Powered By Blogger

Monday, November 8, 2021

பளிச் 10 - ஜூலை 22 - 25

 ஜூலை 22

டோக்கியோ
1.டோக்கியோ நகரம், முன்பு எடொ (Edo ) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான்  அந்நகரின் பெயர் டோக்கியோ என்று மாற்றப்பட்டது.
2. 1868-ம் ஆண்டுமுதல், இந்நகரம் ஜப்பானின் தலைநகராக உள்ளது.
3..உலகிலேயே அதிக மக்கள் வாழும் மெட்ரோபாலிட்டன் நகரமாக டோக்கியோ உள்ளது. இங்கு 3.8 கோடி பேர் வசிக்கின்றனர்.
4.வெளிநாட்டு மக்கள் இந்நகரில் வரியில்லாமல்  பொருட்களை வாங்க முடியும்.
5. வானிலை தெளிவாக உள்ள நாட்களில், டோக்கியோ நகரில் இருந்து பியூஜி மலையைப் பார்க்க முடியும்.
6.அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவதால், அவற்றைத் தாங்கும் வகையில் இங்குள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
7.2-ம் உலகப் போரின்போது  2 நாட்களில் நடந்த குண்டுவீச்சில் மட்டும் டோக்கியோவைச் சேர்ந்த 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
8.அமெரிக்காவில் உள்ளதைப் போன்று டோக்கியோ நகரிலும் டிஸ்னி லேண்ட் உள்ளது.
9.டோக்கியோ நகரில் மொத்தம் 150 அருங்காட்சியகங்கள் உள்ளன.
10. 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு உள்ளன.
-----------------------------------------------------------
ஜூலை 23
ஒலிம்பிக் போட்டி
1. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, 1894-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரன் பைரே டி கியூபெர்டின் என்பவரால் தொடங்கப்பட்டது.
2.நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் தொடங்கியது.
3. 1900-ம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் பெண்கள் முதல் முறையாக கலந்துகொண்டனர். இதில் 22 பெண்கள் பங்கேற்றனர்.
4.ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்ற நாடு அமெரிக்கா. அந்நாடு இதுவரை 2,827 பதக்கங்களை வென்றுள்ளது.
5. ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வழங்கும் வழக்கம் 1904-ம் ஆண்டில் தொடங்கியது.
6.ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கம் வெள்ளியால் தயாரிக்கப்படுகிறது. இப்பதக்கத்தில் 6 கிராம் தங்கத்தில் முலாம் பூசப்பட்டுள்ளது.
7. அமெரிக்க நாடு மிக அதிகபட்சமாக 4 முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளது.
8.முதலாவது மற்றும் 2-வது உலகப் போர் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.
9.1900 ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் இடம்பெற்றிருந்தது.
10. பெர்லின் நகரில் 1936-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிதான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.
-------------------
ஜூலை 24
முதலாம் உலகப் போர்
1. முதலாம் உலகப் போர் 1914-ம் ஆண்டு ஜூலை 19 முதல் 1918-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதிவரை நடைபெற்றது.
2. 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6.50 கோடி பேர் முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். இதில் 1 கோடி பேர் உயிரிழந்தனர்.
3. இந்தப் போரில் பீரங்கி பொருத்தப்பட்ட டாங்குகளை ஆண் டாங்கிகள் என்றும், இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட டாங்கிகளை பெண் டாங்கிகள் என்றும் அழைத்தனர்.
4. முதலாம் உலகப் போரின்போது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தகவல்களை அனுப்ப, ராணுவ வீரர்கள் நாய்களையும், புறாக்களையும்  பயன்படுத்தினர்.
5. முதலாம் உலகப் போரில் அமெரிக்காவுக்கு 30 பில்லியன் டாலர்கள் செலவானது.
6. முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆஸ்ட்ரோ ஹங்கேரியன், ஜெர்மன், ரஷ்யன் மற்றும் ஒட்டோமன் சாம்ராஜ்யங்கள் பெரும் சரிவைச் சந்தித்தன.
7. முதலாம் உலகப் போரில் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடாக ரஷ்யா இருந்தது. அந்நாட்டுப் படையில் 12 மில்லியன் வீரர்கள் இருந்தனர்.
8. முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் அமெரிக்கா, மிகப்பெரிய ராணுவ வல்லரசாக மாறியது.
9. இப்போருக்குப் பிறகு இங்கிலாந்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்நாடு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
10. முதலாம் உலகப் போரில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளும் பயன்படுத்தப்பட்டனர்.
----------------------------------------------------------------------
 ஜூலை 25
ரோஜா
1.ரோஜாக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றியிருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2.பண்டைய காலத்தில் ரோமானியர்கள், கட்டிடங்கள், அறைகலன்கள் மற்றும் தங்களை அலங்கரிக்க ரோஜா மலர்களை பயன்படுத்தியுள்ளனர்.
3.உலகின் மிகப் பழமையான ரோஜாச் செடி ஜெர்மனி நாட்டில் உள்ள ஹில்டெஷிம் கத்தீட்ரலில் உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையானது.
4.அமெரிக்கா, இங்கிலாந்து, மாலத்தீவு, ஈரான், இராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின்  தேசிய மலராக ரோஜா உள்ளது.
5. சிவப்பு ரோஜா காதலையும், மஞ்சள் ரோஜா நட்பையும், ஊதா நிற ரோஜா பெண்மையையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
6.ரோஜாக்களில் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன.
7.இந்த உலகில் 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன.
8. சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, ஆரஞ்சு என பல்வேறு வண்ணங்களில் ரோஜாக்கள் பூக்கின்றன.
9.உலகின் மிகப்பெரிய ரோஜாப்பூ கலிபோர்னியாவில் பூத்துள்ளது. இதன் விட்டம் 33 அங்குலம்.
10. உலகின் மிகப்பெரிய ரோஜாச் செடியும் கலிபோர்னியாவில் உள்ளது. இச்செடி 18.8 அடி உயரம் கொண்டது.

No comments:

Post a Comment