நவம்பர் 20
பெட்ரோலிய பொருட்கள்
1.அரபு மற்றும் பாரசீக நாடுகளைச் சேர்ந்தவர்கள், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கச்சா எண்ணையை பல்வேறு வகைகளாக பிரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.
2. பண்டைக்காலத்தில் எகிப்து நாட்டில் காயங்களை ஆற்றும் மருந்தாக பெரோலியப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
3. கிமு 480-ம் ஆண்டில் கச்சா எண்ணையை துணியில் முக்கி, அதை அம்பின் மீது கட்டி, எதிரி படைகள் மீது பாரசீக படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
4. அமெரிக்காவைச் சேர்ந்த டிரேக் என்பவர்தான் முதல் முறையாக கச்சா எண்ணெய்யில் இருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுத்தார்.
5.சர்வதேச அளவில் நாளொன்றுக்கு சுமார் 100 மில்லியன் பேரல் எண்ணெய் அற்பத்தி செய்யப்படுகிறது.
6.உலகின் மொத்த பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் 50 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.
7.எண்ணணெய் உற்பத்தியில் சவுதி அரேபியா முதல் இடத்திலும், அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது.
8. பிளாஸ்டிக் பாட்டில்கள், கிரேயான்ஸ், உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் உற்பத்தியிலும் கச்சா எண்ணை முக்கிய பங்கு வகிக்கிறது.
9.உலகின் எரிபொருள் தேவையில் 88 சதவீதத்தை பெட்ரோலியப் பொருட்கள் தீர்த்து வைக்கின்றன.
10. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 86 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
-------------------------------------------------------------------------------
நவம்பர் 21
நீர்மூழ்கிக் கப்பல்
1.முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் 1578-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. வில்லியம் போர்ன் என்பவர் நீர்புகாத தோலை பயன்படுத்தி இக்கப்பலை வடிவமைத்தார்.
2.ராணுவத்தினர் பயன்படுத்துவதற்கான முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் டேவிட் புஷ்னெல் என்பவரால் 1776-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இதன் பெயர் ‘டர்டில்’.
3.நீர்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப்படும் பெரிஸ்கோப், 1854-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த மேரி-டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
4. முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனியிடம் 20 நீர்மூழ்கிக் கப்பல்களும், இங்கிலாந்திடம் 74 நீர்மூழ்கிக் கப்பல்களும் இருந்தன.
5. இரண்டாவது உலகப் போரில் அமெரிக்கா 314 நீர்மூழ்கிக் கப்பல்களை பயன்படுத்தியது.
6. போர்க்களங்களில் மட்டுமின்றி ஆய்வுப் பணிகளிலும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
7.1954-ம் ஆண்டில் அணு ஆயுதத்தை பயன்படுத்தக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
8.ஜெர்மானியர்கள் இரண்டாம் உலகப் போரின்போது நீர்மூழ்கிக் கப்பலை ‘யு போட்’ என்று அழைத்தனர்.
9.நீர்மூழ்கிக் கப்பல்களை பல மாதங்களுக்கு தண்ணீருக்கு அடியில் வைத்திருக்க முடியும்.
10.நீர்மூழ்கிக் கப்பல்கள் சோனார் ராடர்களை பயன்படுத்துகின்றன.
----------------------------------------------------------------------
நவம்பர் 22
இலங்கை
1.ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது.
2.இலங்கையின் தேசிய விளையாட்டாக வாலிபால் உள்ளது.
3. இலங்கையில் உள்ள மக்களில் 92 சதவீதம் பேர் படிப்பறிவு கொண்டவர்களாக உள்ளனர்.
4. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் தேயிலை ஏற்றுமதியை சார்ந்துள்ளது.
5.இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 70 சதவீதம் பேர் பவுத்த மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
6. யானைகளை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உள்ளது. அந்நாட்டில் 7,500-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
7. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 8 பாரம்பரியச் சின்னங்கள் இலங்கையில் உள்ளன.
8.உலகிலேயே மனிதர்களால் நடப்பட்ட மிக பழமையான மரமாக கருதப்படும் ‘ஜய ஸ்ரீ மகா போதி’ இலங்கையின் அனுராதபுரா மாவட்டத்தில் உள்ளது.
9.உலக சுகாதார அமைப்பால், மலேரியா இல்லாத நாடாக 2016-ம் ஆண்டில் இலங்கை அறிவிக்கப்பட்டது.
10. மசாலா பொருட்களில் ஒன்றாக கருதப்படும் இலவங்கப் பட்டை இலங்கையில்தான் முதலில் தோன்றியுள்ளது.
---------------------------------------------------------------------------------------
நவம்பர் 23
ஸ்பைடர்மேன்
1. 1960-களின் தொடக்கத்தில், ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களைப் போல் தங்களுக்கு ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை உருவாக்கி தருமாறு மார்வல் ஸ்டுடியோ, ஸ்டான் லீ என்பவரை கேட்டுக்கொண்டது.
2. இதைத்தொடர்ந்து 1962-ம் ஆண்டில் ஸ்டான் லீயால் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.
3. ஆரம்பத்தில் மார்வல் ஸ்டுடியோவைச் சேர்ந்தவர்களுக்கு இப்பாத்திரம் பிடிக்கவில்லை. மனிதர்களுக்கு பிடிக்காத விஷயங்களில் ஒன்றாக சிலந்தி உள்ளது என்று கூறி நிராகரித்துள்ளனர்.
4.ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் 3 முறை சாகடிக்கப்பட்டுள்ளது. பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பாத்திரத்துக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டது.
5.ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை வைத்து 575 காமிக்ஸ்கள் வந்துள்ளன.
6.ஸ்பைடர்மேனின் ரசிகராக இருந்த மைக்கேல் ஜாக்ஸன், அதற்காகவே மார்வல் ஸ்டுடியோவை வாங்க விரும்பினார்.
7.ஸ்பைடர்மேனின் காதலிகளாக பல கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.
8.ஸ்பைடர் மேனை யூத இனத்தைச் சேர்ந்த இளைஞராக ஸ்டான் லீ படைத்துள்ளார்.
9.அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரமாக ஸ்பைடர்மேன் இருந்தது.
10.ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இதுவரை 6 திரைப்படங்கள் வந்துள்ளன.
No comments:
Post a Comment