Powered By Blogger

Friday, October 22, 2021

பளிச் 10 செப்டம்பர் 14 - 22

 செப்டம்பர் 14

பக்கிங்காம் அரண்மனை
1. பக்கிங்காம் அரண்மனை 1703-ம் ஆண்டில் இங்கிலாந்து கட்டிட வடிவமைப்பாளரான வில்லியம் விண்டேவால்  கட்டப்பட்டது.
2. இங்கிலாந்து அரச குடும்பத்துக்குச் சொந்தமான  இந்த அரண்மனை, 39 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ளது.
3. 19-ம் நூற்றாண்டில் இந்த மாளிகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
4. இந்த அரண்மனையில் 775 அறைகள் உள்ளன. இதில் 52 அறைகள் அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் விருந்தினர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
5. பக்கிங்காம் அரண்மனையில்  760 ஜன்னல்களும், 1,514 கதவுகளும் உள்ளன.
6. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் 9 முறை இந்த அரண்மனை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 7. இந்த அரண்மனைக்குள் 350 சுவர்க் கடிகாரங்கள் உள்ளன. இவற்றைப் பராமரிப்பதற்காகவே ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
8. பக்கிங்காம் அரண்மனைக்குள் பல்வேறு சுரங்கப் பாதைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
9. ஹெலிகாப்டர் தளம், பிரம்மாண்ட தோட்டம், ஏரி, நீச்சல் குளம்  ஆகியவையும் இந்த அரண்மனைக்குள் அமைந்துள்ளன.
10. அரண்மனையின் கிழக்குப் பகுதியில் உள்ள பால்கனி மீது நின்று மக்களை சந்திப்பதை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

--------------------------------------------
செப்டம்பர் 15
அணில்
1. அணில்கள் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர்  வரை வளரும்.
2. வீட்டில் வளர்க்கப்படும் அணில்கள் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரையும், காட்டில் வளரும் அணில்கள் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையும் உயிர்வாழும்.
3. ஒருசில வகை அணில்களால் 300 அடி தூரம் வரை பறக்க முடியும்.
4. அணில்கள் கருவுற்ற 45 நாட்களுக்குள் குட்டிகளை ஈனும்.
5. அணில்களுக்கு 4 முன்னம்பற்கள் இருக்கும். அவை வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டது.
6. பழங்கள், அவற்றின் கொட்டைகள், இலைகள், பூச்சிகள் ஆகியவற்றை உண்டு அணில்கள் உயிர்வாழும்.
7. மழையில் இருந்து காத்துக்கொள்ளவும், நீச்சல் அடிக்கவும், உடல் எடையை சமமாக வைத்துக்கொள்ளவும் அணில்களுக்கு அவற்றின் வால்கள் உதவுகின்றன.
8. சில வகை அணில்கள், மண்ணுக்கு அடியில் சுரங்கம் தோண்டி  உணவுகளைச் சேகரித்து வைக்கும்.
9. அணில்களால் குதிக்கும்போது 180 டிகிரி வரை உடலைத் திருப்ப முடியும்.
10. ஆஸ்திரேலியாவைத் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அணில்கள் உள்ளன.
---------------------------------
செப்டம்பர் 16
டொனால்ட் டக்
1. 1934-ம் ஆண்டில் வெளியான ‘தி லிட்டில் வைஸ் ஹென்’ என்ற குறும்படத்தில் முதல்முறையாக டொனால்ட் டக் கதாபாத்திரம் இடம்பெற்றது.
2. இக்கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார்.
3. ஓவல் மைதானத்தில் நடந்த  கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் டொனால்ட் பிராட்மேன்  டக் அவுட் ஆனார். இதை நினைவுபடுத்தும் வகையில் ‘டொனால்ட் டக்’ என்று தன் பாத்திரத்துக்கு டிஸ்னி பெயர் வைத்தார்.
 4. டொனால்ட் டக்கின் முழுப்பெயர் டொனால்ட்  ஃபாண்டிலெரி டக். .
5. மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தைவிட டொனால்ட் டக் 6 வயது இளையதாகும்
 6. கில்ரன்ஸ் நாஷ், டோனி அன்செல்மோ, டானியல் ராஸ் ஆகிய 3 நடிகர்கள் டொனால்ட் டக் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளனர்.
 7. இரண்டாம் உலகப் போரின்போது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த டொனால்ட் டக்கின் திரைப்படங்கள்  அதிகமாக திரையிட்டு காட்டப்பட்டது.
8. ஜெர்மனிக்கு எதிரான படம் இன்றில் டொனால்ட் டக் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது.
9. மார்ச் 13-ம் தேதி டொனால்ட் டக்கின் பிறந்தநாளாக அனுசரிக்கப்படுகிறது.
10. டொனால்ட் டக்கின் காதலியாக டெய்சி டக் என்ற கதாபாத்திரம் அறியப்படுகிறது.
-------------------------------------------------------------------
செப்டம்பர் 17
இந்தியப் பெருங்கடல்
1. இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு  73,440,000 சதுர கிலோமீட்டராகும்.
2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
3. ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா அண்டார்டிகா ஆகிய 4 கண்டங்களை இந்தியப் பெருங்கடல் இணைக்கிறது.
4.  உலகின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ளது.
5. பனிப்பாறைகள் உருகி வருவதால், இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு  ஆண்டுதோறும் 20 சென்டிமீட்டர் வரை அகலமாகி வருகிறது.
6. உலகுக்கு தேவையான எண்ணெய்யில் சுமார் 40 சதவீதம், இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.
7. கப்பல்களில் இருந்து கசியும் எண்ணெய்யால் ஆண்டுதோறும் அதிக அளவிலான சுற்றுச்சூழல் மாசுபாடு இந்தியப் பெருங்கடலில் ஏற்படுகிறது.
8. இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள சுண்டா டிரெஞ்ச் என்ற பகுதி இந்திய பெருங்கடலின் ஆழமான (25,344 அடி) பகுதியாகும்.
9. இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரின் வெப்பநிலை அதிகம் என்பதால், மற்ற கடல்களுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான நீர்வாழ் உயிரினங்களே இதில் உள்ளன.
10. இந்தியப் பெருங்கடலில் இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட 7 தீவுகள் உள்ளன.
 
