Powered By Blogger

Friday, October 22, 2021

பளிச் 10 - அக்டோபர் 1- 5

 அக்டோபர் 1

நைஜீரியா
1. 400 வகையான பழங்குடிகள் வாழும் பகுதிகளை இணைத்து 1914-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி நைஜீரியா உருவாக்கப்பட்டது.  
2. தனி நாடாக உருவாக்கப்பட்ட  பிறகு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நைஜீரியா 1960-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.
3. அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆப்பிரிக்க நாடாக நைஜீரியா உள்ளது. 2013-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்நாட்டில் 17 கோடிக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள்.
4. ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் நைஜீரியாவில் வாழ்கிறார்கள்.
5. நைஜீரியா நாட்டில்  521 மொழிகள் பேசப்படுகின்றன.  அந்நாட்டின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் உள்ளது.
 6. எண்ணெய் உற்பத்தியில் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது  நைஜீரியா முதல் இடத்தில் உள்ளது.
7. 1996-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நைஜீரியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.
8. 1991-ம் ஆண்டுவரை நைஜீரியாவின் தலைநகராக லாகோஸ் இருந்தது. பின்னர் அபுஜா நகருக்கு தலைநகரம் மாற்றப்பட்டது.
9. நைஜீரிய திரையுலகம் நாலிவுட் என அழைக்கப்படுகிறது
10.நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மக்கள் சராசரியாக 55 வயது வரை வாழ்கிறார்கள்.
---------------------------------------
அக்டோபர் 2
முதலை
1. முதலைகளுக்கு 60 முதல் 110 பற்கள் வரை இருக்கும். அவற்றின் பற்கள் விழவிழ முளைத்துக்கொண்டே இருக்கும்.
2. உலகின் நீளமான முதலை பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதம் நீளம்  20.2 அடி.
3. முதலைகளுக்கு வியர்காது. அவை தங்கள் வாயை திறந்து வைத்துக்கொள்வதன் மூலம் உடலை குளிர்விக்கிறது.
4. முதலைகளால் தண்ணீரில் 35 மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் நீந்த  முடியும்.
5. சுமார் ஒரு மணிநேரம் வரை மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணிருக்குள் இருக்க முதலைகளால் முடியும்.
6. வயிற்றுக்குள் உள்ள உணவை செரிக்கவைப்பதற்காக  முதலைகள் சிறு கற்களை விழுங்கும்.
7. பெரிய முதலைகள், சிறியவகை முதலைக் குட்டிகளை உண்ணும்.
8. முதலைகளால் ஒரு கண்ணை திறந்து வைத்துக்கொண்டு தூங்க முடியும்.
9. பெரிய முதலைகளால் மாதக்கணக்கில் உணவு உண்ணாமல் வாழ முடியும்.
10. உலகில் 23 வகையான முதலைகள் உள்ளன.
-------------------------------
அக்டோபர் 3
வயலின்
1. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வயலின் உருவாக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. வயலின் இசைக்கருவியில் 70 பாகங்கள் உள்ளன.
3. பிரபல இசை மேதையான மொசார்ட், முதலில் வயலின் இசைக்கத்தான் கற்றுக்கொண்டார்.
4. இத்தாலியைச் சேர்ந்த காஸ்பரோ ட சாலோ, ஆண்டிரன் அமடி, ஆண்டோனியோ ஸ்டிராடிவாரி ஆகியோர் 17-ம் நூற்றாண்டில் பல்வேறு கட்டங்களில் வயலின் இசைக்கருவியை மேம்படுத்தி உள்ளனர்.
5. உலகில் அதிக விலைமதிப்புள்ள வயலின் 16 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
6. ஒரு மணி நேரம் வயலின் இசைப்பதன் மூலம் ஒருவர் 170 கலோரிகளைக் குறைக்க முடியும்.
7. வயலின் இசைக்கருவிகள் பெரும்பாலும் மேப்பிள் மரத்தால் செய்யப்படுகின்றன.
8. உலகிலேயே மிக வேகமாக வயலின் இசைக்கக்கூடிய கலைஞராக சசெக்ஸ் நகரின் பென் லீ கருதப்படுகிறார்.
9. ஆரம்ப காலகட்டத்தில் பன்றி, ஆடு, குதிரை ஆகிய மிருகங்களின் குடல்கலைப் பயன்படுத்தி வயலின் கம்பிகள் தயாரிக்கப்பட்டன.
10. உலகின் மிகப்பெரிய வயலின் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. இதன் நீளம் 4.27 மீட்டர்.
---------------------------------------------------------------------------------------------
அக்டோபர் 4
மாதுளம் பழம்
1. மாதுளம் பழம் மத்திய கிழக்கு நாடுகளில்தான் முதலில் விளைவிக்கப்பட்டது.
2. கிமு 1000 ஆண்டுகளுக்கு முன்பே மாதுளை மரங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.
3. வறண்ட மற்றும் வெப்பம் மிகுந்த சூழலில் மாதுளை மரங்கள் வளரும்.
4. மாதுளை மரங்கள் 200 ஆண்டுகள்வரை இருக்கும்.
5. 10 மீட்டர் உயரம் வரை மாதுளை மரங்கள் வளரும்.
6. 760 வகையான மாதுளைகள் உலகில் உள்ளன.
7. கிரேக்க நாட்டில் புதிய வீட்டில் குடிபுகும்போது மாதுளை மரக் கன்றுகளை பரிசாக கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
8. அஜர்பைஜான் நாட்டில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் மாதுளை திருவிழா கொண்டாடப்படுகிறது.
9. மாதுளை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
10. மாதுளம் பழத்தின் விதைகள் மருந்துகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
-------------------------------------------
அக்டோபர் 5
நைல் நதி
1. உலகின் நீளமான நதியாக நைல் நதி உள்ளது. இந்நதி 6695 கிலோமீட்டர் நீளத்துக்கு ஓடுகிறது.
2. நைல் நதி  வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பாய்ந்து, மெடிடரேனியன் கடலில் கலக்கிறது.
3. தான்சானியா, உகாண்டா, புரூண்டி, ரவாண்டா, கென்யா, சையர், எதியோப்பியா, சூடான், எகிப்து ஆகிய 9 நாடுகளில் நைல் நதி ஓடுகிறது.
4. நைல் நதி ‘வைட் நைல்’, ‘ப்ளூ நைல்’ என இரண்டு கிளைகளாகப் பிரிந்து ஓடுகிறது.
5. இந்த 2 கிளைகளும் சூடான் நாட்டில் உள்ள கர்டோம் என்ற நகரில் இணைந்து, எகிப்து நாட்டுக்கு செல்கிறது.
6. 9 நாடுகளில் ஓடினாலும், எகிப்து நாட்டில் அதிகமாக ஓடும் நைல் நதி, அந்நாட்டு  மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
7. எகிப்து நாட்டு மக்களில் 95 சதவீதம் பேர் இந்த நதியால் பயன்பெறுகிறார்கள்.
8. எகிப்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில்  2 வாரங்கள், நைல் நதியை கொண்டாடும் வகையில்   நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
9. நைல் நதியின் குறுக்கே அஸ்வான் என்ற மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது.
10. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து நைல் நதி ஓடிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment