அக்டோபர் 11
ஸ்பெயின்
1. ஸ்பெயின் நாட்டின் தேசிய தினமாக அக்டோபர் 12 கொண்டாடப்படுகிறது.
2. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 2-வது மிகப்பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
3. ஸ்பெயின் மக்கள் ஆரோக்கியம் மிக்கவர்களாக உள்ளனர். இவர்களின் சராசரி ஆயுள் 83 வயது.
4. உலகின் முதல் நவீன நாவல், 1605-ம் ஆண்டில் ஸ்பானிஷ் மொழியில்தான் எழுதப்பட்டது.
5. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 47 உலக பாரம்பரிய சின்னங்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ளன.
6. ஆலிவ் எண்ணெய் உற்பத்தில் உலக அளவில் ஸ்பெயின் முதல் இடத்தில் இருக்கிறது.
7. பிரான்ஸ் நாட்டுக்கு அடுத்ததாக அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும் நாடாக ஸ்பெயின் உள்ளது. இந்நாட்டுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 82.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
8. உலகின் பழமையான உணவகமாக கருதப்படும் ‘ரெஸ்டாரண்ட் போடின்’ ஸ்பெயின் நாட்டில் 1725-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
9. புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் திராட்சையை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் வரும் என்பது ஸ்பானிஷ் மக்களின் நம்பிக்கை.
10. ஐரோப்பிய நாடுகளிலேயே மதுபான பார்கள் அதிகம் நிறைந்த நாடாக ஸ்பெயின் உள்ளது.
------------------------------------------------------------------------------
அக்டோபர் 12
ஆக்ரா கோட்டை
1. யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
2. ஆக்ரா கோட்டைக்கும் தாஜ்மஹாலுக்கும் இடையிலான தூரம் 2.5 கிலோமீட்டர் மட்டுமே.
3. 94 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.
4. யமுனை நதியின் கரையில் ஆக்ரா கோட்டை அமைந்துள்ளது.
5. 1558-ம் ஆண்டில் இக்கோட்டையை கட்டத் தொடங்கிய அக்பர் சக்ரவர்த்தி, 1565-ம் ஆண்டில் இதைக் கட்டி முடித்ததாக கூறப்படுகிறது.
6. ஆரம்பத்தில் ராஜஸ்தானிய செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோட்டையில், சலைவைக் கற்களைப் பதித்து பின்னாளில் ஷாஜஹான் இதை மேலும் அழகாக்கினார்.
7. 1857-ம் ஆண்டில் நடந்த முதலாவது சுதந்திரப் போரில் இக்கோட்டை முக்கிய பங்கு வகித்தது.
8. ஆக்ரா கோட்டையில் டெல்லி கேட், லாகூர் கேட் என 2 நுழைவுவாயில்கள் உள்ளன.
9. இக்கோட்டையின் அறைகளில், ஏதாவது ஒரு இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினாலே அறை முழுவதும் ஒளிமயமாகும் வகையில் அதற்குள் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
10. ஆக்ரா கோட்டையின் சுவரில் ஏராளமான நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஆனால் பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் அவற்றை பெயர்த்து எடுத்துச் என்றதாக கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------
அக்டோபர் 13
எலுமிச்சை
1. கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் எலுமிச்சை மரங்கள் பயிரிடப்பட்டு வருவதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முதலில் எலுமிச்சை மரங்கள் பயிரிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
3. எலுமிச்சை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் 3 மில்லியன் டன் எலுமிச்சம் பழங்கள் விளைகின்றன.
4. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ, சீனா அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அதிக அளவில் எலுமிச்சம் பழங்கள் விளைகின்றன.
5. வளைகுடா நாடுகளில் 7-ம் நூற்றாண்டில்தான் எலுமிச்சம் பழங்கள் அறிமுகமாகின.
6. எலுமிச்சை மரங்கள் 20 அடி உயரம் வரை வளரும்.
7. இம்மரங்கள் 50 ஆண்டுகள் வரை இருக்கும்.
8. எலுமிச்சம் பழங்களில் வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன.
9. எலுமிச்சம் பழங்களில் சராசரியாக 8 விதைகள் இருக்கும்.
10. உலகின் மிகப்பெரிய எலுமிச்சம் பழம் இஸ்ரேலில் விளைந்தது. இதன் எடை 5.265 கிலோ.
--------------------------------------------------
அக்டோபர் 14
சூரியகாந்தி
1. சூரியகாந்திப் பூக்கள், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் தோன்றியது.
2. ரஷ்யாவின் தேசிய மலராக சூரியகாந்தி உள்ளது.
3. ஒரு சூரியகாந்திப் பூவுக்குள் 2 ஆயிரம் விதைகள் இருக்கும். இவ்விதைகள் எண்ணெய் தயாரிக்க பயன்படும்.
4. சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது.
5. சூரியகாந்தி செடிகள் 12 அடி உயரம்வரை வளரும்.
6. உலகில் 70 வகையான சூரியகாந்திப் பூக்கள் உள்ளன.
7. எல்லா சூரியகாந்தி பூக்களிலும் எண்ணெய் விதைகள் இருக்காது. ஒருசில வகை சூரியகாந்தி பூக்களில் மட்டுமே விதை இருக்கும்.
8. 2012-ம் ஆண்டில் சூரியகாந்தி விதை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
9. உலகின் மிகப்பெரிய சூரியகாந்திப் பூ 1983-ம் ஆண்டு கனடாவில் பூத்தது. அதன் விட்டம் 32 அங்குலம்.
10. ஜெர்மனியில் ஆண்டுதோறும் சூரியகாந்தி திருவிழா நடத்தப்படுகிறது.
.
No comments:
Post a Comment