அக்டோபர் 25
சுனாமி
1. கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுகளால் கடலில் சுனாமி ஏற்படுகிறது.
2. சுனாமி அலைகள் 100 அடி உயரம் வரை எழும் ஆற்றல் கொண்டது.
3. கடலில் ஏற்படும் சுனாமிகளில் சுமார் 80 சதவீதம் சுனாமிகள் பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படுகிறது.
4. சுனாமிகளின்போது முதல் அலை அத்தனை வலுவாக இருக்காது. அடுத்தடுத்து வரும் அலைகள்தான் வலுவானதாக இருக்கும்.
5. 2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிதான், இதுவரை உலகைத் தாக்கியதிலேயே வலுவான சுனாமி ஆகும்.
6.14 நாடுகளைத் தாக்கிய இந்த சுனாமியில் சுமார் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
7. சுனாமி அதிக அளவில் தாக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
8. சுனாமி அலைகள் மணிக்கு 500 முதல் 800 மைல் வேகம்வரை தாக்கும்.
9. அமெரிக்கா மற்றும் கனடாவில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் 106 மில்லியன் டாலர் வரை சேதம் ஏற்பட்டது.
10. நவீன சுனாமி எச்சரிக்கைக் கருவி, ஜப்பான் நாட்டின் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------
அக்டோபர் 26
ஆஸ்திரியா
1. ஆஸ்திரிய நாட்டின் தேசிய தினமாக அக்டோபர் 26 உள்ளது.
2. உலகின் மிகப்பெரிய பனிக்குகை ஆஸ்திரியாவின் வெர்ஃபென் எனும் இடத்தில் இருக்கிறது.
3. ஆஸ்திரியாவின் பிரபலமான விளையாட்டாக பனிச்சறுக்கு விளையாட்டு உள்ளது.
4. பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் 1964 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்துள்ளது.
5. அஞ்சல் அட்டைகள் முதன்முதலில் ஆஸ்திரியாவில்தான் வெளியிடப்பட்டன.
6. வியன்னா நகரில் உள்ள ஆஸ்திரிய தேசிய நூலகம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு 2 மில்லியன் புத்தகங்கள் உள்ளன.
7. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜோசப் மாடெர்ஸ்பெர்கர் என்பவர் 1818-ம் ஆண்டில் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
8. ஆஸ்திரியாவில் ஒவ்வொரு குழந்தையும் 14 வயதை எட்டியதும், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் உள்ளது.
9. ஆஸ்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் ராணுவப் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
10. ஆஸ்திரிய மக்களின் சராசரி ஆயுள் 81 வயது.
-------------------------------------------
அக்டோபர் 27
பாப்கார்ன்
1. மெக்சிகோ நாட்டில்தான் பாப்கார்ன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
2. பண்டைய காலத்தில் மக்கள் மணலைச் சூடாக்கி, அதில் பாப்கார்னை பொறிக்க வைத்துள்ளனர்.
3. அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியாக பாப்கார்ன் உள்ளது.
4. சார்லஸ் கிரிடர்ஸ் என்பவர் 1885-ம் ஆண்டில் பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
5. திரையரங்குகளில் 1900-களின் ஆரம்பத்தில் பாப்கார்ன்களை விற்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
6. 1912-ம் ஆண்டுமுதல் தியேட்டர்களில் பாப்கார்ன் விற்கப்படுகிறது.
7. உலகளாவிய அளவில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை விட பாப்கார்ன் விற்பனையில்தான் தியேட்டர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
8. பாரி ஸ்பென்சர் என்பவர் 1945-ம் ஆண்டில் பாப்கார்னை முதலில் மைக்ரோவேவ் அடுப்பில் தயாரித்தார்.
9.பாப்கார்ன்களை பொறிக்க 400 முதல் 460 டிகிரி பாரன்ஹீட் வரையான வெப்பம் தேவைப்படுகிறது.
10. மழைக்காலத்தில் பாப்கார்ன்கள் அதிகம் விற்பனையாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-----------------------------------------------------------------
அக்டோபர் 28
செவ்வாய் கிரகம்
1. செவ்வாய் கிரகத்தை கலிலியோ கலிலீ கண்டுபிடித்தார்.
2. சூரியனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 227.9 மில்லியன் கிலோமீட்டர்.
3. செவ்வாய் கிரகம் 6.779 கிலோமீட்டர் விட்டத்தைக் கொண்டுள்ளது.
4. செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு 51 முறை முயற்சிகள் நடைபெற்றன. இதில் 21 முயற்சிகள் மட்டுமே வெற்றி பெற்றன.
5. செவ்வாய் கிரகத்தை சென்றடையும் முயற்சியில் அமெரிக்கா 1964-ம் ஆண்டில் முதல் முறையாக வெற்றி பெற்றது.
6. ஒலிம்பஸ் மோன்ஸ் என்ற உயரமான மலை செவ்வாய் கிரகத்தில் உள்ளது.
7. செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 687 நாட்கள் ஆகும்.
8. பூமியை விட செவ்வாய் கிரகம் குளிர்ச்சியாக இருக்கும்.
9. போப்ஸ், டீமோஸ் என்ற 2 நிலவுகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன.
10. மார்ஸ் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 687 நாட்களைக் கொண்டதாகும்.
-------------------------------------------------------------------
அக்டோபர் 28
கிரிக்கெட்
1. கால்பந்துக்கு அடுத்ததாக, அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட போட்டியாக கிரிக்கெட் உள்ளது. 2.5 பில்லியன் மக்கள் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கிறார்கள்.
2. 16-ம் நூற்றாண்டில் முழுக்க முழுக்க சிறுவர்கள் விளையாடும் போட்டியாக கிரிக்கெட் இருந்தது. பின்னர் நாளடையில் இது பெரியவர்களுக்கான ஆட்டமாக உருவெடுத்தது.
3. உலகெங்கிலும் 31 நாடுகள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும், 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
4. கிரிக்கெட் போட்டிகளுக்கான பிட்ச்சின் நீளம் 20.12 மீட்டர் (22 யார்டுகள்) ஆகும்.
5. கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்தின் எடை 163 கிராம்.
6. 17-ம் நூற்றாண்டு முதல் பெண்களும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
7. கிரிக்கெட் போட்டியில் இதுவரை அதி வேகமாக பந்துவீசிய வீரர், பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் ஆவார். அவர் மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசியுள்ளார்.
8. ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
9. 1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது.
10. 1729-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் பேட், ஓவல் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment