Powered By Blogger

Friday, October 22, 2021

பளிச் 10- செப்டம்பர் 1-5

 செப்டம்பர்  1

செப்டம்பர் மாதம்
1. பண்டைக்கால ரோமானிய காலண்டரில், செப்டம்பர் 7-வது மாதமாக இருந்தது.
2. லத்தீன் மொழியில்  ‘செப்டம்’ என்றால் 7 என்று அர்த்தம்.
3. பண்டைய ரோமன் காலண்டரில், செப்டம்பர் மாதத்துக்கு 29 நாட்கள் மட்டுமே இருந்தன. பிற்காலத்தில் ஜூலியஸ் சீசர்தான் இம்மாதத்தில் ஒரு நாளைக் கூட்டினார்.
4. நெருப்புக் கடவுளின் மாதமாக ரோமானியர்கள் இம்மாதத்தை கருதுகின்றனர்.
5. 1939-ம் ஆண்டில் செப்டம்பர் 1-ம் தேதியன்று  போலந்து நாட்டின் மீது ஹிட்லர் படையெடுத்தார்.
6. உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலும் செப்டம்பர் மாதத்தில்தான் நடைபெற்றது.
7. அமெரிக்காவில் மற்ற மாதங்களை விட, செப்டம்பர் மாதத்தில்தான் அதிக குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
8. உலகில் பல நாடுகளில் செப்டம்பர் மாதத்தில்தான் கல்வியாண்டு தொடங்குகிறது.
9. சிலி, உஸ்பெகிஸ்தான், கத்தார், பிரேசில், மெக்சிகோ  உள்ளிட்ட பல நாடுகள் இந்த மாதத்தில்தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன.
10. காயங்களுக்கு ஒட்டும் பேண்ட்-எய்ட், 1920-ம் ஆண்டு செப்டம்பரில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
செப்டம்பர் 2
 
தேங்காய்
1.செப்டம்பர் 2-ம் தேதி, உலக தேங்காய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2. மாலத்தீவின் தேசிய மரமாக தென்னை மரம் உள்ளது.
3. உலகில் ஆண்டுதோறும் சுமார் 61  மில்லியன் டன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
4. தென்னை மரங்கள் அதிகபட்சமாக 25 மீட்டர்கள் வரை வளரும்.
5 . தேங்காய் உற்பத்தியில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
6. ஒருசில நாடுகளில் தேங்காய்களைப் பறிக்க குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
7.தென்னை மரங்கள் பொதுவாக 6 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்.
8. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 75 தேங்காய்கள் வரை கிடைக்கும்.
9. காட்டுப்பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் 100 ஆண்டுகள் வரைகூட அழியாமல் இருக்கும்.
10. பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபர் இல்லம் மற்றும் அலுவலகம், அதிக அளவில் தென்னை மரத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
------------------------------------
செப்டம்பர் 3
தேநீர்
1. கிமு 2737-ம் ஆண்டில் சீனாவின் பேரரசராக இருந்த ஷென்னோங், தேநீரை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
2.தான் குடிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில் தேயிலைகள் எதேச்சையாக விழுந்ததால், அதன் சுவை அவருக்கு தெரியவந்துள்ளது.
3. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம்  அருந்தப்படுவது தேநீர்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. ஆண்டொன்றுக்கு 6.5 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக  தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.
5. 1904-ம் ஆண்டில் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கண்காட்சியில் ஐஸ் டீ அறிமுகமானது.
6. தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல் அமைந்திருக்கும்.
7. தேயிலை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
8. உலகில் அதிக விலைமதிப்புள்ள தேயிலையாக டார்ஜிலிங்கில் விளையும் தேயிலை விளங்குகிறது.
9. இந்தியாவில்  ஆண்டொன்றுக்கு 62 லட்சம் டன் தேயிலை பயன்படுத்தப்படுகிறது.
10. அமெரிக்காவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ‘டீ பேக்’ கண்டுபிடிக்கப்பட்டது.
-----------------------
செப்டம்பர் 4
பொற்கோயில்
1. ஐந்தாவது சீக்கிய மதகுருவான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் 1581-ம் ஆண்டில் பொற்கோயில் கட்டும் பணிகளைத் தொடங்கினார்.
2. பொற்கோயிலைக் கட்ட 8 ஆண்டுகள் ஆகியுள்ளன.
3. பொற்கோயில் அமைவதற்கு முன்பாக இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் குரு நானக் தியானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
4. 1762-ம் ஆண்டில் நடந்த படையெடுப்புகளின்போது இக்கோயில் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஜா ரஞ்சித் சிங் இதை புதுப்பித்துக் கட்டினார்.
5. புனிதத் தலமாக கருதப்படும் பொற்கோயிலுக்கு, பிற மதங்களைச் சேர்ந்த சுமார் 35 சதவீதம் பேர் ஆண்டுதோறும் வருகின்றனர்.
6. புதுப்பித்து கட்டும்போது இக்கோயிலின் கூரைப் பகுதியில் தங்கத் தகடுகளைப் பொருத்தியதால் இக்கோயில் பொற்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
7. பொற்கோயிலுக்கு, ‘தர்பார் சாஹிப்’, ‘ஹர்மந்தர் சாஹிப்’ ஆகிய பெயர்களும் உள்ளன.
8. கவுதம புத்தர் சில காலம் பொற்கோயிலில்  இருந்ததாக கூறப்படுகிறது. அக்காலத்தில் பொற்கோயில் வனங்களால் சூழப்பட்டிருந்தது.
9. பொற்கோவிலைச் சுற்றி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏரி அமைந்துள்ளது.
10.பொற்கோயிலில் விசேஷ நாட்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது

