Powered By Blogger

Wednesday, December 11, 2019

விளையாட்டைத் தெரிந்துகொள்வோம்: - சூமோ


விளையாட்டுக்கள் என்றதும்   நம் நினைவுக்கு வருவது கிரிக்கெட்கால்பந்துஹாக்கிடென்னிஸ் போன்ற விளையாட்டுகள்தான்ஆனால் இதையும் தாண்டி ஏராளமான விளையாட்டுகள் இந்த உலகில் இருக்கின்றனஅவற்றில்  சிலவற்றை இப்பகுதியில் பார்ப்போம்:
சூமோ மல்யுத்தம்
ஒருசில விளையாட்டுகளைச் சொன்னதும் குறிப்பிட்ட ஒரு நாடு நம் நினைவுக்கு வந்துபோகும்அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று சூமோ மல்யுத்தம்சூமோ மல்யுத்தம் என்றதும் நம் நினைவுக்கு வருவது இடையில் அரையாடை மட்டுமே அணிந்துகொண்டுமல்யுத்த போஸில் நிற்கும் ஜப்பானிய குண்டு வீரர்கள்தான்ஆம் சூமோ மல்யுத்தம் முழுக்க முழுக்க ஜப்பானோடு தொடர்புடையது.
ஜப்பானில்   கு.மு முதலே சூமோ மல்யுத்தங்கள் நடந்து வந்திருப்பதாக அந்நாட்டின் வரலாறு கூறுகிறதுஆரம்ப காலங்களில்  பயிர்களை விளைவிப்பதற்காக  ஜப்பானிய வயல்களை உழுவதற்கு முன்புஅந்த வயல்வெளியில் சூமோ மல்யுத்த போட்டிகளை நடத்தி வந்துள்ளனர்பயிர் விளைச்சல் அமோகமாக இருக்க  கடவுளை வேண்டுவதற்காக இப்போட்டிகள் நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறதுபிற்காலத்தில் வயல்களில் இருந்த இந்த விளையாட்டு அரச சபைகளுக்கு வந்துள்ளதுமன்னர்களின் பொழுதுபோக்குக்காகவும்சிறந்த சாமுராய் யார் என்பதை நிரூபிப்பதற்காகவும் இப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளனசாமுராய் போர்வீரர்கள் தங்கள் உடல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த விளையாட்டை பயன்படுத்திக் கொண்டனர்.

சூமோ விளையாட்டின் விதி மிகவும் எளிமையானதுஇது கிட்டத்தட்ட நம் ஊர் மல்யுத்த போட்டியைப் போன்றதுதான்இடுப்பில் அரையாடையை மட்டும் அணிந்தசாமுராய்களைப் போல் கொண்டை போட்டுக்கொண்ட இரு வீரர்கள் ஒரு  4.57 மீட்டர் விட்டத்தைக் கொண்ட ஒரு வட்டத்துக்குள் நின்றுகொண்டு சண்டையிட வேண்டும்.  இப்படி வட்டத்துக்குள் நிற்கும் வீரர்கள்தங்கள் எதிராளியை அந்த வட்டத்தில் இருந்து வெளியே தள்ளிவிட வேண்டும்அல்லது எதிராளியை தூக்கி வீசவேண்டும்எதிராளியை இப்படி வட்டத்தை விட்டு வெளியேற்றினாலோஅல்லது மல்லாக்க தள்ளிவிட்டாலோ  புள்ளிகளைக் குவித்து வெற்றி பெறலாம்அதேநேரம் கால்களைத் தவிர உடலின் ஏதாவது ஒரு பகுதி தரையில் பட்டால்சம்பந்தப்பட்டவர் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்சூமோ மல்யுத்த வீரர்கள் பெரும்பாலும் 150 முதல் 200 கிலோ வரை உடல் எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் 6 சூமோ மல்யுத்த தொடர்கள் நடைபெற்று வருகின்றனஇப்போட்டிகளில்வெற்றி பெறுபவர்களுக்கு  ‘யோகோசுனா’ (மிகப்பெரிய சாம்பியன்) என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது. இப்பட்டத்தை வெல்லும் வீரர்களை  ஜப்பானிய மக்கள் ஹீரோக்களைப் போல் கொண்டாடுகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு மழைக்காலத்தின் இறுதியிலும் சூமோ மல்யுத்த வீரர்களுக்கு மதிப்பு கூடும். இக்காலத்தில் சூமோ வீரர்கள் வீட்டுக்குள் வந்து பீன்ஸ்களை எறிந்து, “பேய்களே ஓடிப்போய் விடுங்கள்; இந்த வீட்டை நல் அதிர்ஷ்டம் வந்து சேரட்டும்” என்று கத்தினால், அவ்வீட்டின் பீடைகள் ஒழியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் சூமோ வீரர்களை தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல மக்கள் போட்டி போட்டுக்கொண்டு காத்திருப்பார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க ஜப்பானில் சூமோ   வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு மக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்ஆனால் இதை ஈடுகட்டும் வகையில்உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சூமோ விளையாட்டில் ஈடுபாடு கொண்டுஇதைக் கற்று வருகிறார்கள்.

No comments:

Post a Comment