Powered By Blogger

Monday, November 8, 2021

பளிச் 10 - ஆகஸ்ட் 1-4

 நிலா

1. பூமியில் இருந்து  ஆண்டுதோறும் சுமார் 1.5 அங்குலம் தூரம் நிலா விலகிச்  சென்றுகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
2.அடுத்த 6 ஆண்டுகளுக்குள் நிலவில் பயிர்களை விளைவிக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா திட்டமிட்டுள்ளது.
3. கடல் அலைகளின் வேகம் குறைவதற்கும், அதிகரிப்பதற்கும் நிலவின் ஈர்ப்பு சக்தி முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.
4. நிலவைவிட உருவத்தில் 400 மடங்கு பெரியதாக சூரியன் உள்ளது.
5.பூமியில் உள்ள புவியீர்ப்பு சக்தியில் ஆறில் ஒரு பங்குதான் நிலவில் உள்ளது.
6. நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்  238,857 மைல்களாக  (384,403 கிலோமீட்டர்கள்) கணக்கிடப்பட்டுள்ளது.
7. நிலவுக்கு காரில் செல்வதாக இருந்தால், மணிக்கு 80 மைல் வேகத்தில் அதை ஓட்டிச் சென்றால் 4 மாதங்களில் நிலவை அடையலாம்.
8. 70 விண்கலங்கள், பழைய காலணிகள், மனிதக் கழிவுகள் உட்பட நிலவில் மனிதர்களால் 200 டன் குப்பைகள் போடப்பட்டுள்ளன.
9. உலகின் முதல் மனிதராக 1969-ம் ஆண்டில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடியை எடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து இதுவரை 12 விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுள்ளனர்.
10.விண்வெளி வீரராக இருந்த ஈகன் ஷுமேக்கரின்  (Eugene Shoemaker) அஸ்தி  நிலவில் தூவப்பட்டுள்ளது.
--------------------------------------------
ஜூலை மாதம்
1.ஜூலியஸ் சீசரின் பெயரால் இம்மாதத்துக்கு ஜூலை மாதம் என பெயர் வந்தது.
2.ஜூலியஸ் சீசர்  ஜூலை மாதத்தில் பிறந்ததால், இதற்கு இப்பெயர்  வைக்கப்பட்டது
3.இப்பெயர் வருவதற்கு முன்பு, ஜூலை மாதம் குட்யின்டிலிஸ்  (Quintilis) என்று அழைக்கப்பட்டு வந்தது.
4.ஆண்டின் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஜூலை மாதம் வருவதால், ஐரோப்பியர்கள் பல நல்ல விஷயங்களை இம்மாதத்தில்  தொடங்குவார்கள்.
5. ஜூலை மாதத்தில்தான் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்தார்.
6. அமெரிக்க சுதந்திர தினம் ஜூலை மாதத்தில் வருகிறது.
7.அமெரிக்க அதிபர்கள் பலர் (7 பேர்)  ஜூலை மாதத்தில்தான் இறந்துள்ளனர்.
8.  மாவீரன் அலெக்சாண்டர், நெல்சன் மண்டேலா போன்ற சிறந்த வீரர்களும், தலைவர்களும் இம்மாதத்தில் பிறந்துள்ளனர்.
9. இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதத்தில்தான் அதிக வெப்பநிலை பதிவாகும்.
10. உலகின் முதல் அணுகுண்டு ஜூலை மாதம்தான்  (1945, ஜூலை 16) பரிசோதிக்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் உலகப் போர்
1.இரண்டாம் உலகப் போர் 1939-ம் ஆண்டுமுதல் 1945-ம் ஆண்டுவரை நடைபெற்றது.
2.இரண்டாம் உலகப் போரின்போது நேசப் படைகள் 3.4 மில்லியன் டன் குண்டுகளை ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் வீசியதாக கூறப்படுகிறது.
3. ஹிரோஷிமா, நாகசாகிக்கு அடுத்ததாக டோக்கியோ நகரின் மீதும் அணுகுண்டு வீச நேசநாட்டுப் படைகள் திட்டமிட்டிருந்தன. ஆனால் அதற்குள் ஜப்பான் சரணடைந்தது.
4. இரண்டாம் உலகப் போரில் சுமார் 70 மில்லியன் பேர் உயிரிழந்தனர்.
5. இப்போரில் அதிகம் பேரை இழந்தது சோவியத் யூனியன்தான்.  போரின்போது அந்நாட்டில் 26.6 மில்லியன் பேர் உயிரிழந்தனர்.
6. இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றதிலேயே இளம் வயதுடையவராக அமெரிக்காவின் கிரஹாம் கருதப்படுகிறார். அவர் 12 வயதில் அமெரிக்க கடற்படையில் பணியாற்றினார்.
7. இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டுகள் பலவும் இன்னும் ஜெர்மனியில் மண்ணுக்கடியில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.
8. இரண்டாம் உலகப் போரின்போது 1.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
9. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறைந்து, சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கம் ஓங்கியது.
10. 1940-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி முதல், தொடர்ந்து 57 நாட்களுக்கு லண்டன் நகரின் மீது குண்டுவீச்சு நடந்தது.
-------------------------------------------------------------------------------------------------------
 தவளை
1. டைனோசர் தோன்றிய காலத்திலேயே தவளைகளும் தோன்றியதற்கான ஆதாரம் இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2. இவ்வுலகில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  தவளை வகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
 3.தவளைகளால் ஒரே நேரத்தில் 130 அங்குலம் தூரம்வரை தாவ முடியும்.
4. பூச்சிகள்,  புழுக்கள் ஆகியவற்றைத் தின்று தவளைகள் உயிர்வாழ்கின்றன. அதே நேரத்தில் பாம்புகளின் முக்கிய உணவாக தவளை உள்ளது.
5. தாங்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் உடல் வெப்பத்தை மாற்றும் ஆற்றல் தவளைகளுக்கு உள்ளது. தவளைகளால்  பாலைவனத்திலும்,  பனிமலையிலும் வாழ முடியும்.
6.உலகின் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதால், தவளை இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.
7. தவளைகள் தங்கள் தோலின் மூலம் நீரை உறிஞ்சும். அதனால் அவை தனியாக தண்ணீர் குடிக்க தேவையில்லை.
8. ஒருசில வகை தவளைகள் போடும் சத்தம் ஒரு மைல் தூரம் வரை கேட்கும்.
9. எகிப்து நாட்டில் வளமையின் சின்னமாக தவளைகள் கருதப்படுகின்றன.
10.பெண் தவளைகள், தாங்கள் கருவுற்றிருக்கும் காலத்திலேயே குட்டிகளுக்கான உணவை சேமித்து வைக்கும்.
------------------------------------------------------------

No comments:

Post a Comment