Powered By Blogger

Wednesday, December 11, 2019

இந்திய கிரிக்கெட் வரலறு - முதல் சதம்

இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக அணியின் கேப்டனை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழு கூடியது. கிரிக்கெட்டுக்காக அதிக அளவில் நிதி வழங்கிவந்த போர்பந்தர் மகாராஜா கேப்டனகவும், ஞான்ஷியாம்ஜி என்பவர் துணை கேடப்டனாகவும் நியமிக்கப்பட்டவர். இந்திய கிரிக்கெட்டில் அப்போது சூப்பர் ஸ்டாராக கருதப்பட்ட சி.கே.நாயுடுவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாததால், அணியின் வீரர்கள் பலரும் அதிருப்தியடைந்தனர்.
இந்திய கிரிக்கெட் வரலாறு
முதல் போட்டியும் முதல் கேப்டனும்
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பே இந்த அதிருப்தியைப் பற்றித் தெரியவர போர்பந்தர் மகாராஜாவும், ஞான்ஷியாம்ஜியும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக சி.கே.நாயுடு நியமிக்கப்பட்டார். அப்போது சி.கே.நாயுடுவின் வயது 37.

ஜூன் 25,1932- இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகாரபூர்வமான அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய நாள்தான் இது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தைப் பெற்ற 6-வது அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடிவிட, மைதானமே நிரம்பி வழிந்தது. புதிதாக டெஸ்ட் போட்டியில் ஆட வந்திருக்கும் இந்தியாவின் ஆட்டத்தைக் காணும் உற்சாகத்தில் அவர்கள் வந்திருந்தனர்.

வழக்கமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு நடக்கும் விஷயம்தான் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு நடந்தது. வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையைக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி இந்தியாவை இத்தொடரில் ஊதித் தள்ளியது. டெஸ்ட் தொடரில் தோற்றாலும் இந்த பயனத்தின்போது நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கவுண்டி அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடியது. 26 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய இந்திய அணி, அதில் 9-ல் வெற்றியைக் குவித்தது. இதில் அனைத்து முதல்தர போட்டியிலும் ஆடிய கேப்டன் சி.கே.நாயுடு 1,618 (சராசரியாக 40.45) ரன்களைக் குவித்தார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று வந்ததைத் தொடர்ந்து 1933-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டது. இந்த முறை இந்திய அணியின் பேட்டிங்கில் சி.கே.நாயுடுவுக்கு தோல் கொடுக்க லாலா அமர்நாத் என்ற இளம் வீரர் இருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் நாயுடுவின் அனுபவமும், லாலா அமர்நாத்தின் இளமைத் துடிப்பும் இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனால் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை லாலா அமர்நாத் பெற்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக அதுவே அவரது கடைசி சதமாகவும் இருந்தது. இதற்கு காரணம் அவரது முன்கோபம். அதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

No comments:

Post a Comment