Powered By Blogger

Wednesday, December 8, 2021

பளிச் 10 - நவம்பர் 8 -11

 நவம்பர்  8

குரங்கு
1. குரங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளன. உலகின் அனைத்து கண்டங்களிலும் அவை வாழ்கின்றன.
2. குரங்குகள் 30 முதல் 50 ஆண்டுகள்வரை உயிர்வாழும்.
3. உலக அளவில் 264 வகை குரங்குகள் உள்ளன.
4. ஒரு சில வகை குரங்குகளால் மட்டுமே வண்ணங்களை வேறுபடுத்தி பார்க்க முடியும்.
5. ‘ஆல்பர்ட்  2’  என்ற குரங்கு 1949-ம் ஆண்டில்,  முதல் முறையாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
6. மனிதர்களைப் போலவே குரங்குகளுக்கும், எண்ணவும் கணக்குப் போடவும் தெரியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
7. ஒவ்வொரு குரங்குக்கும் பிரத்யேகமாக கைரேகைகள் உள்ளன.
8. சீனா மற்றும் மலேசிய நாடுகளில், குரங்குகளின் மூளைக் கறியை சாப்பிடுகிறார்கள்.
9. பிக்மி மார்மோசெட் வகை குரங்குகள், மிகச் சிறிய அளவுகொண்ட குரங்குகளாக கருதப்படுகின்றன. இவறின் உயரம் 5 அங்குலம்.
10. மேல் மேண்ட்ரில் என்ற குரங்கு வகை மிகப் பெரிய வகை குரங்காகும்.  இந்த வகை குரங்குகள் 1 மீட்டர் உயரம் வரை வளரும்
---------------------
நவம்பர் 9
புற்றுநோய்
1. புற்றுநோயால் ஆண்டுக்கு 1 கோடி பேர் வரை உயிரிழக்கிறார்கள்.
2. மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிட முடியும்.
3. புற்றுநோயால் இறப்பவர்களில் 70 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
4. நூற்றுக்கும் மேற்பட்ட வகை புற்றுநோய்கள் உள்ளன. புற்றுநோயால் உடலில் எந்த பகுதி வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம்.
5. பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
6. அமெரிக்காவில் அதிகம் உள்ள புற்றுநோயாக தோல் புற்றுநோய் உள்ளது.
7. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள முதல் 3 நாடுகளாக சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை உள்ளன.
8. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
9. கிமு 4-ம் நூற்றாண்டிலேயே புற்றுநோய் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
10.புற்றுநோயை முதலில் எகிப்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
---------------------------------------------------------
நவம்பர் 10
வாடிகன் நகரம்
1. வாடிகன் நகரம், உலகின் மிகச்சிறிய நாடாகும். இதன்  மொத்த நிலப்பரப்பே 121 ஏக்கர்கள்தான்.
2. இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குள் வாடிகன் நகரம் அமைந்துள்ளது.
3. உலகின் மிகச்சிறந்த ஓவியங்களும், சிலைகளும் இங்குள்ள தேவாலயங்களில் வைக்கப்பட்டுள்ளன.
4. தபால் தலை விற்பனை மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் பணம் ஆகியவைதான் வாடிகன் நகரின் முக்கிய வருவாயாகும்.
5. இத்தாலியன் மற்றும் லத்தீன் மொழிகள் இந்நாட்டில் அதிகமாக பேசப்படுகிறது.
6. வாடிகன் நகரில் விவாகரத்து சட்டம் அமலில் இல்லை.
7. இங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலியா, உலகின் 2-வது மிகப்பெரிய கிறிஸ்தவ தேவாலயமாகும். இதைக் கட்டி முடிக்க 120 ஆண்டுகள் ஆகியுள்ளன.
8. இங்குள்ள மக்களில் 100 சதவீதத்தினரும் கத்தோலிக்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர்.
9. ஐக்கிய நாடுகள் சபையில் வாடிகன் நகரம் உறுப்பு நாடாக இல்லை.
10. இத்தாலிய மக்கள் தாங்கள் செலுத்தவேண்டிய வரியில் 10 சதவீதத்தை வாடிகன் நகருக்கு நன்கொடையாக வழங்குகின்றனர்.
---------------------------------
நவம்பர் 11
மின்னல்
1. பூமியில் மின்னல் பாயும்போது, அதன் வெப்பம் 50 ஆயிரம் டிகிரி ஃபாரன்ஹீடாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
2. ஒரே இடத்தை  அடுத்தடுத்து மின்னல் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை ஒரே ஆண்டில் 23 முறை மின்னல் தாக்கியுள்ளது.
3. மின்னல் 90 மைல் தூரம்வரை நீண்டதாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
4. உலகிலேயே மின்னலால் அதிகம் தாக்கப்படும் நாடாக வெனிசுவேலா உள்ளது.
5. மின்னலுக்கு பல பில்லியன் வோல்ட் மின்சாரத்தின் சக்தி உள்ளது.
6. ஆண்டொன்றுக்கு ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மின்னல்கள் பூமியை  தாக்குகின்றன.
7. மின்னல் மணிக்கு 270,000 மைல் வேகத்தில் பூமியைத் தக்குகின்றன.
8. இந்தியாவை ஆண்டொன்றுக்கு சராசரியாக சுமார் 2,500 மின்னல்கள் தாக்குகின்றன.
9.இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 300 பேர் மின்னல் தாக்கி உயிர் இழந்துள்ளனர்.
10.மின்னலின் தாக்குதல் 2 மைக்ரோவினாடிகள் மட்டுமே நீடிக்கும்.

No comments:

Post a Comment