பளிச் 10 செப்டம்பர் 6 - 9

 செப்டம்பர் 6

கிரிக்கெட் பேட்
1. தொடக்க காலத்தில் கிரிக்கெட் பேட்கள் (மட்டைகள்), ஹாக்கியில் பயன்படுத்தப்படும் பேட்களைப் போல்தான் இருந்துள்ளன.
2. 1770-ம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கென விதிகள் வகுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துதான் கிரிக்கெட் பேட்டின் வடிவமும் தற்போது இருப்பதைப் போல் மாறியுள்ளது.
3. கிரிக்கெட் விதிகளின்படி,  பேட்களின் நீளம் 38 அங்குலத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது.
4. கிரிக்கெட் பேட்களின் அகலம் 10.8 சென்டிமீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது என்பதும் விதியாக உள்ளது.
5. பெரும்பாலும் வில்லோ எனப்படும் மரத்தைப் பயன்படுத்தித்தான்  கிரிக்கெட் பேட்கள் தயாரிக்கப்படுகின்றன.
6. 1979-ல் ஆஸ்திரேலிய வீரரான டென்னிஸ் லில்லி, அலுமினயத்தால் ஆன பேட்டைப் பயன்படுத்தி உள்ளார்.
7. இந்தியாவில் 1920-ம் ஆண்டில் இருந்துதான் தரமான கிரிக்கெட் பேட்கள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
8. அதிக கனமாக மற்றும் உயரம் குறைந்த பேட்களை சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்தி வந்தார்.
9. மிகச்சிறிய கைப்பிடியைக் கொண்ட கிரிக்கெட் பேட்களை வீரேந்தர் ஷேவக் பயன்படுத்தினார்.
10. விராட் கோலி பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டின் எடை 1.23 கிலோவாகும்.
------------------------------------------
செப்டம்பர் 7
பிரேசில்
1. போர்ச்சுக்கல் நாட்டிடம் சுமார் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த பிரேசில், 1822-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி விடுதலை பெற்றது.
2. பிரேசில் நாட்டின் தலைநகராக ரியோ டி ஜெனீரோதான் இருந்துவந்தது.  1961-ம் ஆண்டில் பிரேசிலியா நகருக்கு தலைநகரம் இடம் மாற்றப்பட்டது.
3. ஆஸ்கர் நீமேயர் என்பவர்தான் தலைநகர் பிரேசிலியாவை வடிவமைத்தார்
4. பிரேசில் நாட்டைச் சேர்ந்த மக்கள் சராசரியாக ஆண்டொன்றுக்கு 5.5 கிலோ காபி கொட்டைகளை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
5.பிரேசிலில் 90 சதவீதம் வீடுகளில் தொலைக்காட்சிகள் உள்ளன.
6. பிரேசில் நாட்டில் 180 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
7. நைஜீரியாவுக்கு அடுத்ததாக கறுப்பின மக்கள் அதிகம் வாழும் நாடாக பிரேசில் உள்ளது.
8. இயற்கை அழகுக்கு புகழ்பெற்ற பிரேசிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
9. கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்ற பிரேசில் நாடு, இதுவரை 5 முறை உலகக் கோப்பை கால்பந்தை வென்றுள்ளது.
10. 1870-ம் ஆண்டுமுதல் பிரேசில் எந்தப் போரிலும் பங்கேற்றதில்லை
-------------------------------------------------------------------
செப்டம்பர் 8
தூக்கம்
1.மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கை தூங்கிக் கழிக்கிறார்கள்.
2. ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. சாண்டியாகோ நகரில் நடந்த அறிவியல் கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற ராண்டி என்ற மாணவர், அதிகபட்சமாக 11 நாட்கள் 25 நிமிடங்கள் தூங்காமல் இருந்து சாதனை படைத்துள்ளார்.
4. யானைகள் மிகக் குறைந்த அளவாக நாளொன்றுக்கு 3 மணிநேரம் மட்டுமே தூங்குகின்றன.
5. சிறு குழந்தைகள் அதிகபட்சமாக 16 மணி நேரம்வரை உறங்குகின்றன.
6. மனிதர்கள் தங்கள் தூக்கத்தில் சராசரியாக 4 முதல் 6 கனவுகள் வரை காண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
7. பெரும்பாலானவர்களுக்கு தூங்கி எழுந்த 5 நிமிடங்களுக்குள் தூக்கத்தில் கண்ட 50 சதவீத கனவுகள் மறந்துவிடுகின்றன.
8. மனிதர்களைப் போலவே மிருகங்களும், பூச்சிகளும்கூட சரியாக தூக்கம் வராமல் சில நேரங்களில் தவிக்கும்.
9. உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் தூக்கத்தை தள்ளிப் போடுகிறார்கள்.
10. ஆரோக்கியமான மனிதர்கள், படுத்த 7 நிமிடங்களுக்குள் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றுவிடுகிறார்கள்.
 
 ---------------------------------------------------------------
செப்டம்பர் 9
செவ்வாய் கிரகம்
1. ரோமானிய போர்க் கடவுளின் நினைவாக செவ்வாய் கிரகத்துக்கு ‘மார்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2. செவ்வாய் கிரகத்தில்  டீமோஸ், போபோஸ் என இரண்டு நிலவுகள் உள்ளன.
3. செவ்வாய் கிரகம் சூரியனில் இருந்து சுமார் 141 மில்லியன் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
4. பூமியை விட சிறியதான செவ்வாய் கிரகத்தின் விட்டம் 4,217 மைல்களாகும்.
5. மார்ஸ் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 மணிநேரம் 37 நிமிடங்களைக் கொண்டதாகும்.
6. செவ்வாய் கிரகத்தின் ஓர் ஆண்டு 687 நாட்களைக்  கொண்டதாகும்.
7. பூமியை விட செவ்வாய் கிரகத்தில் சுமார் 37 சதவீதம்  புவியீர்ப்பு சக்தி குறைவு.
8. பூமியைப் போன்றே செவ்வாய் கிரகத்திலும் வட துருவமும், தென் துருவமும் இருக்கின்றன.
9. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மலை, 27 கிலோமீட்டர் உயரம் கொண்டது.
10.  பூமியைவிட செவ்வாய் கிரகத்தில் அதிக குள்ர்ச்சியான சூழல் நிலவுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பளிச் 10 செப்டம்பர் 9- 12

