செப்டம்பர் 6
கிரிக்கெட் பேட்
1. தொடக்க காலத்தில் கிரிக்கெட் பேட்கள் (மட்டைகள்), ஹாக்கியில் பயன்படுத்தப்படும் பேட்களைப் போல்தான் இருந்துள்ளன.
2. 1770-ம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கென விதிகள் வகுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துதான் கிரிக்கெட் பேட்டின் வடிவமும் தற்போது இருப்பதைப் போல் மாறியுள்ளது.
3. கிரிக்கெட் விதிகளின்படி, பேட்களின் நீளம் 38 அங்குலத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது.
4. கிரிக்கெட் பேட்களின் அகலம் 10.8 சென்டிமீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது என்பதும் விதியாக உள்ளது.
5. பெரும்பாலும் வில்லோ எனப்படும் மரத்தைப் பயன்படுத்தித்தான் கிரிக்கெட் பேட்கள் தயாரிக்கப்படுகின்றன.
6. 1979-ல் ஆஸ்திரேலிய வீரரான டென்னிஸ் லில்லி, அலுமினயத்தால் ஆன பேட்டைப் பயன்படுத்தி உள்ளார்.
7. இந்தியாவில் 1920-ம் ஆண்டில் இருந்துதான் தரமான கிரிக்கெட் பேட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
8. அதிக கனமாக மற்றும் உயரம் குறைந்த பேட்களை சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்தி வந்தார்.
9. மிகச்சிறிய கைப்பிடியைக் கொண்ட கிரிக்கெட் பேட்களை வீரேந்தர் ஷேவக் பயன்படுத்தினார்.
10. விராட் கோலி பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டின் எடை 1.23 கிலோவாகும்.
------------------------------------------
செப்டம்பர் 7
பிரேசில்
1. போர்ச்சுக்கல் நாட்டிடம் சுமார் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த பிரேசில், 1822-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி விடுதலை பெற்றது.
2. பிரேசில் நாட்டின் தலைநகராக ரியோ டி ஜெனீரோதான் இருந்துவந்தது. 1961-ம் ஆண்டில் பிரேசிலியா நகருக்கு தலைநகரம் இடம் மாற்றப்பட்டது.
3. ஆஸ்கர் நீமேயர் என்பவர்தான் தலைநகர் பிரேசிலியாவை வடிவமைத்தார்
4. பிரேசில் நாட்டைச் சேர்ந்த மக்கள் சராசரியாக ஆண்டொன்றுக்கு 5.5 கிலோ காபி கொட்டைகளை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
5.பிரேசிலில் 90 சதவீதம் வீடுகளில் தொலைக்காட்சிகள் உள்ளன.
6. பிரேசில் நாட்டில் 180 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
7. நைஜீரியாவுக்கு அடுத்ததாக கறுப்பின மக்கள் அதிகம் வாழும் நாடாக பிரேசில் உள்ளது.
8. இயற்கை அழகுக்கு புகழ்பெற்ற பிரேசிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
9. கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்ற பிரேசில் நாடு, இதுவரை 5 முறை உலகக் கோப்பை கால்பந்தை வென்றுள்ளது.
10. 1870-ம் ஆண்டுமுதல் பிரேசில் எந்தப் போரிலும் பங்கேற்றதில்லை
-------------------------------------------------------------------
செப்டம்பர் 8
தூக்கம்
1.மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கை தூங்கிக் கழிக்கிறார்கள்.
2. ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. சாண்டியாகோ நகரில் நடந்த அறிவியல் கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற ராண்டி என்ற மாணவர், அதிகபட்சமாக 11 நாட்கள் 25 நிமிடங்கள் தூங்காமல் இருந்து சாதனை படைத்துள்ளார்.
4. யானைகள் மிகக் குறைந்த அளவாக நாளொன்றுக்கு 3 மணிநேரம் மட்டுமே தூங்குகின்றன.
5. சிறு குழந்தைகள் அதிகபட்சமாக 16 மணி நேரம்வரை உறங்குகின்றன.
6. மனிதர்கள் தங்கள் தூக்கத்தில் சராசரியாக 4 முதல் 6 கனவுகள் வரை காண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
7. பெரும்பாலானவர்களுக்கு தூங்கி எழுந்த 5 நிமிடங்களுக்குள் தூக்கத்தில் கண்ட 50 சதவீத கனவுகள் மறந்துவிடுகின்றன.
8. மனிதர்களைப் போலவே மிருகங்களும், பூச்சிகளும்கூட சரியாக தூக்கம் வராமல் சில நேரங்களில் தவிக்கும்.
9. உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் தூக்கத்தை தள்ளிப் போடுகிறார்கள்.
10. ஆரோக்கியமான மனிதர்கள், படுத்த 7 நிமிடங்களுக்குள் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றுவிடுகிறார்கள்.
---------------------------------------------------------------
செப்டம்பர் 9
செவ்வாய் கிரகம்
1. ரோமானிய போர்க் கடவுளின் நினைவாக செவ்வாய் கிரகத்துக்கு ‘மார்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
2. செவ்வாய் கிரகத்தில் டீமோஸ், போபோஸ் என இரண்டு நிலவுகள் உள்ளன.
3. செவ்வாய் கிரகம் சூரியனில் இருந்து சுமார் 141 மில்லியன் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
4. பூமியை விட சிறியதான செவ்வாய் கிரகத்தின் விட்டம் 4,217 மைல்களாகும்.
5. மார்ஸ் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 மணிநேரம் 37 நிமிடங்களைக் கொண்டதாகும்.
6. செவ்வாய் கிரகத்தின் ஓர் ஆண்டு 687 நாட்களைக் கொண்டதாகும்.
7. பூமியை விட செவ்வாய் கிரகத்தில் சுமார் 37 சதவீதம் புவியீர்ப்பு சக்தி குறைவு.
8. பூமியைப் போன்றே செவ்வாய் கிரகத்திலும் வட துருவமும், தென் துருவமும் இருக்கின்றன.
9. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மலை, 27 கிலோமீட்டர் உயரம் கொண்டது.
10. பூமியைவிட செவ்வாய் கிரகத்தில் அதிக குள்ர்ச்சியான சூழல் நிலவுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment