Powered By Blogger

Wednesday, December 8, 2021

பளிச் 10 - அக்டோபர் 17 - 20

 அக்டோபர்  17

கால்பந்து
1. கால்பந்து விளையாட்டு, சீனாவில் கி.மு. 476-ம் ஆண்டில் முதல் முறையாக விளையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
2. உலகில் அதிக மக்கள் பார்க்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது.
3. கால்பந்து விளையாட்டின்போது, அதில் பங்கேற்பவர்கள் சராசரியாக 9.65 கிலோமீட்டர் தூரம் ஓடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
4. சுமார் 80 சதவீதம் கால்பந்துகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகின்றன.
5. வடகொரியாவில் உள்ள  ‘ரன்கிராடோ மே டே ஸ்டாடியம்’தான் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானமாகும்.
6. 1964-ம் ஆண்டு பெரு நாட்டில், கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
7. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றபோது, தன்னுடன் கால்பந்தை எடுத்துச்செல்ல விரும்பினார். ஆனால் நாசா அமைப்பு அதை நிராகரித்தது.
8. 1937-ம் ஆண்டு முதல் முறையாக கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
9. உலகின் மிகப் பழமையான கால்பந்து கிளப்பாக இங்கிலாந்தின் ஷெபீல்ட் கால்பந்து கிளப் உள்ளது. இது 1857-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
10. பிரேசில் நாடு அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
-----------------------------------------------------------------------------
அக்டோபர் 18
விமானம்
1. 1903-ம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை பறக்கவைத்தனர்.
2. உலகின் மிகப்பெரிய ரன்வே சீனாவில் உள்ள குவாம்பா பம்பா விமான நிலையத்தில் உள்ளது.
3. விமானத்தில் உள்ள எமர்ஜெசி மாஸ்குகளில் 15 நிமிடங்களுக்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும்.
4. விமானங்களில் பாதுகாப்பான பகுதியாக, அதன் வால் பகுதி உள்ளது.
5. விமான நிறுவனங்கள் ஆண்டுதோறும் 640 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகின்றன.
6. விமானத்தை இயக்கும்போதோ அல்லது அதற்கு முன்போ, விமானியும், துணை விமானியும் ஒரே உணவைச் சாப்பிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
7. விமானியாக இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படைத் தகுதியாகும்.
8. உலகின் மிகப்பெரிய விமான சர்வீஸ் நிறுவனமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளது.
9. பயணிகள் விமானம் சராசரியாக மணிக்கு 550 மைல் வேகத்தில் பறக்கிறது.
10. விமானங்களுக்குள் பாதரசத்தை எடுத்துச்செல்ல பயணிகளுக்கு அனுமதி இல்லை.
----------------------------------------
 அக்டோபர் 19
எலி
1. உலகில் 60-க்கும் மேற்பட்ட வகை எலிகள் உள்ளன.
2. ஒரு சில வகை எலிகளால் ஒரு மைல் தூரம் வரை நீந்திச் செல்ல முடியும்.
3. எலிகள் தங்களின் உடல் வெப்பத்தை சமன்படுத்த  வால்களை பயன்படுத்துகின்றன.
4. எலிகள் ஒரே நேரத்தில் 20 குட்டிகள் வரை போடும்.
5. ஒவ்வொரு ஆண்டிலும் விவசாய உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை எலிகள் அழிப்பதாக கூறப்படுகிறது.
6. தாங்கள் இருக்கும் சூழலில் ஒரு சிறு மாற்றம் இருந்தாலும் எலிகள் உஷாராகிவிடும்.
7. எலிகளின் பற்கள் ஆண்டுக்கு 5 அங்குல நீளம் வரை வளரும் தன்மை கொண்டது.
8. பற்கள் அதிக நீளத்துக்கு வளர்வதை தடுப்பதற்காக பிளாஸ்டிக், மரங்கள் போன்றவற்றை எலிகள் கடிக்கின்றன.
9. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேஷ்நோக் என்ற இடத்தில் எலிகளுக்கு கோயில் உள்ளது.
10. உலகின் மிகப்பெரிய எலி வகை 2009-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை எலிகளின் நீளம் 81 சென்டிமீட்டர்.
-------------------------------------------
அக்டோபர் 20
இஸ்ரோ
1. 1969-ம் ஆண்டில் டாக்டர் விக்ரம் சாராபாய்,  இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு  மையம்) அமைப்பை தொடங்கினார்.
2. இஸ்ரோ அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக் கோளாக ஆர்யபட்டா உள்ளது.
3. 1975-ம் ஆண்டில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டது.
4. 1981-ம் ஆண்டில் ஆப்பிள் செயற்கைக்கோளை ஒரு மாட்டுவண்டியில், ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்று இஸ்ரோ ஏவியது.
5. முழுக்க முழுக்க இந்தியாவால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள் எஸ்எல்வி - 3 ஆகும்.
6. கடந்த 40 ஆண்டுகளில் இஸ்ரோ அமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தின் அரை ஆண்டு பட்ஜெட் கணக்குக்கு சமமாகும்.
7. இஸ்ரோ அமைப்புக்கு இந்தியா முழுவதும் 13 மையங்கள் உள்ளன.
8. மார்ஸ் கிரகத்தை தங்கள் முதல் முயற்சியிலேயே எட்டிய ஒரே விண்வெளி அமைப்பாக இஸ்ரோ உள்ளது.
9. இந்தியாவின் மார்ஸ் திட்டம் வெறும் 450 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
10. இந்தியாவுக்காக மட்டுமின்றி, வேறு 21 நாடுகளுக்காகவும் இஸ்ரோ அமைப்பு செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது.
 

