Powered By Blogger

Monday, November 8, 2021

ஆகஸ்ட் 28- 31

 ஆகஸ்ட்    28

பூனை

1. பூனைகள் நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை தூங்குகின்றன. அவை தங்களின் வாழ்க்கையில் சுமார் 70 சதவீதத்தை தூங்கிக் கழிக்கின்றன.
2. அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் உள்ள டல்கீட்னா என்ற நகருக்கு, ஸ்டம்ப்ஸ் என்ற பூனை 20 ஆண்டுகள் மேயராக இருந்துள்ளது.
3. 1963-ம் ஆண்டில், ஃபெலிகே என்ற பூனை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
4. புலிகளின் குணாதிசயத்தில் 95 சதவீதத்தை பூனைகள் கொண்டுள்ளன.
5. வீட்டில் வளர்க்கும் பூனைகளால், மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓட முடியும்.
6. பூனைகளுக்கு 230 எலும்புகள் உள்ளன.
7. பூனைகளால் தங்கள் காதுகளை 180 டிகிரி வரை சுழற்ற முடியும்.
8.பூனைகளால் தங்கள் உயரத்தைவிட 5 மடங்கு அதிக உயரம் வரை குதிக்க முடியும்.
9. குட்டிப் பூனைகளுக்கு 26 பற்களும், பெரிய பூனைகளுக்கு 30 பற்களும் இருக்கும்.
10.  ‘கிரீம் பஃப்’ என்ற பூனை  மிக அதிகமான ஆண்டுகள் உயிர்வாழ்ந்த பூனையாக கருதப்படுகிறது. டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த இப்பூனை 38 ஆண்டுகள் உயிர்வாழ்ந்துள்ளது.
--------------------------------------------------------------------------------
ஆகஸ்ட் 29
தியான் சந்த்
1.தியான் சந்த்தின் பிறந்தநாள் இந்தியாவில் விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
2. தியான் சந்த்தின் உண்மையான பெயர் தியான் சிங். இரவு நேரத்தில் அவர் தீவிரமாக ஹாக்கி பயிற்சி பெற்றதால், அவரைச் செல்லமாக  ‘சந்த்’ (இந்தியில் ’நிலவு’) என நண்பர்கள் அழைத்தனர்.
3. 1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தியான் சந்த்   14 கோல்களை அடித்தார்.
4. 1936-ம் ஆண்டில் தியான் சந்த்தை, ஜெர்மனியின் குடிமகன்  ஆகுமாறு ஹிட்லர் அழைப்பு விடுத்தார். ஆனால் தியான் சந்த் இதை ஏற்க மறுத்தார்.
5. 1932-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மட்டும் அவர் 12 கோல்களை அடித்தார்.
6. சர்வதேச ஹாக்கி போட்டிகளில் 400 கோல்களுக்கு மேல் தியான் சந்த் அடித்துள்ளார்.
7. தியான் சந்த் அதிக கோல்களை அடிப்பதால், அவரது ஹாக்கி மட்டையில் காந்தம் இருக்கிறதா என நெதர்லாந்து அணியினர் ஒருமுறை சோதனை நடத்தினர்.
8. தியான் சந்த்தின் நினைவாக, மத்திய அரசு 1980-ம் ஆண்டில் தபால் தலை வெளியிட்டது.
9. ஹாக்கி விளையாட்டைத் தவிர மல்யுத்தத்திலும் தியான் சந்துக்கு அதிக ஆர்வம் இருந்தது.
10. தியான் சந்த், தனது 16-வது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
-----------------------------------------------------
ஆகஸ்ட் 30
பள்ளிக்கூடம்
1.திபெத்தில் உள்ள பூமா கேங்டாங் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம்தான் உலகில் உயரமான  (கடல் மட்டத்தில் இருந்து  5,373 மீட்டர்) இடத்தில்   அமைந்துள்ள பள்ளிக்கூடம்.  
2.சீனாவில்தான் குழந்தைகளுக்கு அதிக வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. அங்கு வாரந்தோறும் 14 மணிநேரம் குழந்தைகள் வீட்டுப்பாடத்துக்காக செலவழிக்கிறார்கள்.
3. ரஷ்யாவில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
4. இத்தாலியில் உள்ள துரின் நகரில், ஒரே ஒரு மாணவருக்காக ஒரு பள்ளிக்கூடம் இயங்குகிறது.
5. ஈரானில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக பள்ளிகள் உள்ளன. இரு பாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகள் இல்லை.
6. வங்க தேசத்தில் 100-க்கும் மேற்பட்ட மிதக்கும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் வகுப்புகள் படகுகளில் நடக்கின்றன.
7. பிரேசில் நாட்டில் காலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கி, மதிய உணவுக்குள் முடிக்கப்படுகின்றன.
8. பாகிஸ்தானில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமையாக இல்லை.
9. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சான் பாப்லோ நகரில், ஒரு பள்ளிக் கட்டிடம், பழைய பாட்டில்களால் கட்டப்பட்டுள்ளது.
10. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள சிட்டி மாண்டேஸ்வரி பள்ளிதான் உலகின் மிகப்பெரிய பள்ளியாகும். இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------
ஆகஸ்ட் 31
கிர்கிஸ்தான்
1. சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த கிர்கிஸ்தான் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட்  31-ம் தேதி அதிலிருந்து பிரிந்தது.
2. ‘மத்திய ஆசியாவின் சுவிட்சர்லாந்து’ என்று கிர்கிஸ்தான் அழைக்கப்படுகிறது.
3. இந்நாட்டின் பரப்பளவில் 80 சதவீதம் மலைகள் உள்ளன.  சுமார் 2,000 ஏரிகளும் இந்நாட்டில் உள்ளன.
4. கிர்கிஸ்தானில் குறைந்த அளவு மக்களே வாழ்கிறார்கள். அங்கு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 33 பேர் என்ற விகிதத்திலேயே மக்கள் தொகை உள்ளது.
5. குதிரை இறைச்சி, இந்நாட்டு மக்களின் விருப்பமிகு உணவுகளில் ஒன்றாகும்.
6. கோடைக்காலத்தில் இந்நாட்டில் 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் இருக்கும். அதுவே குளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குளிர் இருக்கும்.
7. கிர்கிஸ்தானின் தேசிய பானமாக குதிரைப்பால் உள்ளது.
8. கிர்கிஸ்தான் மக்களுக்கு தேநீர் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும், தேநீரை உடன் எடுத்துக்கொள்வது அவர்களின் வழக்கம்.
9. கிர்கிஸ்தான் மக்களின் முக்கியத் தொழில் மேய்ச்சலாகும்.
10. கிர்கிஸ்தானில் 417 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment