பளிச் பத்து
------------------------
எறும்பு
உலகில் மனிதர்கள் வாழக்கூடிய எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் மற்றொரு உயிரினமாக எரும்புகள் விளங்குகின்றன.
சுமார் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகில் எறும்புகள் தோன்றியதாக கூறப்படுகிறது.
உலகில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையிலான எறும்புகள் உள்ளன.
ஒரு எறும்பால், தனது எடையைவிட 20 மடங்கு அதிகமான எடையைத் தூக்க முடியும். ஒரு சில எறும்புகள் தங்கள் எடையை விட 50 மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன.
2 எறும்புகளுக்குள் சண்டை ஏற்பட்டால், ஏதாவது ஒரு எறும்பு இறக்கும் வரை அந்தச் சண்டை நீளும்.
எறும்புகளுக்கு நுரையீல் கிடையாது. தங்கள் உடலில் உள்ள ஏராளமான ஓட்டைகள் மூலம் அவை சுவாசிக்கும். நீருக்கடியில் மூச்சுவிடாமல் நாள்முழுக்க இவற்றால் இருக்க முடியும்.
உலகின் மிகப்பெரிய எறும்பாக புல்லட் எறும்பு கருதப்படுகிறது. இந்த எறும்புகள் 1.6 அங்குலம் வரை வளரக்கூடியது.
எறும்புகள் பல்வேறு காலனிகளாக குழுக்களாக வாழும். ஒவ்வொரு காலனியிலும் சுமார் 40 ஆயிரம் எறும்புகள் வரை இருக்கும். காலனிகளில் உள்ள ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொரு வகையான வேலைகளைச் செய்யும்.
காலனிகளின் தலைவியாக ராணி எறும்புகள் கருதப்படுகின்றன. இவை 30 ஆண்டுகள்வரை வாழும்.
எறும்புகள் சிறியதாக இருந்தாலும், அதன் மூளை மிகவும் பெரியது. ஒவ்வொரு எறும்பும் 2.50 லட்சம் மூளை அணுக்களை கொண்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------
உப்பு
பண்டைக்காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தில் விலை மதிப்புமிக்க பொருளாக உப்பு கருதப்பட்டது. இதனால் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு சம்பளமாக உப்பு வழங்கப்பட்டது.
ஆங்கிலத்தில் உப்பு, ‘சால்ட்’ என்று அழைக்கப்படுகிறது. இதைச் சம்பளமாக வழங்கியதால்தான் சம்பளத்துக்கு ‘சாலரி’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
எகிப்து நாட்டில் பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்த உப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களில் ஒன்றாக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரக போராட்டத்தை நடத்தினார்.
மனிதர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் குறிப்பின்படி இந்தியர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 10 கிராம் உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இது பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 5 கிராம் அதிகமாகும்.
அதிக அளவில் உப்பை சேர்த்துக்கொள்வதால், ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி பிரெஞ்ச் பிரை போன்ற பாஸ்ட் புட் உணவுகளில் அதிகப்படியான உப்பு உள்ளது.
மனிதர்களின் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் உப்பு கலந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் உப்பு ஏற்றுமதியில் இத்தாலி முதலிடத்தில் இருந்தது. அந்நாட்டின் செல்வச் செழிப்புக்கு இது காரணமாக இருந்தது. இத்தாலியில் உள்ள சால்ச்பர்க் என்ற நகரம், ‘சிட்டி ஆஃப் சால்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
.
-----------------------------------------------------------------------------------------------------
பேனா
காய்கறிகள் மற்றும் பழங்களின் வண்ணச் சாறுகளைத் தொட்டு எழுதக்கூடிய பேனாக்களை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இப்போது நாம் பயன்படுத்தி வரும் பேனா (மையை ஊற்றி எழுதும் பேனா), 1883-ம் ஆண்டில் நியூயார்க் நகரைச் சேர்ந்த லீவிஸ் எட்ஸன் வாட்டர்மேன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
உலகின் முதல் பால்பாயிண்ட் பேனா, 1938-ம் ஆண்டு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லாஸியோ பிரோ என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்டது.
ஒரு பேனாவை வைத்துக்கொண்டு சராசரியாக 45 ஆயிரம் வார்த்தைகளை எழுத முடியும்.
உலகின் மிகப்பெரிய பேனாவை ஆச்சார்ய மகுன்ரி ஸ்ரீநிவாசா என்பவர் 2011-ம் ஆண்டு தயாரித்தார். 5.5 மீட்டர்கள் உயரம் கொண்ட இந்த பேனா 37 கிலோ எடைகொண்டது. இப்பேனா கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
புதிய பேனாவை வாங்குபவர்களில் 95 சதவீதம் பேர் தங்கள் பெயரைத்தான் முதலில் எழுதுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கையில் பேனாவை வைத்துக்கொண்டு யோசிக்கும்போது, அதன் மூடியை கடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அந்த வகையில் ஆண்டுக்கு சராசரியாக 100 பேராவது, பேனா மூடிகளை விழுங்கியதால் வரும் பாதிப்பால் இறந்துள்ளார்களாம்.