பளிச் 10 அக்டோபர் 21 - 25

 அக்டோபர்   21

கழுதை
1.கழுதைகள் முதலில் பாலைவனப் பகுதியில் தோன்றியதாக கூறப்படுகிறது.
2. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுக்காக வேலை செய்யும் விலங்காக கழுதை உள்ளது.
3. பண்டைக் காலத்தில் எகிப்தியர்கள் சரக்குகளைக் கொண்டுசெல்ல  கழுதைகளை அதிகம் பயன்படுத்தினர்.
4. கழுதைகள் குதிரைகளைவிட வலிமையான விலங்காகும்.
5. கழுதைகளால் தங்கள் 4 கால்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.
 6. கழுதைகளுக்கு நீண்ட நேரம் மழையில் நனைவது பிடிக்காது.
7.கழுதைகள் அதிகபட்சமாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
8. கழுதைகள் ஒரு குழுவாக இருக்கும்போது சிறப்பாக செயல்படும்.
9. கழுதைகளுக்கு ஞாபகசக்தி அதிகம். 25 ஆண்டுகளுக்கு முன் பார்த்த இடங்களைக்கூட அவற்றால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
10. கழுதைகளை அத்தனை சீக்கிரத்தில் பயமுறுத்த முடியாது.
-------------------------------------------------------------------
அக்டோபர் 22
எகிப்து  
1. எகிப்து  நாட்டின் நிலப்பரப்பு 1 மில்லியன் சதுர கிலோமீட்டராகும்.
2. எகிப்து நாட்டில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
3. பண்டைக்காலத்தில் எகிப்து மக்கள் கற்களால் ஆன தலையணயை உபயோகித்துள்ளனர்.
4. எகிப்தியர்கள் தங்களின் இடதுகை மோதிர விரலில் திருமண மோதிரத்தை அணிவார்கள்.
5. எகிப்திய மக்கள் பண்டைக்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபட்டனர்.
6. எரியவைத்த முட்டை ஓடுகள், எரிமலையின் சாம்பல் ஆகியவற்றைக் கொண்டு முதன்முதலில் எகிப்தியர்கள் பற்பசைகளை உருவாக்கினர்.
7. ரோமானியர்கள் 600 ஆண்டுகளுக்கு மேல் எகிப்து நாட்டை தங்கள் ஆட்சியின்கீழ் வைத்திருந்தனர்.
8. எகிப்தில் உள்ள மக்கள் முகநூல் பக்கத்தை அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
9. எகிப்து நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 70 ஆண்டுகள்.
10. உலகின் மிகப்பெரிய அணையான, ‘அஸ்வான் ஹை டாம்’ எகிப்து நாட்டில் உள்ளது. இந்த அணை 3 கிலோமீட்டர் நீளமும் 100 மீட்டர் உரமும் கொண்டது.
----------------------------------------------------------------
அக்டோபர் 23
தேசியக் கொடிகள்
1. உலகில் சதுர வடிவில் 2 தேசியக் கொடிகள் மட்டுமே உள்ளன. சுட்சர்லாந்து மற்றும் வாடிகன் நகரின் கொடிகள்தான் அவை.
2. தெற்கு சூடான் நாடு 2011-ம் ஆண்டில்தான் உருவானது ஆனால் அந்நாட்டின் தேசியக் கொடி 2005-ம் ஆண்டிலேயே உருவாகியுள்ளது.
3. அனைத்து ஸ்காண்டினேவியன் நாடுகளின் தேசியக் கொடியிலும் சிலுவை சின்னம் உள்ளது.
4. நாஜி ஜெர்மனியின் தேசியக் கொடி ஹிட்லரால் வடிவமைக்கப்பட்டது.
5. செவ்வாய் கிரகத்துக்கென்று தனியாக ஒரு கொடி 1984-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
6. பராகுவே, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தேசிய கொடிகள் ஒவ்வொரு புறத்தில் இருந்து பார்க்கும்போதும் வெவ்வேறு தோற்றத்தைக் கொடுக்கும்.
7.நிகாரகுவா, டோமினிகா ஆகிய 2 நாடுகளின் கொடிகளில் மட்டுமே ஊதா நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
8. டென்மார்க் நாட்டின் தேசியக் கொடிதான் மிகவும் பழமையான தேசிய கொடியாகும். இக்கொடி 1625 ஆண்டுமுதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
10. தனி நாடாக உருவாகி 100 ஆண்டுகள் கழித்துதான் கனடாவுக்கான தேசியக் கொடி உருவாக்கப்பட்டது.
11. 1814 முதல் 1830-ம் ஆண்டுவரை பிரான்ஸ் நாட்டின் கொடியில் வெள்ளை நிறம் மட்டுமே இருந்துள்ளது.
--------------------------------------------------------
அக்டோபர் 24
பசுபிக் பெருங்கடல்
1.190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பசுபிக் பெருங்கடல் தோன்றியதாக கூறப்படுகிறது.
2. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெர்டினான்ட் மேகலன் என்பவர்  1521-ம் ஆண்டில் பசுபிக் பெருங்கடலுக்கு இப்பெயரை வைத்துள்ளார்.
3. பசுபிக் பெருங்கடல் 165.25 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்  கொண்டுள்ளது.
4. சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பசுபிக் பெருங்கடலில் கரையில் அமைந்துள்ளன.
 5. பசுபிக் பெருங்கடல் பகுதியில் சுமார் 25 ஆயிரம் குட்டிக் குட்டித் தீவுகள் உள்ளன.
6. ஆண்டுதோறும் பசுபிக் பெருங்கடல் சுருங்கி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
7. பசுபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியாக மெரீனா டிரெஞ்ச் உள்ளது. இப்பகுதி 36,201 அடிகள் ஆழம் கொண்டது.
8. பசுபிக் பெருங்கடலுக்கு அடியில், சுமார் 40 ஆயிரம் மைல் நீளத்துக்கு மலைத்தொடர் ஒன்று அமைந்துள்ளது.
9. இக்கடலின் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து கரைகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதிகமாக கிடைக்கிறது.
10. உலகில் உள்ள எரிமலைகளில் சுமார் 75 சதவீத எரிமலைகள் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளன.
----------------------------------------------------

அக்டோபர் 25 - 28

 அக்டோபர் 25

சுனாமி
1. கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுகளால் கடலில் சுனாமி ஏற்படுகிறது.
2. சுனாமி அலைகள் 100 அடி உயரம் வரை எழும் ஆற்றல் கொண்டது.
3. கடலில் ஏற்படும் சுனாமிகளில் சுமார் 80 சதவீதம் சுனாமிகள் பசுபிக்  பெருங்கடல் பகுதியில் ஏற்படுகிறது.
4. சுனாமிகளின்போது முதல் அலை அத்தனை வலுவாக இருக்காது. அடுத்தடுத்து வரும் அலைகள்தான் வலுவானதாக இருக்கும்.
5. 2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இந்தியப்  பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமிதான், இதுவரை  உலகைத் தாக்கியதிலேயே வலுவான சுனாமி ஆகும்.
6.14 நாடுகளைத்  தாக்கிய இந்த சுனாமியில் சுமார் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
7. சுனாமி அதிக அளவில் தாக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
8. சுனாமி அலைகள் மணிக்கு 500 முதல் 800 மைல் வேகம்வரை தாக்கும்.
9. அமெரிக்கா மற்றும் கனடாவில் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் 106 மில்லியன் டாலர் வரை சேதம் ஏற்பட்டது.
10. நவீன சுனாமி எச்சரிக்கைக் கருவி, ஜப்பான் நாட்டின் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------
அக்டோபர் 26
ஆஸ்திரியா
1. ஆஸ்திரிய நாட்டின் தேசிய தினமாக அக்டோபர் 26 உள்ளது.
2. உலகின் மிகப்பெரிய பனிக்குகை ஆஸ்திரியாவின் வெர்ஃபென் எனும் இடத்தில் இருக்கிறது.
3. ஆஸ்திரியாவின் பிரபலமான விளையாட்டாக பனிச்சறுக்கு விளையாட்டு உள்ளது.
4. பனிக்கால ஒலிம்பிக் போட்டிகள் 1964 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஆஸ்திரியாவில் நடந்துள்ளது.
5. அஞ்சல் அட்டைகள் முதன்முதலில் ஆஸ்திரியாவில்தான் வெளியிடப்பட்டன.
6. வியன்னா நகரில் உள்ள ஆஸ்திரிய தேசிய நூலகம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு 2 மில்லியன் புத்தகங்கள் உள்ளன.
7. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜோசப் மாடெர்ஸ்பெர்கர் என்பவர்  1818-ம் ஆண்டில்  தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
8. ஆஸ்திரியாவில் ஒவ்வொரு குழந்தையும் 14 வயதை எட்டியதும், தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் உள்ளது.
9. ஆஸ்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் ராணுவப் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
10. ஆஸ்திரிய மக்களின் சராசரி ஆயுள் 81 வயது.
-------------------------------------------
அக்டோபர் 27
பாப்கார்ன்
1. மெக்சிகோ நாட்டில்தான் பாப்கார்ன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
2. பண்டைய காலத்தில் மக்கள் மணலைச் சூடாக்கி, அதில் பாப்கார்னை பொறிக்க வைத்துள்ளனர்.  
3. அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டியாக பாப்கார்ன் உள்ளது.
4. சார்லஸ் கிரிடர்ஸ் என்பவர் 1885-ம் ஆண்டில் பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
5. திரையரங்குகளில்  1900-களின் ஆரம்பத்தில் பாப்கார்ன்களை விற்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
6. 1912-ம் ஆண்டுமுதல் தியேட்டர்களில் பாப்கார்ன் விற்கப்படுகிறது.
