பளிச் பத்து
------------------------
ஜூலை 14
எவரெஸ்ட் மலைச்சிகரம்
1.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1810 - 1821 காலகட்டத்தில் சர்வேயர் ஜெனரலாக இருந்த ஆண்ட்ரூ வாக் என்பவர் எவரெஸ்ட் மலைச்சிகரத்துக்கு இப்பெயரை வைத்தார்.
2.தனக்கு முன்பு சர்வேயர் ஜெனரலாக பதவி வகித்த சர் ஜார்ஜ் எவரெஸ்ட் இச்சிகரத்தை கண்டுபிடித்ததால், அவரது பெயரை இச்சிகரத்துக்கு வைத்துள்ளார்.
3.எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் தற்போதைய உயரம் 8,848.86 மீட்டர்கள். அது இன்னும் வளர்ந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
4.எவரெஸ்ட் மலைச்சிகரம், ஒவ்வொரு நூற்றாண்டிலும் 40 சென்டிமீட்டர்கள் வரை வளர்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
5.எவரெஸ்ட் மலைச்சிகரம் 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று புவியியலாளர்களின் தெரிவிக்கின்றனர். 6.ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் எந்த உயிரினமும் வாழ்வதில்லை.
7.இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் உச்சியை அடைந்திருக்கிறார்கள்.
8.எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் உச்சத்தை அடைவதற்கான முயற்சியில் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
9.நேபாளத்தை சேர்ந்த காமி ரிடா ஷெர்பா என்பவர் அதிகபட்சமாக இதுவரை 24 முறை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியுள்ளார்.
10. ஒருவர் எவரஸ்ட் மலைச்சிகரத்தில் ஏற குறைந்தபட்சம் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.
----------------------------------------------------
ஜூலை 15
பட்டாம்பூச்சி
1. சில வகை பட்டாம்பூச்சிகள் 12 அங்குலம் வரை வளரும்.
2.சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை மட்டுமே பட்டாம்பூச்சிகளால் பார்க்க முடியும்.
3.பட்டாம்பூச்சிகளால் மணிக்கு 12 மைல் முதல் 25 மைல் வேகத்தில் பறக்க முடியும்.
4.அண்டார்டிகா கண்டத்தைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் பட்டாம்பூச்சிகள் உள்ளன.
5.உலகில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன.
6.பிரிம்ஸ்டோன் எனப்படும் பட்டாம்பூச்சி, மிக அதிகபட்சமாக 10 மாதங்கள் வரை உயிர்வாழும்.
7.தங்கள் உடல் வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் குறைந்தால் பட்டாம்பூச்சிகளால் பறக்க முடியாது.
8.பெரும்பாலான பட்டாம்பூச்சிகள், தங்கள் கால்களின் மூலம் சுவைகளை அறியும்.
9.பட்டாம்பூச்சிகள், தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் மூச்சுவிடும்.
10.பட்டாம்பூச்சிகளால் 12 அடி தூரம் வரை பார்க்க முடியும்.
-------------------------------------------------------------
ஜூலை 16
பென்சில்
1.ஒரு பென்சிலை வைத்து சராசரியாக 45 ஆயிரம் எழுத்துகளை எழுத முடியும். அல்லது 35 மைல் நீளத்துக்கு கோடுபோட முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2.ஒரு மரத்தில் இருந்து 3 லட்சம் பென்சில்களைத் தயாரிக்க முடியும்.
3.தாமஸ் ஆல்வா எடிசன் பயன்படுத்திய பென்சில், மற்றவர்களின் பென்சிலை விட வித்தியாசமானதாக இருந்தது. அவை அழுத்தமாக எழுதக்கூடியதாக இருந்தன.
4.பென்சில்கள் பெரும்பாலும், மரம், கிராபைட் மற்றும் களிமண்ணைக் கலந்து தயாரிக்கப்படுகின்றன.
5.சில பென்சின்கள், கார்பன், கரி ஆகியவற்றால் தயாரிக்கப்படுகின்றன.
6.உலகின் பென்சில் தேவையில் 50 சதவீதத்தை சீனா பூர்த்தி செய்கிறது. அங்கு ஆண்டொன்றுக்கு 10 பில்லியன் பென்சில்கள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன.
7. எரேசர்களை (அழிப்பான்கள்) கண்டுபிடிக்கும் முன்பாக பென்சில்களால் எழுதப்பட்ட தவறான வார்த்தைகளை அழிக்க ரொட்டித் துண்டுகளை ஐரோப்பியர்கள் பயன்படுத்தினர்.
8.உலகின் பல்வேறு நாடுகளில், மார்ச் 30-ம் தேதி பென்சில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
9.இங்கிலாந்தில் உள்ள லேக் டிஸ்டிரிக்ட் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பென்சில்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
10.பென்சிலை கூர்மைப்படுத்த பயன்படுத்தப்படும் ஷார்ப்பனர், 1828-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
-----------------------------------------------------
ஜூலை 17
வெள்ளை மாளிகை
1.அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநரான ஜேம்ஸ் ஹோபன் என்பவர் வெள்ளை மாளிகையை வடிவமைத்துள்ளார்.
2.கறுப்பின அமெரிக்கர்களை வைத்து வெள்ளை மாளிகையை கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
3.வெள்ளை மாளிகையை கட்ட ஜார்ஜ் வாஷிங்டன் காரணமாக இருந்தாலும், அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த ஜான் ஆடம்ஸ்தான் இம்மாளிகையில் வசித்த முதல் அமெரிக்க அதிபர் ஆவார்.
4.வில்லியம் ஹென்ரி ஹாரிசன், சசாரி டெய்லர் ஆகிய அமெரிக்க அதிபர்கள் வெள்ளை மாளிகையில் வைத்து உயிரிழந்துள்ளனர்.
5.1933-ம் ஆண்டில், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வெள்ளை மாளிகையில் நீச்சல் குளம் கட்டப்பட்டது.
6.வெள்ளை மாளிகையில் தங்கும் அதிபர்களுக்கு மாதந்தோறும் உணவு, சலவை உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்யப்படும் தொகை அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
55 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட வெள்ளை மாளிகை கட்டிடத்தை பராமரிக்க ஆண்டொன்றுக்கு 1.6 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறது.
8.வெள்ளை மாளிகயில் மொத்தம் 132 அறைகளும், 135 கழிப்பறைகளும் உள்ளன.
9.இங்குள்ள டைனிங் ரூமில் ஒரே நேரத்தில் 140 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.
10. டென்னிஸ் கோர்ட், தோட்டம், நீச்சல் குளம், தியேட்டர், கூடைப்பந்து மைதானம், பில்லியர்ட்ஸ் அறை உள்ளிட்ட வசதிகளும் வெள்ளை மாளிகையில் உள்ளன.
.
No comments:
Post a Comment