அக்டோபர் 17
கால்பந்து
1. கால்பந்து விளையாட்டு, சீனாவில் கி.மு. 476-ம் ஆண்டில் முதல் முறையாக விளையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
2. உலகில் அதிக மக்கள் பார்க்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது.
3. கால்பந்து விளையாட்டின்போது, அதில் பங்கேற்பவர்கள் சராசரியாக 9.65 கிலோமீட்டர் தூரம் ஓடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
4. சுமார் 80 சதவீதம் கால்பந்துகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகின்றன.
5. வடகொரியாவில் உள்ள ‘ரன்கிராடோ மே டே ஸ்டாடியம்’தான் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானமாகும்.
6. 1964-ம் ஆண்டு பெரு நாட்டில், கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
7. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றபோது, தன்னுடன் கால்பந்தை எடுத்துச்செல்ல விரும்பினார். ஆனால் நாசா அமைப்பு அதை நிராகரித்தது.
8. 1937-ம் ஆண்டு முதல் முறையாக கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
9. உலகின் மிகப் பழமையான கால்பந்து கிளப்பாக இங்கிலாந்தின் ஷெபீல்ட் கால்பந்து கிளப் உள்ளது. இது 1857-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
10. பிரேசில் நாடு அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
-----------------------------------------------------------------------------
அக்டோபர் 18
விமானம்
1. 1903-ம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை பறக்கவைத்தனர்.
2. உலகின் மிகப்பெரிய ரன்வே சீனாவில் உள்ள குவாம்பா பம்பா விமான நிலையத்தில் உள்ளது.
3. விமானத்தில் உள்ள எமர்ஜெசி மாஸ்குகளில் 15 நிமிடங்களுக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும்.
4. விமானங்களில் பாதுகாப்பான பகுதியாக, அதன் வால் பகுதி உள்ளது.
5. விமான நிறுவனங்கள் ஆண்டுதோறும் 640 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகின்றன.
6. விமானத்தை இயக்கும்போதோ அல்லது அதற்கு முன்போ, விமானியும், துணை விமானியும் ஒரே உணவைச் சாப்பிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
7. விமானியாக இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படைத் தகுதியாகும்.
8. உலகின் மிகப்பெரிய விமான சர்வீஸ் நிறுவனமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளது.
9. பயணிகள் விமானம் சராசரியாக மணிக்கு 550 மைல் வேகத்தில் பறக்கிறது.
10. விமானங்களுக்குள் பாதரசத்தை எடுத்துச்செல்ல பயணிகளுக்கு அனுமதி இல்லை.
----------------------------------------
அக்டோபர் 19
எலி
1. உலகில் 60-க்கும் மேற்பட்ட வகை எலிகள் உள்ளன.
2. ஒரு சில வகை எலிகளால் ஒரு மைல் தூரம் வரை நீந்திச் செல்ல முடியும்.
3. எலிகள் தங்களின் உடல் வெப்பத்தை சமன்படுத்த வால்களை பயன்படுத்துகின்றன.
4. எலிகள் ஒரே நேரத்தில் 20 குட்டிகள் வரை போடும்.
5. ஒவ்வொரு ஆண்டிலும் விவசாய உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை எலிகள் அழிப்பதாக கூறப்படுகிறது.
6. தாங்கள் இருக்கும் சூழலில் ஒரு சிறு மாற்றம் இருந்தாலும் எலிகள் உஷாராகிவிடும்.
7. எலிகளின் பற்கள் ஆண்டுக்கு 5 அங்குல நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.
8. பற்கள் அதிக நீளத்துக்கு வளர்வதை தடுப்பதற்காக பிளாஸ்டிக், மரங்கள் போன்றவற்றை எலிகள் கடிக்கின்றன.
9. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேஷ்நோக் என்ற இடத்தில் எலிகளுக்கு கோயில் உள்ளது.
10. உலகின் மிகப்பெரிய எலி வகை 2009-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை எலிகளின் நீளம் 81 சென்டிமீட்டர்.
-------------------------------------------
அக்டோபர் 20
இஸ்ரோ
1. 1969-ம் ஆண்டில் டாக்டர் விக்ரம் சாராபாய், இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) அமைப்பை தொடங்கினார்.
2. இஸ்ரோ அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக் கோளாக ஆர்யபட்டா உள்ளது.
3. 1975-ம் ஆண்டில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டது.
4. 1981-ம் ஆண்டில் ஆப்பிள் செயற்கைக்கோளை ஒரு மாட்டுவண்டியில், ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்று இஸ்ரோ ஏவியது.
5. முழுக்க முழுக்க இந்தியாவால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள் எஸ்எல்வி - 3 ஆகும்.
6. கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரோ அமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தின் அரை ஆண்டு பட்ஜெட் கணக்குக்கு சமமாகும்.
7. இஸ்ரோ அமைப்புக்கு இந்தியா முழுவதும் 13 மையங்கள் உள்ளன.
8. மார்ஸ் கிரகத்தை தங்கள் முதல் முயற்சியிலேயே எட்டிய ஒரே விண்வெளி அமைப்பாக இஸ்ரோ உள்ளது.
9. இந்தியாவின் மார்ஸ் திட்டம் வெறும் 450 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
10. இந்தியாவுக்காக மட்டுமின்றி, வேறு 21 நாடுகளுக்காகவும் இஸ்ரோ அமைப்பு செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது.