Powered By Blogger

Monday, November 8, 2021

ஆகஸ்ட் 24 - 27

 ஆகஸ்ட்   24

பாராலிம்பிக் போட்டி
1.முதலாவது பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்றது.
2. முதல்  பாராலிம்பிக் போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
3. பாராலிம்பிக் போட்டியை ஜப்பான் இரண்டாவது முறையாக நடத்துகிறது. அந்நாடு ஏற்கெனவே 1964-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளது.
4. அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான டிரிஷா சோர்ன், பாராலிம்பிக் போட்டிகளில் அதிகபட்சமாக 55 பதக்கங்களை வென்றுள்ளார்.
5. இந்த ஆண்டு நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டியில் 23 பிரிவுகளில் 4,350 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
6. பாட்மிண்டன் மற்றும் டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகள்  இந்த பாராலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.
7. இந்த பாராலிம்பிக் போட்டிக்கான சின்னம் ‘சொமேட்டி’  என்று அழைக்கப்படுகிறது.
8. 1968-ம் ஆண்டுமுதல் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்று வருகிறது.
9.இந்த பாராலிம்பிக் போட்டியில் 9 பிரிவுகளில் 54 இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்.
10. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது.
--------------------------------------------------------------------------------
ஆகஸ்ட் 25
 வைரம்
1. பூமியில் இருந்து சுமார் 100 மைல் ஆழத்தில் இருந்து வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
2. வைரக் கற்கள் நட்சத்திரங்களில் இருந்து உதிர்ந்தவை என்று பண்டைய காலத்தில் கிரேக்க மற்றும் ரோமானிய மக்கள் நம்பினர்.
3. கிமு 400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் வைரத்தை அணியத் தொடங்கியுள்ளனர்.
4. கிபி முதல் நூற்றாண்டு வரை, உலகில் இந்தியர்கள் மட்டுமே வைரத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
5. வைரக் கற்களை வெட்டி பாலீஷ் செய்யும்போது அதன் மொத்த எடையில் 50 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது.
6. வைரக் கற்களால் சில நோய்களை குணப்படுத்த முடியும் என்று முன்காலத்தில் நம்பப்பட்டது.
7. வைரங்கள் மிகவும் உறுதியானவை. ஒரு வைரத்தை மற்றொரு வைரத்தால்தான் அறுக்க முடியும்.
8. போருக்கு செல்லும்போது வைர நகைகளை அணிந்து சென்றால் வெற்றி பெற முடியும் என்று முற்காலத்தில் அரசர்கள் நம்பினர்.
9. 1477-ம் ஆண்டு முதல்தான் திருமண நிச்சயதார்த்தத்துக்கு வைர மோதிரத்தை அணிவிக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டது.
10. சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுப்பதைத் தவிர, சில சமயங்களில் ஆறுகளின் அடியில் இருந்தும் வைரங்கள் கிடைக்கின்றன.
---------------------------------------------------------------
ஆகஸ்ட் 26
எகிப்திய பிரமிட்கள்
1.எகிப்து நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பிரமிடுகள் உள்ளன.
2. எகிப்தில் உள்ள ஒவ்வொரு பிரமிடுகளையும் கட்ட தலா  20 ஆண்டுகள் வரை ஆகியுள்ளன.
3. இவற்றைக் கட்டுவதற்கு 50 ஆயிரம் ஊழியர்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
4. இன்றைய காலகட்டத்தில் ஒரு பிரமிடைக் கட்ட வேண்டுமென்றால், 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
5. இந்த பிரமிடுகளைக் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கற்களும் 10 டன்களை விட அதிக எடை கொண்டவையாக உள்ளன.
6. பிரமிடுகளின் கதவுகள் 20 டன் எடை கொண்டவையாக உள்ளன.
7. முற்காலத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய அமைப்பாக பிரமிடுகள் இருந்துள்ளன.
8. பிரமிடுகளுக்குள் ரகசிய கதவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
9. கிசா நகரில் உள்ள குஃபு  பிரமிட், 5,750,000 டன் எடை கொண்டது. இதன் உயரம் 481 அடிகள்.
10. பிரமிடுகளின் உட்புறம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
----------------------------------------------
ஆகஸ்ட் 27
செல்போன்
1. மோடோரோலா நிறுவனத்தைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர் என்ற பொறியாளர், 1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி முதலாவது செல்போனை தயாரித்தார்.
2. உலகின் முதல் செல்போனின் எடை 1.1 கிலோவாக இருந்தது.
3. முதல் முறையாக விற்பனைக்கு வந்தபோது செல்போனின் விலை 4 ஆயிரம் டாலர்களாக  (2.97 லட்சம் ரூபாய்) இருந்தது.
4. உலகின் முதலாவது ஸ்மார்ட் போன் 1994-ம்-ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
5. தற்காலத்தில் கம்ப்யூட்டர்களைவிட அதிக ஆற்றல் வாய்ந்தவையாக செல்போன்கள் உள்ளன.
6. 70 சதவீதம் செல்போன்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.
7. செல்போனில் இருந்து வரும் அதிர்வலைகளால் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
8. நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கும் மேல் செல்போன்களை பயன்படுத்துபவர்கள், மன அழுத்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
9. செல்போனை பயன்படுத்துபவர்கள், நாளொன்றுக்கு அதைச் சராசரியாக 150 முறையாவது பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
10. பின்லாந்து நாட்டில் 2000 ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டிலும் செல்போன்களை அதிக தூரத்துக்கு  தூக்கியெறியும் போட்டி நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment