Powered By Blogger

Monday, November 8, 2021

பளிச் 10 - ஆகஸ்ட் 8 - 11

 அகஸ்ட் 8

கழுகு
1. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 60-க்கும் மேற்பட்ட கழுகு வகைகள் உள்ளன.
2. மனிதர்களைவிட 10 மடங்கு அதிகமாக ஒரு பொருளை பற்றிக்கொள்ளும் ஆற்றல் கழுகுகளுக்கு உள்ளது.
3. கழுகுகள் , மலை உச்சிகளில் தங்கள் கூடுகளைக் கட்டும்.
4. பல்வேறு நாடுகளிலும் சுதந்திரத்தின் சின்னமாக கழுகுகள் பார்க்கப்படுகின்றன.
5. மனிதர்களைவிட 8 மடங்கு கூர்மையான பார்வையை கழுகுகள் கொண்டுள்ளன. 3.2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முயல்களைக்கூட அவற்றால் பார்க்க முடியும்.
6. பறவை இனங்களில் கழுகுகள் புத்திசாலித்தனம் மிக்கவையாக கருதப்படுகின்றன.
7. கழுகுகள் பெரும்பாலும் நண்டுகள், பாம்புகள், மீன் ஆகியவற்றை  உண்ணும்.
8. கழுகுகள் வசந்த காலத்தில் 3 முட்டைகள் வரை போடும்.
9. மிகப்பெரிய கழுகுகள், சிறகை விரித்த நிலையில் 8 அடி அகலம் வரை இருக்கும்.
10. கழுகுகளால் 210 டிகிரி வரை கழுத்தைத் திருப்ப முடியும்.
----------------------------------------------------------------
ஆகஸ்ட் 9
ஏடிஎம் இயந்திரம்
1.ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பாரன் என்பவர் 1967-ம் ஆண்டில் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
2. ஜான் ஷெப்பர்ட் பாரன் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவில் உள்ள ஷில்லாங்கில்தான் 1925-ம் ஆண்டில் பிறந்தார்.
3. பாரன் முதலில் ஏடிஎம்களுக்கு 6 இலக்கம் கொண்ட பின் நம்பரைத்தான் வைத்தார்.  ஆனால் அதை நினைவில் வைக்க கஷ்டமாக இருக்கும் என்று அவர் மனைவி கூறியதால், 4 இலக்க  பின் நம்பரை வைத்தார்.
4.  லண்டன் நகரில் உள்ள பர்க்லேஸ் வங்கியில் முதல் ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டது.
5. இந்தியாவில் 1987-ம் ஆண்டு, மும்பையில் முதலாவது ஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது.
6. தங்கக் காசுகளைப் பெறும் வகையிலான ஏடிஎம் இயந்திரம்  அபுதாபியில் உள்ளது.
7. கேரளாவின் கொச்சின் நகரில், மிதக்கும் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.
8. பிரேசில் நாட்டில், விரல் ரேகையை வைத்து பணம் எடுக்கும் வகையில் பயோமெட்ரிக் ஏடிஎம்கள் உள்ளன.
9. இங்கிலாந்தில் ஏடிஎம்கள், ‘கேஷ் மெஷின்’ என்று அழைக்கப்படுகின்றன.
10. உலகின் உயரமான இடத்தில் உள்ள ஏடிஎம் மையம்  ( கடல் மட்டத்தில் இருந்து 14,300 அடிகள்) இந்திய - சீன எல்லையில் உள்ள நாதுலாவில் உள்ளது.
-------------------------------------------------------------------
ஆகஸ்ட் 10
கோதுமை
1. உலகில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியமாக கோதுமை உள்ளது.
2. உலகெங்கிலும் 544.6 மில்லியன் ஏக்கர்களில் கோதுமை பயிரிடப்படுகிறது.
3. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக கோதுமை பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது.
4. உலகிலேயே சீனாவில்தான் அதிக அளவிலான கோதுமை விளைகிறது. இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் உள்ளன.
5. அன்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் கோதுமை விளைகிறது.
6. கோதுமையை விதைத்த பிறகு அறுவடை செய்வதற்கு 130 நாட்கள் வரை ஆகும்.
7. அமெரிக்காவில் 1777-ம் ஆண்டில்தான் முதன்முதலில் கோதுமை பயிரிடப்பட்டது.
8. உலகெங்கிலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோதுமை வகைகள்  இருப்பதாக கூறப்படுகிறது.
9. மருத்துவப் பொருட்களைத்  தயாரிக்கவும், வோட்கா, ஜின் போன்ற மது வகைகளைத் தயாரிக்கவும்கூட கோதுமை பயன்படுத்தப்படுகிறது.
10. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கோதுமை பயிரிடப்படுகிறது.
--------------------------------------------------------------------
ஆகஸ்ட் 11
ரஃபேல் போர் விமானம்
1. ரஃபேல் போர் விமானம் 24,500 கிலோ எடை கொண்டது. இவ்விமானத்தால் 9,500 கிலோ வெடிகுண்டுகளை கொண்டுசெல்ல முடியும்.
2. இவ்விமானத்தால் வெடிகுண்டுகளுடன்  அதிகபட்சமாக மணிக்கு 1,389 கிலோமீட்டர் வேகத்திலும், வெடிகுண்டுகள் இல்லாமல் மணிக்கு 3,700 கிலோமீட்டர் வேகத்திலும் பறக்க முடியும்.
3.  ரஃபேல் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏவுகணைகளால் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க முடியும்.
4. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றலும் இவ்விமானத்துக்கு உள்ளது.
5. ரஃபேல் விமானங்கள் 15.27 மீட்டர் நீளமும், 5.3 மீட்டர் உயரமும் கொண்டது.
6. இவ்விமானத்தால் 17 ஆயிரம் கிலோ எரிபொருளைச் சுமந்து செல்ல முடியும்.
7. 60 ஆயிரம் அடி உயரத்தில் ரஃபேல் விமானங்களால் பறக்க முடியும்.
8. இவ்விமானத்தில் 2 இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
9. பிரான்ஸ், எகிப்து, கத்தார், இந்தியா ஆகிய நாடுகள் ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன.
10. இவ்விமானத்தில் உள்ள ராடாரால், ஒரே நேரத்தில் 15 இலக்குகளை கண்டறிந்து குறிவைத்து தாக்க   முடியும்.

No comments:

Post a Comment