 செப்டம்பர் 9

72. சர்க்கரை
1. உலகில் உற்பத்தியாகும் சர்க்கரையில் 80 சதவீதம் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
2. பாபுவா நியூ கினியாவில் கி.மு. 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரும்பை பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
3.  ‘ஷர்க்கரா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்துதான் ‘ஷுகர்’ என்ற ஆங்கில வார்த்தை தோன்றியுள்ளது.
4. லண்டன் நகரில் 16-ம் நூற்றாண்டில் ஒரு ஸ்பூன் சர்க்கரையின் விலை 5 டாலர்களாக இருந்துள்ளன.
5. கரும்பு உற்பத்தியில் பிரேசில் நாடு முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
6. 2018-19-ம் ஆண்டில் 33 மில்லியன் டன் சர்க்கரையை இந்தியா உற்பத்தி செய்தது.
7. உலகில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் சர்க்கரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
8. ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக சர்க்கரை பயன்படுத்தப்பட்டது.
9. சர்க்கரையை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
10. பெண்களைவிட ஆண்கள் அதிக அளவில் சர்க்கரை சேர்த்துக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
----------------------------------------------------------------------
செப்டம்பர் 10
73. கிடார்
1. உலகின் முதல் கிடார்,   3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் உருவாக்கப்பட்டது.
 2. ‘கிடாரா’ என்ற ஸ்பானிஷ் வார்த்தையில் இருந்து ‘கிடார்’ என்ற ஆங்கில வார்த்தை பிறந்துள்ளது.
3. 1931-ம் ஆண்டில் எலக்டிரிக் கிடார் அறிமுகமானது.
4. உலகின் மிகப்பெரிய கிடார், டெக்சாஸ் நகரில் தயாரிக்கப்பட்டது. அதன் நீளம் 13 மீட்டர்.
5. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரான ஆண்டோனியோ டோரஸ் ஜுராடோ என்ற கிடார் கலைஞர் தற்போது பயன்படுத்தப்படும்  நவீன கிடாரை வடிவமைத்தார்.
6. அர்ஜென்டினாவில் கிடார் வடிவிலான ஒரு காடு உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோ மார்ட்டின் உரேடா என்பவர் இதை உருவாக்கியுள்ளார்.
7. ஃபெண்டர் நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 90 ஆயிரம் கிடார் கம்பிகளைத் தயாரிக்கிறது.
 8. 2004-ம் ஆண்டில் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக நிதி திரட்டுவதற்காக ஏலம் விடப்பட்ட கிடார் 2.8 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
9. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டேவ் பிரவுனி என்ற கலைஞர் தொடர்ந்து 114 மணி நேரம் 6 நிமிடங்கள் கிடாரை இசைத்து சாதனை படைத்துள்ளார்.
 10. ஆண்களைவிட பெண்கள் கிடார் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
----------------------------------------------
செப்டம்பர் 11
74. இரட்டை கோபுரம் மீதான தாக்குதல்
1. உலகில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் மிகப்பெரிய தாக்குதல் அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் ஆகும்.
2. இந்த தாக்குதலில், இரட்டை கோபுரத்தின் இரண்டாவது கோபுரம் 10 விநாடிகளுக்குள் விழுந்து நொறுங்கியது.
3. அமெரிக்கா மீதான இந்த தாக்குதலுக்கான திட்டத்தில் அல் கொய்தா இயக்கத்தின் 19 தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தனர்.
4. தீவிரவாத  தாக்குதல் நடந்து 10 வருடங்களுக்குப் பிறகு இதற்கு மூலகாரணமான ஒசாமா பின் லேடன் அமெரிக்க வீரர்களால் கொல்லப்பட்டார்.
5. இந்த தீவிரவாத தாக்குதலில் 2,996 பேர் கொல்லப்பட்டனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
 6. தீவிரவாதிகளின் இந்த தாக்குதலால் பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு 10 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
7. தாக்குதலுக்கு பிறகு அதனால் ஏற்பட்ட 1.80 மில்லியன் டன் இடிபாடுகளை அகற்ற 9 மாதங்கள் ஆனது.
8. இந்த தாக்குதலில், கட்டிடத்தில் இருந்த 20 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
9. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை பென்ட்பாம் (PENTTBOM) என்ற பெயரில் எஃப்பிஐ நடத்தியது.
10. இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு,  அமெரிக்காவில் விமானங்கள் பறக்க 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.
-----------------------------------------------------------
 