அமெரிக்க அதிபர்கள் ஒருமுறை பயன்படுத்திய பேனாவை மறுமுறை பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு ஆவணங்களிலும் கையெழுத்திட வித்தியாசமான வேறு பேனாக்களைத்தான் பயன்படுத்துவார்கள்.
விண்வெளியில் எழுதுவதற்கு பயன்படக்கூடிய பேனாவை பால் பிஷர் என்பவர் 1968-ம் ஆண்டில் வடிவமைத்தார்.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்கா, ஆண்டொன்றுக்கு 2 பில்லியன் பேனாக்களை தயாரிக்கிறது.
---------------------------------------------------------------------------
ஸ்பூன்
கற்காலத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மரங்கள், யானைத் தந்தங்கள் போன்றவற்றால் ஆன ஸ்பூன்களை பயன்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிற்காலத்தில் கிரேக்கம் மற்றும் ரோம நாடுகளில் ஸ்பூன்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இங்குள்ள ராஜகுடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பித்தளை மற்றும் வெள்ளியால் ஆன கரண்டிகளை பயன்படுத்தி உள்ளனர்.
கிபி 1259-ம் ஆண்டில், இரண்டாம் இங்கிலாந்து மன்னரான முதலாம் எட்வர்ட், தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன ஸ்பூன்களை பயன்படுத்தியதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
16-ம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்கள், தாங்கள் வெளியில் செல்லும்போதெல்லாம் உணவு உண்பதற்கு வசதியாக ஸ்பூன்களையும் தங்களுடன் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஸ்பூன்களைப் பரிசாக கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்தில் மேற்கத்திய நாடுகளில் இருந்துள்ளது.
உலகில் 50-க்கும் மேற்பட்ட வகை கரண்டிகள் உணவைச் சமைப்பதற்கும், உண்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
உலகின் அதிக விலை மதிப்புமிக்க ஸ்பூனாக 1490-ல் தயாரிக்கப்பட்ட அபோஸ்டல் ஸ்பூன் விளங்குகிறது. இந்த ஸ்பூன் 1993-ம் ஆண்டில் 55 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டெஸ் வாரன் என்பவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய ஸ்பூன்களை சேகரித்து வைத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஸ்பூன், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் 2019-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இதன் நீளம் 16.18 மீட்டர்.
நியூஜெர்ஸி நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் 5,400 அரிய ஸ்பூன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
-------------------------------------------------------
வெங்காயம்
கி.மு. 5000 ஆண்டிலேயே மக்கள் வெங்காயத்தைச் சாப்பிட்டதற்கான ஆதாரம் உள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்களில் ஒரு பகுதியினர் வெங்காயத்தைப் பணமாக பயன்படுத்தி உள்ளனர். வாடகை செலுத்துவது, பரிசு கொடுப்பது என பல விஷயங்களுக்கு வெங்காயம் பயன்பட்டுள்ளது.
பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், போட்டிக்கு முன்னதாக தங்களை வெறியேற்றிக்கொள்ள வெங்காயச் சாறை குடித்துள்ளனர். மேலுட்ம் அதை உடல் முழுவதும் பூசியுள்ளனர். அது தங்களுக்கு கூடுதல் ஆற்றலை அளிக்கும் என்று அவர்கள் நம்பினர்.
உலகிலேயே லிபியா நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் வெங்காயத்தை அதிகமாக சாப்பிடுகிறார்களாம். அந்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஆண்டொன்றுக்கு சராசரியாக 14 பவுண்ட் வெங்காயத்தை சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது.
உலகில் 27 வகையான வெங்காயங்கள் உள்ளன. அனைத்து வகை வெங்காயங்களும் பூமிக்கு அடியில்தான் விளைகின்றன. மிக எளிதில், எல்லா விதமான மண்ணிலும் வளரக்கூடியதாக வெங்காயச் செடிகள் உள்ளன.
வெங்காயத்தை உரிக்கும்போது பலருக்கும் கண்ணீர் வருவது வழக்கம். வெங்காயத்தில் சல்பியூரிக் அமிலம் இருப்பதே இதற்கு காரணம்.
பண்டைக்காலத்தில் எகிப்தியர்கள், வெங்காயத்தை ஒரு கடவுளாக நினைத்து வழிபட்டுள்ளனர்.
உலகிலேயே இதுவரை அதிக எடை கொண்டதாக கருதப்படும் வெங்காயத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் கிளேஸ்புரூக் என்பவர் 2011-ம் ஆண்டு வளர்த்துள்ளார். கிட்டத்தட்ட 18 பவுண்ட் எடைகொண்ட இந்த வெங்காயம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
வெங்காயத்தில் குறைந்த அளவுக்கான கலோரிகளே உள்ளன. அதே நேரத்தில் இதில் கால்ஷியம், வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன .
வெங்காயப் பயிர் விளைவதற்கு, வெயில் மிகவும் சத்தியாவசியமானது. களிமண் பகுதியில் வெங்காயம் அவ்வளவாக வளராது.
No comments:
Post a Comment