ஆகஸ்ட் 4
லோவ்லினா போர்கோஹெய்ன்
1.டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் ஆடவுள்ள லோவ்லினா போர்கோஹெய்ன், அசாமில் உள்ள கோலாகாட் மாவட்டத்தில் 1997-ம் ஆண்டில் பிறந்தார்
2.லோவ்லினாவின் அப்பா, சிறிய அளவில் தேயிலை எஸ்டேட்டை வைத்துள்ளார்.
3.லோவ்லினாவின் 2 மூத்த சகோதரிகளும் கிக் பாக்ஸிங்கில் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களைப் பின்பற்றி லோவ்லினாவும் முதலில் கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
4. 2012-ம் ஆண்டுமுதல், இந்திய விளையாட்டு ஆணையத்தில் லோவ்லினா குத்துச்சண்டை பயிற்சி பெற்றார். சில ஆண்டுகளிலேயே தேசிய அளவிலான போட்டிகளில் வென்றார்.
5. லோவ்லினாவுக்கு முகமது அலி, மேரி கோம் ஆகியோர் ரோல் மாடலாக இருந்துள்ளனர்.
6. சந்தியா குருங் என்ற பயிற்சியாளரிடம் லோவ்லினா பயிற்சி பெற்றார்.
7. 2018-ம் ஆண்டில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று உலகின் கவனத்தை லோவ்லினா ஈர்த்தார்.
8. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்ற முதல் அசாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
9. 2020-ம் ஆண்டில் மத்திய அரசு, இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியுள்ளது.
10. ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் 3-வது இந்தியர் என்ற பெருமையை லோவ்லினா பெற்றுள்ளார்.
---------------------------------------------------------------
ஆகஸ்ட் 5
மைக்ரோசாப்ட்
1. பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரும் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975-ம் ஆண்டு தொடங்கினர்.
2. ‘மைக்ரோ கம்ப்யூட்டர்’ மற்றும் ‘சாப்ட்வேர்’ ஆகிய வார்த்தைகளை இணைத்து, ‘மைக்ரோசாப்ட்’ என்று இந்நிறுவனத்துக்கு பெயர் வைக்கப்பட்டது.
3. 1987-ம் ஆண்டில், தனது 31-வது வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், இளம் பில்லியனராக உருவெடுத்தார்.
4. மைக்ரோசாப்ட் நிறுவனம், 1994-ம் ஆண்டில் டைமெக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போது மக்கள் அதில் ஆர்வம் காட்டாததால், அதன் தயாரிப்பை நிறுத்தியது.
5. 1997-ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 31 ஆயிரம் ஊழியர்களில் 10 ஆயிரம் பேர் மில்லியனர்களாக இருந்தனர்.
6. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களை ‘சாப்ட்டீஸ்’ என்று அழைத்துக்கொள்கின்றனர்.
7. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் டெவலப்பர்களின் சராசரி ஊதியம் 106,000 அமெரிக்க டாலர்கள்.
8. ரெட்மாண்ட் நகரத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முயல்கள் வளர்க்கப்படுகின்றன.
9. 2021-ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, உலகின் மதிப்புவாய்ந்த 2-வது மிகப்பெரிய நிறுவனமாக மைக்ரோசாப்ட் உள்ளது.
10. மைக்ரோசாப்ட் விண்டோசின் ஸ்கிரீனில் வரும் பின்னணி படம் கலிபோர்னியாவில் உள்ள சொனோமா கவுண்டியில் எடுக்கப்பட்டதாகும்.
-----------------------------------------------------------------------------------------------------
ஆகஸ்ட் 6
ஆரஞ்சு
1. ஆரஞ்சு பழத்தின் தலைநகரமாக பிரேசில் நாடு விளங்குகிறது. இங்குதான் அதிக அளவில் ஆரஞ்சு விளைகிறது. அங்கு ஆண்டுதோறும் 17.8 மில்லியன் டன் ஆரஞ்சு விளைகிறது.
2. ஆரஞ்சு பழம் முதலில் சீனாவில் விளைந்ததாக கூறப்படுகிறது.
3. கிமு 314-ம் ஆண்டில் எழுதப்பட்ட சீன இலக்கியங்களில் ஆரஞ்சு பழத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
4. சிட்ரஸ் பழங்களிலேயே அதிக அளவில் விளையும் பழமாக ஆரஞ்சு உள்ளது.
5. ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி சத்துகள் அதிக அளவில் உள்ளன.
6. ஒரு ஆரஞ்சு பழத்தில் சராசரியாக 12 கிராம் அளவுக்கு சர்க்கரை இருக்கும். ஆனால் அதனால் உடலுக்கு தீங்கு நேராது.
7.மற்ற உணவுகளைக் குறைத்து, ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
8. உலகில் 600-க்கும் மேற்பட்ட ஆரஞ்சு வகைகள் உள்ளன. வாலென்சியா வகை ஆரஞ்சு பழத்தின் தோல் பச்சை நிறத்தில் இருக்கும்.
9. ஆரஞ்சு மரங்கள் 33 அடி உயரம் வரை வளரும்.
10. உலகில் உற்பத்தியாகும் ஆரஞ்சு பழங்களில் 80 சதவீதம் ஆரஞ்சுகள், பழரசம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
--------------------------------------
ஆகஸ்ட் 7
ஆகஸ்ட் மாதம்
1.அகஸ்டஸ் என்ற ரோமப் பேரரசரின் நினைவாக இம்மாதத்துக்கு ஆகஸ்ட் என்று பெயர் வந்தது.
2.ஆகஸ்ட் மாதம், முன்னதாக செக்ஸ்டிலிஸ் (Sextilis) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
3.பழைய ரோமன் காலண்டரில் ஆகஸ்ட் மாதம், ஆண்டின் 6-வது மாதமாக இருந்தது.
4. 304 நாட்களைக் கொண்டிருந்த ரோமன் காலண்டரில் சில ஆண்டுகளில் 30 நாட்களைக் கொண்ட மாதமாகவும், சில ஆண்டுகளில் 29 நாட்களைக் கொண்ட மாதமாகவும் ஆகஸ்ட் இருந்துள்ளது.
5. பல்வேறு நாடுகளிலும் ஆகஸ்ட் மாதம் அறுவடை மாதமாக விளங்குகிறது.
6. 1762-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதிதான், உலகில் முதல் முறையாக சாண்ட்விச் தயாரிக்கப்பட்டது.
7. இந்தியாவைப்போல் ஜமைக்கா, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ ஆகிய நாடுகளின் சுதந்திர தின விழாக்களும் ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது.
8. ஸ்வீடன் நாட்டில் குழந்தைகளுக்கு பலரும் ஆகஸ்ட் என்று பெயர் சூட்டுகிறார்கள்.
9. இரண்டாம் உலகப் போர், ஆகஸ்ட் மாதத்தில்தான் முடிவுக்கு வந்தது.
10. 1900-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் கோகோ கோலா விற்பனையைத் தொடங்கியது. முதல் முறையாக இந்நிறுவனம் இங்கிலாந்தில் விற்பனையைத் தொடங்கியது.
No comments:
Post a Comment