நவம்பர் 28
நூலகம்
1. உலகின் பழமையான நூலகம் ஈராக்கில் உள்ள அஸிரியா எனும் இடத்தில் கி.மு 630-ம் ஆண்டில் செயல்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2. ஹார்வர்ட் நூலகத்தில் மனிதத் தோலால் தைக்கப்பட்ட 3 புத்தகங்கள் உள்ளன.
3. தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.
4. அதிக நூலகங்களைக் கொண்ட நகரமாக போலந்தின் தலைநகர் வார்சா விளங்குகிறது. இங்கு 10 ஆயிரம் பேருக்கு சராசரியாக 11 நூலகங்கள் உள்ளன.
5. பண்டைக்காலத்தில் எகிப்து நாட்டுக்கு வரும் கப்பல்களுக்கு சொந்தமான அனைத்து புத்தகங்களையும் அலெக்சாண்டிரியாவில் உள்ள நூலகத்துக்கு கொடுக்க வேண்டும் என்று விதி இருந்தது.
6. நார்வேயில் வெளியிடப்படும் புத்தகங்களில், 1,000 பிரதிகளை அந்நாட்டு அரசே வாங்கி, நூலகங்களுக்கு அனுப்பிவைக்கும்.
7. நார்வேயில் உள்ள நூலகங்களில் புத்தகத்தை எடுத்தால், அதை நாட்டின் எந்த மூலையில் உள்ள நூலகத்திலும் திருப்பிக் கொடுக்கலாம்.
8. சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம் 1890-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
9. ராஜஸ்தான் நகரின் ஜெய்சால்மர் நகரில் பூமிக்கு கீழே 16 அடி ஆழத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
10. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம்தான் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். இங்கு 22 லட்சம் புத்தகங்கள் உள்ளன.
-------------------------------------------------------------------------------------
நவம்பர் 29
பாம்பு
1. பாம்புகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றியதாக கூறப்படுகிறது.
2. உலகில் 3,686 வகையான பாம்புகள் உள்ளன.
3. பாம்புகளால் அதிகபட்சமாக மணிக்கு 12.5 மைல் வேகத்தில் ஊர்ந்து செல்ல முடியும்.
4. சில வகை பாம்புகளால் மாதக்கணக்கில் உணவு உண்ணாமல் வாழ முடியும்.
5. ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை பாம்புகள் தங்கள் தோலை உரித்துக்கொள்ளும்.
6. பாம்புகள் தங்கள் நாக்குகளின் மூலம் வாசனையை மோப்பம் பிடிக்கும்.
7. பாம்புகளின் உடலில் 12 ஆயிரம் எலும்புகள்வரை இருக்கும்.
8. மலைப்பாம்புகள் அதிகபட்சமாக 6 மீட்டர் நீளம்வரை வளரும்.
9. பாம்புகளுக்கு கண் இமைகள் இல்லை.
10.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பாம்புகள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.
----------------------------------------------
நவம்பர் 30
வட கொரியா
1.1948-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி வடகொரியா தனி நாடாக உருவானது.
2. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்தான் 1948-ம் ஆண்டு முதல் வடகொரியா ஆளப்பட்டு வருகிறது.
3. வடகொரியாவின் நிலப்பரப்பு மொத்தம் 47,399 சதுர மைல்கள்.
4. உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம் வடகொரியாவின் பியாங்யாங் நகரில் உள்ளது. இதில் 1,50 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும்.
5. சீனாதான் வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இந்நாட்டில் இருந்து மீன்வகைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
6. 18 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆணும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது அந்நாட்டில் சட்டமாக உள்ளது.
7.வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களான அவரது அப்பா, தாத்தா ஆகியோரின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்க வடகொரியாவில் தடை உள்ளது.
8. வடகொரியாவில் மொத்தம் 3 தொலைக்காட்சி சேனல்கள்தான் உள்ளன. இதில் 2 சேனல்கள் வார இறுதி நாட்களில் மட்டுமே ஒளிபரப்பாகும்.
9. இந்நாட்டுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
10. வட கொரியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். ஆனால் வாக்குச்சீட்டில் அதிபர் விரும்பும் ஒரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் மட்டுமே அச்சிடப்பட்டிருக்கும்.
----------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 1
புறா
1. புறாக்களில் மொத்தம் 344 வகைகள் உள்ளன.
2.அன்டார்டிகா, சஹாரா பாலைவனம் உள்ளிட்ட உலகின் அனைத்து பகுதிகளிலும் புறாக்களை காணமுடியும்.
3. புறாக்களை வீட்டில் வளர்க்கும் வழக்கம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது.
4. பண்டைய காலத்தில் கடிதப் போக்குவரத்துக்கு புறாக்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன.
5. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் கடிதப் போக்குவரத்தில் சிறந்த சேவையாற்றியதற்காக புறாக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
6. மொராக்கோ, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் மக்களிடையே புறாக்கறி மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது.
7. புறாக்களால் அதிகபட்சமாக மணிக்கு 92 மைல் வேகம்வரை பறக்க முடியும்.
8. புறாக்களை தனியாகக் காண்பது அரிது. அவை பெரும்பாலும் கூட்டமாகத்தான் திரியும்.
9. 1,000 மைல் தூரத்துக்கு மேல் பறந்து சென்றாலும், தங்கள் கூட்டுக்கு திரும்புவதற்கான வழியை புறாக்கள் மறப்பதில்லை.
10. 1900-ம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் புறா பந்தயம் இடம்பெற்றது.
No comments:
Post a Comment