7.  உலகளாவிய அளவில் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை விட பாப்கார்ன் விற்பனையில்தான் தியேட்டர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
8. பாரி ஸ்பென்சர் என்பவர் 1945-ம் ஆண்டில் பாப்கார்னை முதலில் மைக்ரோவேவ் அடுப்பில் தயாரித்தார்.
9.பாப்கார்ன்களை பொறிக்க 400 முதல் 460 டிகிரி பாரன்ஹீட் வரையான வெப்பம் தேவைப்படுகிறது.
10. மழைக்காலத்தில் பாப்கார்ன்கள் அதிகம் விற்பனையாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
-----------------------------------------------------------------
அக்டோபர் 28
செவ்வாய் கிரகம்
1. செவ்வாய் கிரகத்தை கலிலியோ கலிலீ கண்டுபிடித்தார்.
2. சூரியனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 227.9 மில்லியன் கிலோமீட்டர்.
3. செவ்வாய் கிரகம் 6.779 கிலோமீட்டர் விட்டத்தைக்  கொண்டுள்ளது.
4. செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு 51 முறை முயற்சிகள் நடைபெற்றன. இதில் 21 முயற்சிகள் மட்டுமே வெற்றி பெற்றன.
5. செவ்வாய் கிரகத்தை சென்றடையும் முயற்சியில் அமெரிக்கா 1964-ம் ஆண்டில் முதல் முறையாக வெற்றி பெற்றது.
6. ஒலிம்பஸ் மோன்ஸ் என்ற உயரமான மலை செவ்வாய் கிரகத்தில் உள்ளது.
7. செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 687 நாட்கள் ஆகும்.
8. பூமியை விட செவ்வாய் கிரகம் குளிர்ச்சியாக இருக்கும்.
9. போப்ஸ், டீமோஸ் என்ற 2 நிலவுகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன.
10. மார்ஸ் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 687 நாட்களைக் கொண்டதாகும்.
-------------------------------------------------------------------
அக்டோபர் 28
கிரிக்கெட்
1. கால்பந்துக்கு அடுத்ததாக, அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட போட்டியாக கிரிக்கெட் உள்ளது. 2.5 பில்லியன் மக்கள் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கிறார்கள்.
2. 16-ம் நூற்றாண்டில் முழுக்க முழுக்க சிறுவர்கள் விளையாடும் போட்டியாக கிரிக்கெட் இருந்தது. பின்னர் நாளடையில் இது பெரியவர்களுக்கான ஆட்டமாக உருவெடுத்தது.
3. உலகெங்கிலும் 31 நாடுகள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும், 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
4. கிரிக்கெட் போட்டிகளுக்கான பிட்ச்சின் நீளம் 20.12 மீட்டர் (22 யார்டுகள்) ஆகும்.
5. கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்தின் எடை 163 கிராம்.
6. 17-ம் நூற்றாண்டு முதல் பெண்களும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
7. கிரிக்கெட் போட்டியில் இதுவரை அதி வேகமாக பந்துவீசிய வீரர், பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் ஆவார். அவர் மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசியுள்ளார்.
8. ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
9. 1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது.
10. 1729-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் பேட், ஓவல் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 

