-
வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் இயற்கை வளங்களை எல்லாம் இங்கிலாந்துக்கு கடத்திச் செல்ல எந்த கப்பல்கள் உதவியதோ, அதே கப்பல்கள்தான் இங்கிலாந்தில் இருந்த கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் காலூன்றவும் உதவியது. அந்த வகையில் இந்தியாவில் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியதற்காக கப்பல்களுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
1721-ம் ஆண்டு குஜராதின் கட்ச் பகுதிக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல் ஒன்று அங்குள்ள துறைமுகத்திலேயே 15 நாட்கள் தங்கியிருக்க வேண்டி வந்தது. அப்போது கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு போர் அடிக்காமல் இருக்கவும், அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கவும் எதையாவது செய்தாக வேண்டுமே என்று அந்தக் கப்பலின் கேப்டன் யோசித்திருக்கிறார். அப்போதுதான் மாலுமிகளை இரு பிரிவுகளாக பிரித்து, அவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டியை நடத்தும் எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது. இப்படி அடுத்த 15 நாட்களுக்கு அவர்கள் கிரிக்கெட் ஆடியதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள இந்தியர்களுக்கும், பிரபுக்களுக்கும் கிரிக்கெட் பிடித்துப்போய் உள்ளது.
“நம்ம ஊர் கில்லி தாண்டு ஆட்டத்தைப் போலவே இருக்கிறதே” என்று அவர்களுக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் பிறந்திருக்கிறது. இந்தியர்களுக்கு பொதுவாகவே வேடிக்கை பார்க்கும் பழக்கம் அதிகம் என்பதால், ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் ஆடும் இடங்களுக்கெல்லாம் சென்று வேடிக்கை பார்த்தனர். அவர்களுக்கு உதவியாக முட்செடிகளை வெட்டி மைதானம் அமைக்க உதவினர். பிட்ச்சின் மீது கனமான உருளைகளை இழுத்துச் சென்று அதைச் சீர்படுத்திக் கொடுத்தனர். ஆட்டத்தின்போது யாராவது வெகுதூரத்துக்கு பந்தை அடித்தால் அதை ஓடிச் சென்று எடுத்துக் கொடுத்தனர்.
இந்த உதவிகளுக்கு பிரதிபலனாக வெள்ளையர்களும் இந்திய இளைஞர்களுக்கு கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தனர். இப்படியாக இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி எங்கெல்லாம் விரிவடைந்ததோ, அங்கெல்லாம் கிரிக்கெட்டும் தடம் பதித்துள்ளது. ஆரம்பத்தில் வெள்ளையர்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டத்தை பிற்காலத்தில் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த இந்திய இளைஞர்களும் ஆடத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி கிரிக்கெட் அடிய முதல் இந்தியர்கள் என்ற பெருமை பார்சி இனத்தவர்களையே சேரும்.
1980-ம் ஆண்டில் பார்சி இனத்தவர்கல் சிலர் ஒன்றுகூடி ‘யங் சொராஸ்டியான் கிரிக்கெட் கிளப்’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து 1883-ல் இஸ்லாமிய இலைஞர்களால் ‘முகமதியன் கிரிக்கெட் கிளப்’ 1866-ல் இந்து இளைஞர்களால் ‘யுனைடட் கிரிக்கெட் கிளப்’ ஆகியவை தொடங்கப்பட்டன. இந்த கிளப்புகள் தங்களுக்குள்ளும், இங்கிலாந்து கிளப்களுடனும் பல்வேறு கிர்க்கெட் போட்டிகளில் விளையாட இந்த ஆட்டம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. இந்த நேரத்தில் உள்ளூரிலேயே கிரிக்கெட் ஆடுவதைவிட அதன் பிறப்பிடமான இங்கிலாந்துக்கே சென்று கிரிக்கெட் ஆடவேண்டும் என்ற ஆசை பார்சி கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த சில இளைஞர்களின் மனதில் எழுந்தது.
அவர்களின் இங்கிலாந்து பயணத்தைப் பற்றி நாளை பார்ப்போம்.
No comments:
Post a Comment