 செப்டம்பர் 12
75. டூத் பிரஷ்
1. சீனாவில் டாங் சாம்ராஜ்யம் ஆட்சியில் இருந்த காலத்தில் (619-907) டூத் பிர்ஷ்கள் அறிமுகமானதாக கூறப்படுகிறது.
2. சீனாவில் இருந்து வந்த பயணிகள் மூலம் 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில்  டூத்பிரஷ்கள் அறிமுகமாகின.
3. உலகில் 24 சதவீதம் பேர் தங்கள் டூத் பிரஷ்களை வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்துகொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
4. 1954-ம் ஆண்டில் முதலாவது எலக்ட்ரிக் டூத் பிரஷ் அறிமுகமானது.
5. மனிதர்கள் சராசரியாக பல் துலக்குவதற்கு தினந்தோறும் 4 நிமிடங்களை செலவு செய்கிறார்கள்.
6. ஒரு மனிதன் தனது ஆயுள்காலத்தில் சராசரியாக 38.5 நாட்களை பல் தேய்ப்பதற்காக செலவிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
7. டூத் பிரஷ்ஷில் உள்ள முட்கள் ஆரம்பத்தில் பசுவின் முடிகளால் செய்யப்பட்டன. தற்போது அவை நைலான் இழைகளால் செய்யப்படுகின்றன.
8. டூத்பிரஷ்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
9. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 700 மில்லியன் டூத்பிரஷ்கள் விற்பனையாகின்றன.
10. ரஷ்யாவைச் சேர்ந்த கிரிகரி பீஷர் என்பவர் பல்வேறு வகையான 1,320 டூத் பிர்ஷ்களை சேகரித்து வைத்துள்ளார்.

பளிச் 10 செப்டம்பர் 14 - 22

 செப்டம்பர் 14

பக்கிங்காம் அரண்மனை
1. பக்கிங்காம் அரண்மனை 1703-ம் ஆண்டில் இங்கிலாந்து கட்டிட வடிவமைப்பாளரான வில்லியம் விண்டேவால்  கட்டப்பட்டது.
2. இங்கிலாந்து அரச குடும்பத்துக்குச் சொந்தமான  இந்த அரண்மனை, 39 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ளது.
3. 19-ம் நூற்றாண்டில் இந்த மாளிகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
4. இந்த அரண்மனையில் 775 அறைகள் உள்ளன. இதில் 52 அறைகள் அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் விருந்தினர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
5. பக்கிங்காம் அரண்மனையில்  760 ஜன்னல்களும், 1,514 கதவுகளும் உள்ளன.
6. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் 9 முறை இந்த அரண்மனை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 7. இந்த அரண்மனைக்குள் 350 சுவர்க் கடிகாரங்கள் உள்ளன. இவற்றைப் பராமரிப்பதற்காகவே ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
8. பக்கிங்காம் அரண்மனைக்குள் பல்வேறு சுரங்கப் பாதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
9. ஹெலிகாப்டர் தளம், பிரம்மாண்ட தோட்டம், ஏரி, நீச்சல் குளம்  ஆகியவையும் இந்த அரண்மனைக்குள் அமைந்துள்ளன.
10. அரண்மனையின் கிழக்குப் பகுதியில் உள்ள பால்கனி மீது நின்று மக்களை சந்திப்பதை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