பளிச் 10 -அக்டோபர் 28- 31

 அக்டோபர் 28

கிரிக்கெட்
1. கால்பந்துக்கு அடுத்ததாக, அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட போட்டியாக கிரிக்கெட் உள்ளது. 2.5 பில்லியன் மக்கள் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கிறார்கள்.
2. 16-ம் நூற்றாண்டில் முழுக்க முழுக்க சிறுவர்கள் விளையாடும் போட்டியாக கிரிக்கெட் இருந்தது. பின்னர் நாளடையில் இது பெரியவர்களுக்கான ஆட்டமாக உருவெடுத்தது.
3. உலகெங்கிலும் 31 நாடுகள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும், 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
4. கிரிக்கெட் போட்டிகளுக்கான பிட்ச்சின் நீளம் 20.12 மீட்டர் (22 யார்டுகள்) ஆகும்.
5. கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்தின் எடை 163 கிராம்.
6. 17-ம் நூற்றாண்டு முதல் பெண்களும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
7. கிரிக்கெட் போட்டியில் இதுவரை அதி வேகமாக பந்துவீசிய வீரர், பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் ஆவார். அவர் மணிக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசியுள்ளார்.
8. ஆயிரம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
9. 1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது.
10. 1729-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் பேட், ஓவல் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------
அக்டோபர் 29
மழை
1. மழைத்துளிகள் 0.1 முதல் 9 மில்லிமீட்டர் வரை விட்டத்தை கொண்டதாக இருக்கும்.
2. மழைத்துளிகள்  மணிக்கு 18 முதல் 22 மைல் வேகத்தில் பூமியை அடைகின்றன.
3. ஹாண்டுரஸ் நாட்டில் உள்ள யோரோ நகரில் ஒருமுறை மீன் மழை பெய்துள்ளது.
4. அதிக வெப்பமுள்ள பாலைவனப் பகுதியில் மழை பெய்தாலும், அது பாதியிலேயே ஆவியாகிவிடும்.
4. அமெரிக்காவில் உள்ள பழங்குடிகள், மழையை வரவழைப்பதற்காக கூட்டம் கூட்டமாக நடனம் ஆடுவார்கள். தங்கள் உடல் அசைவுகள் மழையை வரவழைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
5. அன்டார்டிகாவில் ஆண்டுக்கு 6.5 அங்குலம் மழை மட்டுமே பெய்கிறது.
6. ஒவ்வொரு பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற வகையில் சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு ஆகிய நிறங்களிலும் சில சமயம் மழை பெய்யும்.
7.  மேகாலயாவில் உள்ள மாசிராம் மற்றும் ஹவாயில் உள்ள மவுண்ட் வயாலேல் ஆகிய பகுதிகள் உலகில் தற்போது அதிக மழை பெய்யும் இடங்களாக உள்ளன.
8. தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயற்கை மழையை பெய்ய வைப்பதற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் டாலர்களை செலவழிக்கிறது.
9. பூமியைப் போல் மற்ற கிரகங்களிலும் மழை பெய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
