Powered By Blogger

Sunday, November 15, 2020

விளையாட்டாய் சில கதைகள் - சேப்டர் 11 - 15

 நவம்பர் - 2 

3 ஓவர்களில் சதம் அடித்த பிராட்மேன் 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 3 ஓவர்களில் 50 ரன்களைக் குவிக்கும் அனிகளையும், பேட்ஸ்மேன்களையும் இன்று நாம் கொண்டாடி வருகிறோம்.  ஆனால் ஒரு பேட்ஸ்மேன் நினைத்தால் 3 ஓவர்களில் சதமே அடிக்க முடியும் என்பதை டான் பிராட்மேன் நிரூபித்த நாள் நவம்பர் 2, 1931. 

கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன் என்று எல்லோராலும் புகழப்படுபவர் டான் பிராட்மேன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட்ஸ்மேனான இவர், செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த வரிசையில் வெறும் மூன்றே ஓவர்களில் அடித்த இந்தச் சதமும் வருகிறது. 

1931-ம் ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி நடந்த  முதல்தர கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பிளாக்ஹீத் மற்றும் லித்கோ அணிகள் மோதின. இப்போட்டியில்  பிளாக்ஹீத் அணிக்காக பிராட்மேன் களம் இறங்கினார். அப்போது அவருக்கு வயது 23. அன்றைய  காலகட்டத்தில் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் என்பது 8 பந்துகளைக் கொண்டதாக இருந்தது.  

பிளாக்ஹீத் அணி முதலில் பேட்டிங் செய்ய, பிராட்மேன் களம் இறங்கினார். இப்போட்டியில் அவருக்கு எதிராக பில் பிளாக் என்பவர் முதல் ஓவரை வீசினார். இதற்கு முன்னர் நடந்த போட்டியில்தான் பிராட்மேனை சொற்ப ரன்களில் அவுட் ஆக்கியிருந்தார் பில் பிளாக். அதனால் அவரைப் பழிவாங்க எண்ணிய பிராட்மேன், முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டினார். அத்துடன் அவரது வேகம் தணியவில்லை அடுத்தடுத்து சிக்சர்களைப் பறக்கவிட்ட பிராட்மேன், முதல் ஓவரில் மொத்தம் 33 ரன்களைச் சேர்த்தார். அடுத்ததாக ஹாரி பேக்கர் என்ற பந்துவீச்சாளர் வர, அவரது ஓவரிலும் 40 ரன்களைக் குவித்த பிராட்மேன், பில் பி்ளாக் வீசிய 3-வது ஓவரில் தனது சதத்தை நிறைவு செய்தார். இந்த சதத்தை அடிக்க அவருக்கு 18 நிமிடங்களே தேவைப்பட்டன. 

இப்போட்டியில் அடுத்தடுத்த பந்துகளில் பிராட்மேன் அடித்த ரன்கள்  6, 6, 4, 2, 4, 4, 6, 1, 6, 4, 4, 6, 6, 4, 6, 4, 6, 6, 1, 4, 4, மற்றும் 6

 November -  

டென்னிஸ் உலகின் காதல் ஜோடி 

சினிமா நட்சத்திரங்களுக்கு இடையில் மட்டுமல்ல, விளையாட்டு வீரர்கள் இடையிலும் காதல் தோன்றுவதுண்டு. அப்படி கடந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற காதலர்களாய் இருந்த விளையாட்டு ஜோடிதான் ஜிம்மி கானர்ஸும், கிறிஸ் எவர்ட்டும். டென்னில் அரங்கில் ஆண்கள் பிரிவில் ஜிம்மி கானர்ஸும், பெண்கள் பிரிவில் கிறிஸ் எவர்ட்டும் சாதனைகளைப் படைத்துக்கொண்டிருந்த காலத்தில், 1970-களின் தொடக்கத்தில் இவர்களிடையே காதல் அரும்பியது.  

தாங்கள்  காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் இருவரும் பகிரங்கமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பத்திரிகைகளுக்கு தீனி போடும் நம்பர் ஒன் காதல் ஜோடியாக இவர்கள் உருவெடுத்தனர். முக்கிய டென்னிஸ்  போட்டிகளின்போதும், உல்லாசப் பயணங்களின்போதும் இந்த ஜோடியின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கென்றே சிறப்பு நிருபர்களை மேற்கத்திய பத்திரிகைகள் களம் இறக்கின. 

தாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக கானர்ஸும், கிறிஸ்ஸும் அறிவிக்க, அந்த நாளுக்காக அனைவரும் காத்திருந்தனர். 

 

இந்தச் சூழலில் ஒருநாள், தாங்கள் பிரிந்துவிட்டதாக இவர்கள் அறிவித்தனர். பிரிவுக்கான காரனம் பல ஆண்டுகளாக தெரியாமல் இருந்த நிலையில் இந்த கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்துள்ளார் ஜிம்மி கானர்ஸ்.  “எங்கள் காதலின் அடையாளமாக கிறிஸ் எவர்ட்டின் வயிற்றில் ஒரு கரு உருவானது. அதைக் கலைக்க அவர் விரும்பினார். அதை நான் ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் என் பேச்சை கேட்காமல் கருவைக் கலைத்ததால் நான் அவரை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார் ஜிம்மி கானர்ஸ். 

ஜிம்மி கானர்ஸையும், தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் விட டென்னிஸ் விளையாட்டை கிரிஸ் அதிகம் நேசித்திருக்கலாம். உறவுகளால் தன் டென்னிஸ் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவர் கானர்ஸைப் பிரிந்திருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். காதலை இழந்த கிறிஸ், டென்னிஸில் மட்டும் தன் பிடியை விடவில்லை. 1975-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

--------------- ------------------------- 

நவம்பர் -4  

ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் 

ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப காலகட்டங்களில் ஹாக்கி விளையாட்டு மட்டுமே இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளதுஇந்தச் சூழலில்தனிநபர் பிரிவிலும் இந்தியாவால் பதக்கங்களை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர்  கே.டி.ஜாதவ் என்று அழைக்கப்படும் கஷாபா தாதாசாஹேப் ஜாதவ்.  1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில்மல்யுத்தத்தில் இவர் வென்ற வெண்கலப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கம்

ஹெல்சிங்கியில் நடந்த இந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்பது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லைஇவர் பங்கேற்பதாக இருந்த ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டிக்கு முதலில்  நிரஞ்சன் தாஸ் என்பவர்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார்இதைக் கேள்விப்பட்டதும் பதறிப் போனார் ஜாதவ்உடனடியாக விளையாட்டுத் துறையில் செல்வாக்கு கொண்ட,  பாட்டியாலா மகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்ஜாதவைப் பற்றி நன்கு தெரிந்தவரான பாட்டியாலா மகாராஜாவும் அவருக்கு உதவ முன்வந்தார்நிரஞ்சன் தாஸுக்கும்ஜாதவுக்கும் இடையில் போட்டி நடத்தி  அதில் வெல்பவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்இதன்படி நடந்த போட்டியில் நிரஞ்சன் தாஸை வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் ஜாதவ்

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும்இதில் பங்கேற்கச் செல்ல போதிய நிதி இல்லாமல் ஜாதவ் தவித்தார்இந்த சமயத்தில் அவர் படித்தராஜாராம் கல்லூரியின் முதல்வர் ஜாதவுக்கு உதவினார்தன் வீட்டை அடகுவைத்து ரூ.7,000 வழங்கினார்மேலும் சில நண்பர்களும் உதவஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார் ஜாதவ்தன்னை கஷ்டப்பட்டு ஒலிம்புக்கு அனுப்பிய நண்பர்கல் பெருமைப்படும் விதத்தில் இப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்

November  - 5 

பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்! 

இந்திய கிரிக்கெட்டின் இப்போதைய பெருமையாக கருதப்படும் கோலியின் பிறந்தாள் இன்று (நவம்பர் 5). உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் கோலி,  86 டெஸ்ட் போட்டிகளில் 7,240 ரன்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் 11,867 ரன்களையும் குவித்துள்ளார்சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் விளாசியுள்ள சதங்களின் எண்ணிக்கை மட்டும் 70. இந்த அளவுக்கு வேகமாக கோலி ரன்களைக் குவிப்பதற்கு காரணம் அவரது மன உறுதிஇதற்கு  உதாரணமாக 2006-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்,.    