--------------------------------------------
செப்டம்பர் 15
அணில்
1. அணில்கள் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர்  வரை வளரும்.
2. வீட்டில் வளர்க்கப்படும் அணில்கள் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரையும், காட்டில் வளரும் அணில்கள் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையும் உயிர்வாழும்.
3. ஒருசில வகை அணில்களால் 300 அடி தூரம் வரை பறக்க முடியும்.
4. அணில்கள் கருவுற்ற 45 நாட்களுக்குள் குட்டிகளை ஈனும்.
5. அணில்களுக்கு 4 முன்னம்பற்கள் இருக்கும். அவை வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டது.
6. பழங்கள், அவற்றின் கொட்டைகள், இலைகள், பூச்சிகள் ஆகியவற்றை உண்டு அணில்கள் உயிர்வாழும்.
7. மழையில் இருந்து காத்துக்கொள்ளவும், நீச்சல் அடிக்கவும், உடல் எடையை சமமாக வைத்துக்கொள்ளவும் அணில்களுக்கு அவற்றின் வால்கள் உதவுகின்றன.
8. சில வகை அணில்கள், மண்ணுக்கு அடியில் சுரங்கம் தோண்டி  உணவுகளைச் சேகரித்து வைக்கும்.
9. அணில்களால் குதிக்கும்போது 180 டிகிரி வரை உடலைத் திருப்ப முடியும்.
10. ஆஸ்திரேலியாவைத் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அணில்கள் உள்ளன.
---------------------------------
செப்டம்பர் 16
டொனால்ட் டக்
1. 1934-ம் ஆண்டில் வெளியான ‘தி லிட்டில் வைஸ் ஹென்’ என்ற குறும்படத்தில் முதல்முறையாக டொனால்ட் டக் கதாபாத்திரம் இடம்பெற்றது.
2. இக்கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார்.
3. ஓவல் மைதானத்தில் நடந்த  கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் டொனால்ட் பிராட்மேன்  டக் அவுட் ஆனார். இதை நினைவுபடுத்தும் வகையில் ‘டொனால்ட் டக்’ என்று தன் பாத்திரத்துக்கு டிஸ்னி பெயர் வைத்தார்.
 4. டொனால்ட் டக்கின் முழுப்பெயர் டொனால்ட்  ஃபாண்டிலெரி டக். .
5. மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தைவிட டொனால்ட் டக் 6 வயது இளையதாகும்
 6. கில்ரன்ஸ் நாஷ், டோனி அன்செல்மோ, டானியல் ராஸ் ஆகிய 3 நடிகர்கள் டொனால்ட் டக் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளனர்.
 7. இரண்டாம் உலகப் போரின்போது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த டொனால்ட் டக்கின் திரைப்படங்கள்  அதிகமாக திரையிட்டு காட்டப்பட்டது.
8. ஜெர்மனிக்கு எதிரான படம் இன்றில் டொனால்ட் டக் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது.
9. மார்ச் 13-ம் தேதி டொனால்ட் டக்கின் பிறந்தநாளாக அனுசரிக்கப்படுகிறது.
10. டொனால்ட் டக்கின் காதலியாக டெய்சி டக் என்ற கதாபாத்திரம் அறியப்படுகிறது.
-------------------------------------------------------------------
செப்டம்பர் 17
இந்தியப் பெருங்கடல்
1. இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு  73,440,000 சதுர கிலோமீட்டராகும்.
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
3. ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா அண்டார்டிகா ஆகிய 4 கண்டங்களை இந்தியப் பெருங்கடல் இணைக்கிறது.
4.  உலகின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ளது.
5. பனிப்பாறைகள் உருகி வருவதால், இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு  ஆண்டுதோறும் 20 சென்டிமீட்டர் வரை அகலமாகி வருகிறது.
6. உலகுக்கு தேவையான எண்ணெய்யில் சுமார் 40 சதவீதம், இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.
7. கப்பல்களில் இருந்து கசியும் எண்ணெய்யால் ஆண்டுதோறும் அதிக அளவிலான சுற்றுச்சூழல் மாசுபாடு இந்தியப் பெருங்கடலில் ஏற்படுகிறது.
8. இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள சுண்டா டிரெஞ்ச் என்ற பகுதி இந்திய பெருங்கடலின் ஆழமான (25,344 அடி) பகுதியாகும்.
9. இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரின் வெப்பநிலை அதிகம் என்பதால், மற்ற கடல்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான நீர்வாழ் உயிரினங்களே இதில் உள்ளன.
10. இந்தியப் பெருங்கடலில் இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட 7 தீவுகள் உள்ளன.
 