10.மழைத்துளிகள் மேகத்தில் இருந்து விடுபட்டு பூமியை அடைய 2 நிமிடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------
அக்டோபர் 30
கப்பல்
1. கிமு 4000-ம் ஆண்டுவாக்கில் எகிப்தியர்கள் மரத்தால் செய்யப்பட்ட கப்பல்களை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.
2. பல்லாயிரம் ஆண்டுகளாக கப்பல்கள் இருந்தாலும், 16-ம் நூற்றாண்டு முதல்தான் அவை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
3. ஆரம்ப காலகட்டத்தில் துடுப்புகளையும், பாய்மரங்களையும் பயன்படுத்தி கப்பல்கள் இயக்கப்பட்டன.
4. 19-ம் நூற்றாண்டில் நீராவிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
5. இரண்டாம் உலகப் போரின்போது டீசல் இஞ்ஜின்களைக் கொண்ட கப்பல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
6. பயணிகள் கப்பல் சராசரியாக மணிக்கு 23 மைல் வேகத்தில் செல்லும்.
7. கப்பல்களில் பணியாற்றுபவர்கள் தங்கும் அறைகள் பெரும்பாலும் கப்பலின் கீழ்ப்பாகத்தில்தான் இருக்கும்.
8. கப்பல்களில் பூனைகள், குறிப்பாக கறுப்பு பூனைகள் இருந்தால் பயணத்தில் இடையூறுகள் இருக்காது என்ற நம்பிக்கை மேற்கத்திய நாட்டு மக்களிடையே உள்ளது.
9. சரக்கு கப்பலின் இஞ்ஜின், கார்களின் இஞ்ஜினைவிட ஆயிரம் மடங்கு ஆற்றல் வாய்ந்தது.
10. உலகின் மிகப்பெரிய கப்பலாக ‘சீவைஸ் கப்பல்’ உள்ளது. இதன் நீளம் 458.46 மீட்டர்.
-----------------------------------------------------
அக்டோபர் 31
தங்கம்
1. மனிதர்களால் இதுவரை சுமார் 2 லட்சம் டன் தங்கம் பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
2. உலகின் அனைத்து கண்டங்களிலும் தங்கம் கிடைக்கிறது.
3. தங்கத்தால் செய்யப்பட்ட மிக பழமையான பொருள் பல்கேரியாவில் கிடைத்துள்ளது. இது 6,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
4.  1912-ம் ஆண்டுவரை ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட தங்கப்பதக்கங்கள், முழுக்க முழுக்க தங்கத்தாலேயே செய்யப்பட்டன. ஆனால் அதன் பிறகு அவை வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்படுகிறது.
5.கடல்களின் ஆழத்தில் சுமார் 10 பில்லியன் டன் தங்கம் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் அவற்றை எடுப்பது மிகவும் கடினம்.
6. தங்கத்தை 1,064 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் உருக்கலாம்.
7. தங்கம் உற்பத்தியில் தற்போது சீனா முதல் இடத்தில் உள்ளது.
8. உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டியை மிட்சுபிஷி நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் எடை 250 கிலோ.
9. உலகின் மிகப்பெரிய தங்கக் காசு வியன்னாவில் உள்ளது. அதன் எடை 31.1 கிராம்.
10. ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 0.2மில்லிகிராம் தங்கம் இருக்கும்.