2006-ம் ஆண்டில்   டெல்லி அணிக்காக  கோலி ஆடிக்கொண்டு இருந்தார்.  இந்த நேரத்தில்  கர்நாடகாவுக்கும் டெல்லிக்கும் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்தது.  முதலில் ஆடிய கர்நாடகா 446 ரன்களைக் குவிக்கஅடுத்து ஆடிய டெல்லி அணி   அடுத்தடுத்து  105 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது.  விராட் கோலி 40 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.  அடுத்த நாள் ஆட்டத்தில்    கோலியையே அணி நம்பியிருந்ததுஇந்தச் சூழலில் அன்றைய தினம் கோலியின் அப்பா பிரேம் கோலி காலமானார்

   

அப்பா இறந்ததால் அடுத்த நாள்   விராட் கோலி ஆடமாட்டார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர்ஆனால் அதற்கெல்லாம் மாறாக அடுத்த நாளே பேட்டும் கையுமாக மைதானத்தில் ஆஜரான கோலிதந்தை இறந்த துக்கத்தையும் மறந்து 90 ரன்களைச் சேர்த்தார்டெல்லி அணி பாலோ ஆன் ஆகாமல் காத்தார்அந்த மன உறுதிதான் அவரை உலகின் நம்பர் ஒன் வீரனாக்கியுள்ளது

 

நவம்பர்  - 6 

  

கடன்வாங்கி உருவான விளையாட்டு 

 ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டை  ஜேம்ஸ் நைஸ்மித் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில்அக்கல்லூரியில் மாணவராக இருந்தார் வில்லியம் ஜி.மோர்கன்.  பின்னர் அதே கல்லூரியில் இவர் விளையாட்டுத் துறை ஆசிரியராக சேர்ந்ததும்தன் ஆசிரியரின் வழியில் புதிதாக ஒரு ஆட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்

 

அப்படி நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அவர் கண்டுபிடித்த விளையாட்டுதான் வாலிபால்கூடைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தும்  பந்துடென்னிஸ் போட்டிகளில் பயன்படுத்தும்  வலைகைப்பந்து விளையாட்டில் இருந்து கைகளைப் பயன்படுத்தும் முறை  என பல விளையாட்டுகளில் இருந்து சிற்சில விஷயங்களை கடன்வாங்கிஅவற்றை ஒன்றாக கலந்து  1895-ம் ஆண்டில் அவர் வாலிபால் விளையாட்டை உருவாக்கினார்

ஆரம்பத்தில் ‘மிண்டோனெட் என்று பெயரிடப்பட்ட இந்த விளையாட்டுமிகக்குறைந்த நாட்களிலேயே கல்லூரி மாணவர்களிடமும்ஒய்எம்சிஏ அங்கத்தினரிடமும் பிரபலமடைந்ததுபின்னாளில் ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர்ஆல்பிரட் ஹல்ஸ்டெட்இவ்விளையாட்டுக்கு ‘வாலிபால் என்று பெயரிட்டார்.   

 

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வந்த வாலிபால், 1913-ம் ஆண்டில் ஆசியாவுக்குள் அடியெடுத்து வைத்ததுதொடக்கத்தில் இங்கு நடந்த வாலிபால் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் தலா 16 வீரர்கள் இடம்பெற்றனர்.  1916-ம் ஆண்டில் வாலிபால் விளையாட்டுக்கென  விதிகள் வகுக்கப்பட்டனதிருத்தப்பட்ட விதிகளின் கீழ் வாலிபால் விளையாட்டில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைக் கொண்டிருக்கலாம்இதில் 3 வீரர்கள் முன்வரிசையிலும், 3 வீரர்கள் பின்வரிசையிலும் இருக்க வேண்டும்தேவைப்பட்டால் ஆட்டத்தின்போது  வெளியில் உள்ள உபரி வீரர்களை மாற்று வீரர்களாக களத்தில் இறக்கலாம்.  வாலிபால் போட்டிகள் 3 செட்களைக் கொண்டதாக இருக்கும் முதல் 2 செட்களில் 25 புள்ளிகளை முதலில் எட்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.   

No comments:

Post a Comment