.---------------------------
செப்டம்பர் 18
பியானோ
1. பியானோ இசைக்கருவி, 1709-ம் ஆண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பர்டொலோமோ டி பிரான்சஸ்கோ கிறிஸ்டோஃபொரி என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்டது.
2 .பியானோக்கள் முதலில் பியானோஃபோர்ட் என்று அழைக்கப்பட்டன.
3. பியானோக்கள் சராசரியாக சுமார் 450 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
4 இந்த இசைக்கருவியில் 12 ஆயிரம் பாகங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரம் பாகங்கள் அசையும்  பாகங்களாகும்.
5. உலகின் மிகப்பெரிய பியானோ, நியூஸிலாந்தில் அட்ரியான் மான் என்பவரால் உருவாக்கப்பட்டது. 5.7 மீட்டர் நீளம் கொண்ட இந்த பியானோவின் எடை 1.4 டன்.
6. அமெரிக்காவில் மட்டும் சுமார் 18 மில்லியன் பியானோ இசைக் கலைஞர்கள் உள்ளனர்.
7. உலகின் மிகச்சிறந்த பியானோவாக ஸ்டீன்வே நிறுவனம் தயாரிக்கும் பியானோக்கள் விளங்குகின்றன.
8. அதிக விலைமதிப்புள்ள பியானோ, 3.22 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.
9. பியானோவில் உள்ள விசைகள், முன்பு யானைகளின் தந்தங்களால் தயாரிக்கப்பட்டன.
10. போலந்து நாட்டைச் செர்ந்த ரொமால்ட் கோபர்ஸ்கி என்பவர் பியானோவை தொடர்ந்து 103 மணிநேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார்.
 

பளிச் 10 - செப்டம்பர் 18- 22

 செப்டம்பர் 18

புர்ஜ் கலிஃபா

1. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா,  828 மீட்டர்கள் உயரம் கொண்டது.
2. துபாயில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில் 160 மாடிகள் உள்ளன.
3.   95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே இக்கட்டிடத்தைக் காணமுடியும்.
4. இக்கட்டிடத்தை கட்டும் பணியில் நாள்தோறும் சுமார் 12 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
5.இக்கட்டிடத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை ஒருவர்  முழுமையாக துடைத்து முடிக்க 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
6. புர்ஜ் கலிஃபாவை  கட்டும் பணி 2004-ம் ஆண்டில் தொடங்கி, 2010-ம் ஆண்டில் நிறைவுபெற்றது.
7. இக்கட்டிடத்தின் 122-வது மாடியில் ஓட்டல் அமைந்துள்ளது.
8. புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் உள்ள லிப்ட் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகிறது.
9. தரைப்பகுதியைவிட புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் 15 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
10. இக்கட்டிடத்தைவிட உயரமான கட்டிடம் தற்போது ஜத்தா நகரில் கட்டப்பட்டு வருகிறது.
 
----------------------------------------------
செப்டம்பர் 19
ஐபிஎல் கிரிக்கெட்
1. முதலில் 1995-ம் ஆண்டில் 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட தொடராக ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
2. ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதல் இன்றுவரை கேப்டனை (தோனி)  மாற்றாத ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
3. ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் அதிகமாக (6 முறை) ஆடிய  அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
4. மும்பை இந்தியன்ஸ் அணி, அதிகபட்சமாக 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
5. ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக விராட் கோலி 177 போட்டிகளில்  5,412 ரன்களைக் குவித்துள்ளார்.
6. ஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய வீரர் பிரவீன் குமார். இவர் மொத்தம் 14 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.
7. ஹர்பஜன் சிங், பார்த்தீவ் படேல் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அதிக முறை (13) டக் அவுட் ஆகியுள்ளனர்.
8. ஐபிஎல்லில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் கிறிஸ் கெயில். இவர் 125 ஆட்டங்களில் 326 சிக்சர்களை அடித்துள்ளார்.
9. அமித் மிஸ்ரா, இத்தொடரில் அதிகமாக 3 முறை ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
10. இலங்கை வீரரான மலிங்கா, இத்தொடரில் அதிகபட்சமாக 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
 