பளிச் 10 - நவம்பர் 1 - 6

 நவம்பர் 1

அல்ஜீரியா
1. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடாகவும், உலகின் 10-வது மிகப்பெரிய நாடாகவும் அல்ஜீரியா உள்ளது.
2. அந்நாட்டின் பரப்பளவில் ஐந்தில் நான்கு பங்கு பாலைவனமாக உள்ளது.
3. அல்ஜீரியாவின் மொத்தமுள்ள நிலப்பகுதியில், சுமார் 12 சதவீத இடத்தில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்.
4. நவம்பர் 1-ம் தேதி அல்ஜீரியாவில் தேசிய புரட்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
5. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 7 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அல்ஜீரியாவில் உள்ளன.
6. 2019-ம் ஆண்டில் மலேரியா இல்லாத நாடாக அல்ஜீரியா அறிவிக்கப்பட்டது.
7. கால்பந்தில் சிறந்து விளங்கும் அல்ஜீரியா, ஆப்பிரிக்க கோப்பையை 2 முறை வென்றுள்ளது.
8. அல்ஜீரிய மக்களில் 99 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர்.
9. எண்ணெய் வளமிக்க நாடான அல்ஜீரியா, மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்காத நாடாக உள்ளது.
10. அல்ஜீரிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
-----------------------------------------------------------------------------------------
நவம்பர் 2
 ஒட்டகம்
1. ‘கேமல்’ (ஒட்டகம்) என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்தது. இச்சொல்லுக்கு அழகு என்று அர்த்தம்.
2. ஒட்டகங்கள் ஒரே நேரத்தில்  200 லிட்டர்  தண்ணீர்வரை குடிக்கும்.
3.தண்ணீரும் உணவும் இல்லாமல் ஒட்டகங்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும்.
4. ஒட்டகங்கள் 3 மீட்டர் உயரம்வரை வளரும்.
5. உலகில் 1 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
6. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒட்டகக் கறி சாப்பிடுகிறார்கள்.  அரேபிய நாட்டில் திருமணங்களின்போது விசேஷ உணவாக ஒட்டக வறுவல் பரிமாறப்படுகிறது.
7. ஒட்டகங்களால் அதிகபட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓட முடியும்.
8. பண்டைக்காலத்தில் குதிரைப்படையைப் போல ஒட்டகப் படையும் பல நாடுகளில் இருந்துள்ளது.
9. கண்களை தூசி மற்றும் வெயிலில் இருந்து காப்பதற்காக ஒட்டகங்களுக்கு 3 கண் இமைகள் உள்ளன.
10. இந்தியாவில் உள்ள ஒட்டகங்களில் சுமார் 80 சதவீதம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன.
--------------------------------
நவம்பர் 3
புலி
1. உலகில் உள்ள புலிகளில் சுமார் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளன.
2. புலிகளால் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம்வரை ஓட முடியும்.
3. புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள்வரை உயிர்வாழும்.
4. நன்கு வளர்ந்த புலிகளின் எடை 360 கிலோ வரை இருக்கும்.
5. புலிகளின் உறுமல் சத்தம் 3 கிலோமீட்டர் தூரம்வரை கேட்கும்.
6. புலிகளால் இரவில் நன்றாகப் பார்க்க முடியும். அதனால் அவை பெரும்பாலும் இரவில்தான்   வேட்டையாடும்.
7. எப்போதும் புலிகள் தனியாகத்தான் தங்கள் இரைகளை வேட்டையாடும்.
