ்கினர்.
அடுத்த நாள் காலை கடற்கரை ஓரம் முகம் புதைத்துக் கிடந்த ஆலனின் உடல், படகில் வந்தவர்களுக்கு நேர்ந்த கதியை உலகுக்கு சொல்லியது. நிலுபர் டெமிர் (Nilufer Demir) என்ற பத்திரிகை புகைப்படக்காரர் இதை படமெடுத்து வெளியிட, சிரிய அகதிகளின் அவலத்தை உலகம் அறிந்தது.
  நிலுபர் டெமிர்
துருக்கி நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகை புகைப்படக்காரரான நிலுபர் டெமிர் (32 வயது), உள்நாட்டுப் போரால் அவதிப்பட்டு பிற நாடுகளில் தஞ்சம் புகும் அகதிகளின் வாழ்க்கையை படமெடுப்பதில் சிறந்து விளங்குகிறார். ’டோகன் நியூஸ் ஏஜென்ஸி’யில் பணியாற்றும் அவர் 2015-ம் ஆண்டு ஆலன் குர்தியின் இந்தப் படத்தை எடுத்தார். இந்தப் படத்துக்காக துருக்கி ஃபோட்டோஜர்னலிஸ்ட் அசோசியேஷனின் சிறந்த படத்துக்கான விருதை வென்றார்.
 “போட்ரம் கடற்கரைப் பகுதியில் ஆலனின் உடலைக் கண்டதும் முதலில் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அவனுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்று மனம் தவித்தது. அவனுக்கு உதவ முடியாவிட்டாலும் அவனைச் சார்ந்த மக்களுக்காவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தை எடுத்தேன்’ என்கிறார் நிலுபர் டெமிர்.


ராட்டையும் மகாத்மா காந்தியும்


மகாத்மா காந்தி என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று ராட்டை. தேச விடுதலைப் போராட்டம், தலைவர்களுடனான சந்திப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று என்னதான் பரபரப்பாக இருந்தாலும் தினமும் ஒரு மணி நேரமாவது ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்தை அவர் தவற விட்டதில்லை. தான் மட்டுமின்றி தனது ஆசிரமத்தில் உள்ளவர்களும் தினமும் ஒரு மணி நேரமாவது ராட்டையில் நூல் நூற்க வேண்டும் என்பதை கட்டாயமாக வைத்திருந்தார் காந்தி. அவரைப் பொறுத்தவரை ராட்டையில் நூல் நூற்பது என்பது ஒருவகை தியானமாகவே இருந்துள்ளது.

  காந்தியடிகளுக்கு மிகவும் பிரியமான  ராட்டையுடன் சேர்த்து மார்கரெட் புரூக் ஒயிட் என்ற பெண் புகைப்படக்காரர் கடந்த 1946-ம் ஆண்டு எடுத்த படம் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது.  1946-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சாதகமான சூழல் நிலவ, அதற்கு காரணமாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் எதிர்காலத் தலைவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து,  அவர்களைப் படம் பிடிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் லைஃப் பத்திரிகை மார்கரெட் புரூக் ஒயிட்டை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
காந்தியின் ஆசிரமத்துக்கு சென்ற  மார்கரெட், ராட்டையுடன்  அவரைப் புகைப்படம் எடுக்கும் தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். அதற்கு காந்தியின் உதவியாளர்கள், “நீங்கள் ராட்டையில் நூல் நூற்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே அவர் படமெடுத்துக் கொள்ள ஒப்புக்கொள்வார்” என்று காந்தியின் நிபந்தனையை கூறியுள்ளனர். இதற்காக சில நாட்கள் பயிற்சி பெற்ற பின்னர், காந்தி மவுன விரதம் இருந்த ஒரு  நாளில் அவரை படமெடுக்கும் வாய்ப்பு மார்கரெட்டுக்கு கிடைத்துள்ளது.
    காந்திக்கு கண்களைக் கூசவைக்கும் அதிபிரகாசமான  ஒளி பிடிக்காது என்பதால் அவரை அதிகம்  தொந்தரவு செய்யாத வகையில் பிளாஷ் இல்லாமல்  படமெடுக்க வேண்டும் என்று   உதவியாளர்கள்  மார்கரெட்டைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் மிகவும் போராடி கேமராவில் பிளாஷை பொருத்தி படமெடுக்க காந்தியின் உதவியாளர்களிடம் அனுமதி வாங்கினார் மார்கரெட். முதல் 2 முயற்சிகளில் படம் சரியாக விழாத நிலையில் 3-வது முயற்சியில் இந்தப் படத்தை அவர் எடுத்துள்ளார்.   1946-ம் ஆண்டில் காந்தியைப் பற்றி லைஃப் பத்திரிகையில் வெளியான செய்தியில் முதலில் இந்தப் படம் இடம்பெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரைப்பற்றி வெளியான கட்டுரையில் இந்த படம் இடம்பெற்றது. இன்றைய தினம் காந்தியின் முக்கியமான படங்களில் ஒன்றாக இது  விளங்குகிறது. 1948-ம் ஆண்டு காந்தி கொல்லப்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பும் மார்கரெட் அவரைப் பேட்டிகண்டு புகைப்படம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மார்கரெட் புரூக் ஒயிட்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1904-ம் ஆண்டு பிறந்த மார்கரெட் புரூக் ஒயிட், புகழ்பெற்ற லைஃப் பத்திரிகையின் புகைப்பட கலைஞராகவும், செய்தியாளராகவும் இருந்துள்ளார். உலகின் முதல் டாக்குமென்டரி போட்டோகிராபர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. இந்தியா  சுதந்திரம் பெற்ற காலத்திலும்,  இந்தியா - பாகிஸ்தான்  பிரிவினையின்போதும் பல சிறந்த புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார். இடைக்காலத்தில் பர்க்கின்சஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1971-ம் ஆண்டு காலமானார். தனது வாழ்க்கை வரலாற்றை  போர்ட்ரெயிட் ஆஃப் மைசெல்ஃப் (Portrait of Myself ) என்ற பெயரில் அவர் புத்தகமாக  எழுதியுள்ளார்.





மகிழ்ச்சியில் ஒரு முத்தம்




அமைதி மிகவும் சுகமானது. அதிலும் நீண்ட போர்க்காலத்துக்கு பிறகு, இனி துப்பாக்கிகளின் சத்தமோ, குண்டுகளின் சத்தமோ கேட்காது, உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் வராது என்ற நிலை வரும்போது ஏற்படும் அமைதியையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும்  வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.  அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

உலக மக்களை நீண்ட நாட்களாக வருத்திக் கொண்டிருந்த 2-வது உலகப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடற்படை வீரர் ஒருவர் உற்சாக மிகுதியில் த அருகில் இருந்த ஒரு  நர்ஸுக்கு முத்தம் கொடுத்த படம்தான் இது.

1939-ம் ஆண்டில் தொடங்கி 45-ம் ஆண்டுவரை நீடித்த 2-வது உலகப் போர், சர்வதேச அளவில் மக்களை கடுமையாக பாதித்தது. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒரு பக்கம் உயிர்கள் கொத்துக் கொத்தாக பலியாக, மறுபக்கம் உணவு இல்லாமலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் மக்கள் தினந்தோறும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1945-ம் ஆண்டு, நேச நாடுகளிடம் சரணடைவதாக ஜப்பான் அறிவித்ததைத் தொடர்ந்து இப்போர் முடிவுக்கு வந்தது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் இதை ஒரு மிகப்பெரிய பண்டிகைபோல் கொண்டாடினார்கள்.   1945-ம் ஆண்டு  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்குயர் பகுதியில், மக்களின் கொண்டாட்டங்களை புகழ்பெற்ற புகைப்படக்காரரான ஆல்பிரட் ஈசண்டேட் (Alfred Eisenstaedt)படமெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரால் எடுக்கப்பட்ட இந்தப் படம்,  புகழ்பெற்ற ‘லைஃப்’ பத்திரிகையில் வெளியானது. அன்றிலிருந்து  இன்றுவரை இரண்டாம் உலகப் போர் என்றதும் நினைவுக்கு வரும் முக்கிய படங்களில் ஒன்றாக இப்படம் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.
இதைப்பற்றி கூறியுள்ள ஆல்பிரட் ஈசண்டேட் அன்றைய தினம் நியூயார்க்நகரமே மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்ததுசாலையில்செல்வோரெல்லாம் முன்பின் தெரியாத நபர்களைக்கூட கட்டியணைத்துதங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்அத்தனை காட்சிகளையும் என் கேமராவில் பதியவேண்டும் என்ற எண்ணத்தில் கேமராவுடன் வெறித்தனமாக சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது கடற்படை வீரர் ஒருவர்நர்ஸை முத்தமிடும் காட்சியைக் கண்டேன். போர் முடிந்ததன் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அவர்களின் முகத்தில் பார்க்க முடிந்தது.   உடனடியாக அந்தக் காட்சியைப் படமெடுத்தேன்” என்கிறார்.
  படமெடுத்ததில் காட்டிய உற்சாகத்தை, அவர்களின் பெயரை அறிந்துகொள்ள  ஆல்பிரட் காட்டவில்லை. இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு, அந்த படத்தில் இருந்தது தான்தான் என்று ரோட் ஐலண்டைச் சேர்ந்த மெண்டோன்சா என்பவர் அறிவித்தார்.  படத்தில் தான் முத்தமிட்ட நர்ஸ், தனக்கு முன்பின் அறிமுகமில்லாதவர் என்றும். போர் நின்றுவிட்டதை அறிந்த  உற்சாகத்தில் தான் அப்படிச் செய்ததாகவும் அவர் அறிவித்துள்ளார். இதைப்பற்றி அமெரிக்க பத்திரிகையாளர்கள் மேலும் விசாரித்ததில் அதில் இருந்த பெண்ணின் பெயர் கிரீடா சிம்மர் ஃபீட்மேன் என்று தெரியவந்தது.

ஆல்பிரட் ஈசண்டேட்
ஜெர்மனியில் 1898-ல் ம் ஆண்டு பிறந்த ஆல்பிரட் ஈசண்டேட், 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞராக விளங்கினார். குறிப்பாக இரண்டாம் உலகப் போரின்போது இவர் எடுத்த படங்கள் மிகவும் புகழ்பெற்றவையாக உள்ளன. இவரால் எடுக்கப்பட்ட 90-க்கும் மேற்பட்ட படங்கள் புகழ்பெற்ற லைஃப் பத்திரிகையின் அட்டையை அலங்கரித்துள்ளன.  1989-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எஹ்.டபிள்யூ.புஷ்ஹின் கையால் நேஷனல் மெடல் ஆஃப் ஆர்ட்ஸ் விருதுபெற்ற இவர், மேலும் பல விருதுகளையும்  பெற்றுள்ளார். 1995-ம் ஆண்டு இவர் காலமானார்.