.---------------------------
செப்டம்பர் 18
பியானோ
1. பியானோ இசைக்கருவி, 1709-ம் ஆண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பர்டொலோமோ டி பிரான்சஸ்கோ கிறிஸ்டோஃபொரி என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்டது.
2 .பியானோக்கள் முதலில் பியானோஃபோர்ட் என்று அழைக்கப்பட்டன.
3. பியானோக்கள் சராசரியாக சுமார் 450 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
4 இந்த இசைக்கருவியில் 12 ஆயிரம் பாகங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரம் பாகங்கள் அசையும்  பாகங்களாகும்.
5. உலகின் மிகப்பெரிய பியானோ, நியூஸிலாந்தில் அட்ரியான் மான் என்பவரால் உருவாக்கப்பட்டது. 5.7 மீட்டர் நீளம் கொண்ட இந்த பியானோவின் எடை 1.4 டன்.
6. அமெரிக்காவில் மட்டும் சுமார் 18 மில்லியன் பியானோ இசைக் கலைஞர்கள் உள்ளனர்.
7. உலகின் மிகச்சிறந்த பியானோவாக ஸ்டீன்வே நிறுவனம் தயாரிக்கும் பியானோக்கள் விளங்குகின்றன.
8. அதிக விலைமதிப்புள்ள பியானோ, 3.22 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.
9. பியானோவில் உள்ள விசைகள், முன்பு யானைகளின் தந்தங்களால் தயாரிக்கப்பட்டன.
10. போலந்து நாட்டைச் செர்ந்த ரொமால்ட் கோபர்ஸ்கி என்பவர் பியானோவை தொடர்ந்து 103 மணிநேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார்.
 

No comments:

Post a Comment