8. ஒவ்வொரு புலிகளின் உடல்களில் உள்ள வரிகளிலும் வித்தியாசம் இருக்கும். இதை வைத்து புலிகளை தனித்தனியாக அடையாளம் காண முடியும்.
9. காயங்களுக்கு சிறந்த மருந்தாக புலிகளின் எச்சில் கருதப்படுகிறது.
10. புலிகள் நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை உறங்கும்.
------------------------------------------------------------
நவம்பர் 4
பட்டாசு
1. சீனாவில் கிபி 7-ம் நூற்றாண்டில் பட்டாசுகள் முதலில் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. பட்டாசு உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது.
3. இங்கிலாந்தில் 1486-ம் ஆண்டு நடந்த மன்னர்  7-ம் ஹென்றியின் திருமணத்தில் முதல் முறையாக வாணவெடிக்கை நடத்தப்பட்டது.  
4. விண்ணில் சென்று வெடிக்கும் மிகப்பெரிய ராக்கெட் 2010-ம் ஆண்டில் போர்ச்சுக்கல் நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதன் எடை 13 கிலோ.
5. தீபாவளிக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட்கள் 200 மீட்டர் உயரம் வரை செல்லும்.
6. 16-ம் நூற்றாண்டிலேயே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
7. இந்தியாவின் முதலாவது பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை கொல்கத்தாவில் 19-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
8. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசி முதல் இடத்தில் உள்ளது.
9. அமெரிக்காவில் 1777-ம் ஆண்டில்தான் பட்டாசுகள் முதல் முறையாக அறிமுகமாகின.
10. உலகின் மிகப்பெரிய வாணவெடிக்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்த வானவேடிக்கை 61 நிமிடங்கள் 32 வினாடிகளுக்கு நீடித்தது.
 -------------------------
நவம்பர் 6
பனாமா கால்வாய்
1. அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இனைக்கும் வகையில்   பனாமா நாட்டின் குறுக்கே இக்கால்வாய் உள்ளது.
2. பனாமா கால்வாயை வெட்டும் பணிகள்  1903-ம் ஆண்டில் தொடங்கி 1914-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
3. இக்கால்வாயை வெட்டும் பணியில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் பலரும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
4. 1977-ம் ஆண்டுவரை, இக்கால்வாய் இதைக் கட்டிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது.
5. இக்கால்வாயில் பயணிக்கும் கப்பல்களிடம், அவற்றின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
6. ஒவ்வொரு நாளும் சராசரியாக 35 முதல் 40 கப்பல்கள் வரை பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன.
7. பனாமா கால்வாயின் நீளம் 77 கிலோமீட்டர்.
8. இக்கால்வாய் இல்லாவிட்டால்,  கப்பல்கள் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல நேரிடும்.
9. நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக பனாமா கால்வாய் கருதப்படுகிறது.
10. பனாமா கால்வாய் திறக்கப்பட்ட நாள்முதல் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் இதைக் கடந்து சென்றுள்ளன.