செப்டம்பர் 1
செப்டம்பர் மாதம்
1. பண்டைக்கால ரோமானிய காலண்டரில், செப்டம்பர் 7-வது மாதமாக இருந்தது.
2. லத்தீன் மொழியில் ‘செப்டம்’ என்றால் 7 என்று அர்த்தம்.
3. பண்டைய ரோமன் காலண்டரில், செப்டம்பர் மாதத்துக்கு 29 நாட்கள் மட்டுமே இருந்தன. பிற்காலத்தில் ஜூலியஸ் சீசர்தான் இம்மாதத்தில் ஒரு நாளைக் கூட்டினார்.
4. நெருப்புக் கடவுளின் மாதமாக ரோமானியர்கள் இம்மாதத்தை கருதுகின்றனர்.
5. 1939-ம் ஆண்டில் செப்டம்பர் 1-ம் தேதியன்று போலந்து நாட்டின் மீது ஹிட்லர் படையெடுத்தார்.
6. உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலும் செப்டம்பர் மாதத்தில்தான் நடைபெற்றது.
7. அமெரிக்காவில் மற்ற மாதங்களை விட, செப்டம்பர் மாதத்தில்தான் அதிக குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
8. உலகில் பல நாடுகளில் செப்டம்பர் மாதத்தில்தான் கல்வியாண்டு தொடங்குகிறது.
9. சிலி, உஸ்பெகிஸ்தான், கத்தார், பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் இந்த மாதத்தில்தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன.
10. காயங்களுக்கு ஒட்டும் பேண்ட்-எய்ட், 1920-ம் ஆண்டு செப்டம்பரில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
செப்டம்பர் 2
தேங்காய்
1.செப்டம்பர் 2-ம் தேதி, உலக தேங்காய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2. மாலத்தீவின் தேசிய மரமாக தென்னை மரம் உள்ளது.
3. உலகில் ஆண்டுதோறும் சுமார் 61 மில்லியன் டன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
4. தென்னை மரங்கள் அதிகபட்சமாக 25 மீட்டர்கள் வரை வளரும்.
5 . தேங்காய் உற்பத்தியில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
6. ஒருசில நாடுகளில் தேங்காய்களைப் பறிக்க குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
7.தென்னை மரங்கள் பொதுவாக 6 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்.
8. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 75 தேங்காய்கள் வரை கிடைக்கும்.
9. காட்டுப்பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் 100 ஆண்டுகள் வரைகூட அழியாமல் இருக்கும்.
10. பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபர் இல்லம் மற்றும் அலுவலகம், அதிக அளவில் தென்னை மரத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
------------------------------------
செப்டம்பர் 3
தேநீர்
1. கிமு 2737-ம் ஆண்டில் சீனாவின் பேரரசராக இருந்த ஷென்னோங், தேநீரை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
2.தான் குடிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில் தேயிலைகள் எதேச்சையாக விழுந்ததால், அதன் சுவை அவருக்கு தெரியவந்துள்ளது.
3. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் அருந்தப்படுவது தேநீர்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. ஆண்டொன்றுக்கு 6.5 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.
5. 1904-ம் ஆண்டில் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த கண்காட்சியில் ஐஸ் டீ அறிமுகமானது.
6. தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல் அமைந்திருக்கும்.
7. தேயிலை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
8. உலகில் அதிக விலைமதிப்புள்ள தேயிலையாக டார்ஜிலிங்கில் விளையும் தேயிலை விளங்குகிறது.
9. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 62 லட்சம் டன் தேயிலை பயன்படுத்தப்படுகிறது.
10. அமெரிக்காவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ‘டீ பேக்’ கண்டுபிடிக்கப்பட்டது.
-----------------------
செப்டம்பர் 4
பொற்கோயில்
1. ஐந்தாவது சீக்கிய மதகுருவான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் 1581-ம் ஆண்டில் பொற்கோயில் கட்டும் பணிகளைத் தொடங்கினார்.
2. பொற்கோயிலைக் கட்ட 8 ஆண்டுகள் ஆகியுள்ளன.
3. பொற்கோயில் அமைவதற்கு முன்பாக இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் குரு நானக் தியானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
4. 1762-ம் ஆண்டில் நடந்த படையெடுப்புகளின்போது இக்கோயில் சேதப்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஜா ரஞ்சித் சிங் இதை புதுப்பித்துக் கட்டினார்.
5. புனிதத் தலமாக கருதப்படும் பொற்கோயிலுக்கு, பிற மதங்களைச் சேர்ந்த சுமார் 35 சதவீதம் பேர் ஆண்டுதோறும் வருகின்றனர்.
6. புதுப்பித்து கட்டும்போது இக்கோயிலின் கூரைப் பகுதியில் தங்கத் தகடுகளைப் பொருத்தியதால் இக்கோயில் பொற்கோயில் என்று அழைக்கப்படுகிறது.
7. பொற்கோயிலுக்கு, ‘தர்பார் சாஹிப்’, ‘ஹர்மந்தர் சாஹிப்’ ஆகிய பெயர்களும் உள்ளன.
8. கவுதம புத்தர் சில காலம் பொற்கோயிலில் இருந்ததாக கூறப்படுகிறது. அக்காலத்தில் பொற்கோயில் வனங்களால் சூழப்பட்டிருந்தது.
9. பொற்கோவிலைச் சுற்றி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏரி அமைந்துள்ளது.
10.பொற்கோயிலில் விசேஷ நாட்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது
No comments:
Post a Comment