------------------------
செப்டம்பர் 20
பென்குயின்
1. உலகில் 17 வகையான பென்குயின்கள் உள்ளன.
2. மிகச் சிறிய வகை பென்குயின்கள் 12 அங்குலம் வரை மட்டுமே வளரும்.
3. மிகப்பெரிய வகை பென்குயின்கள் 4 அடி உயரம் வரை வளரும்.
4. பெண் பென்குயின்கள் இரைதேடச் செல்லும் சமயங்களில் ஆண் பென்குயின்கள் முட்டைகளை அடைகாக்கும்.
5. பென்குயின்களால் மணிக்கு 22 மைல் வேகத்தில் நீந்திச் செல்ல முடியும்.
6. பென்குயின்கள் இரை தேடுவதற்காக 50 கிலோமீட்டர் தூரம்வரை நீந்திச் செல்லும்.
7. பென்குயின்களால் தண்ணீருக்கு அடியில் 6 ஆயிரம் அடிவரை செல்ல முடியும்.
8. உலகின் மிக வயதான பென்குயின் இங்கிலாந்தில் வாழ்ந்தது. அது 40 ஆண்டுகள்வரை உயிர்வாழ்ந்தது.
9. இறக்கைகள் இருந்தாலும் பென்குயின்களால் பறக்க முடியாது.
10. பென்குயின்களின் குழுக்கள், காலனி என்று அழைக்கப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------
செப்டம்பர் 21
கேரட்
1. கேரட்கள் முதன்முதலில் ஆப்கானிஸ்தானில் விளைந்ததாக கூறப்படுகிறது.
2. ஆரம்ப காலக்கட்டத்தில் மருத்துவத்துக்கு மட்டுமே கேரட்கள் பயன்படுத்தப்பட்டன.  
3. உருளைக்கிழங்குக்கு அடுத்ததாக மக்களிடம்  அதிகம் புகழ்பெற்ற  காயாக கேரட் உள்ளது.
4. ஆண்டொன்றுக்கு சுமார் 40 மில்லியன் டன் கேரட் விளைவிக்கப்படுகிறது.
5. ஆரஞ்சு நிறத்தைத் தவிர வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா  நிறங்களிலும் கேரட்கள் உள்ளன.
6. கேரட்களில் 88 சதவீதம் தண்ணீர் உள்ளது.
7. கேரட்கள் அதிகபட்சம் 10 சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும்.
8. சீனா, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கேரட் அதிகமாக விளைகிறது.
9. கேரட் செடிகள் 1 மீட்டர் உயரம் வரை வளரும்.
10. இந்தியாவில் ஹரியாணா மாநிலத்தில் கேரட்கள் அதிகமாக விளைகின்றன.
------------------------------------------------------------------------------------------------------
செப்டம்பர் 22
பியானோ
1. பியானோ இசைக்கருவி, 1709-ம் ஆண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பர்டொலோமோ டி பிரான்சஸ்கோ கிறிஸ்டோஃபொரி என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்டது.
2 .பியானோக்கள் முதலில் பியானோஃபோர்ட் என்று அழைக்கப்பட்டன.
3. பியானோக்கள் சராசரியாக சுமார் 450 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
4 இந்த இசைக்கருவியில் 12 ஆயிரம் பாகங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரம் பாகங்கள் அசையும்  பாகங்களாகும்.
5. உலகின் மிகப்பெரிய பியானோ, நியூஸிலாந்தில் அட்ரியான் மான் என்பவரால் உருவாக்கப்பட்டது. 5.7 மீட்டர் நீளம் கொண்ட இந்த பியானோவின் எடை 1.4 டன்.
6. அமெரிக்காவில் மட்டும் சுமார் 18 மில்லியன் பியானோ இசைக் கலைஞர்கள் உள்ளனர்.
7. உலகின் மிகச்சிறந்த பியானோவாக ஸ்டீன்வே நிறுவனம் தயாரிக்கும் பியானோக்கள் விளங்குகின்றன.
8. அதிக விலைமதிப்புள்ள பியானோ, 3.22 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.
9. பியானோவில் உள்ள விசைகள், முன்பு யானைகளின் தந்தங்களால் தயாரிக்கப்பட்டன.
10. போலந்து நாட்டைச் செர்ந்த ரொமால்ட் கோபர்ஸ்கி என்பவர் பியானோவை தொடர்ந்து 103 மணிநேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார்.