ஜூலை 18
நாய்
1. மனிதர்கள் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாய்களை வீட்டில் வளர்த்து வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, அதிலிருந்த 12 நாய்களில் 3 நாய்கள் உயிர்தப்பின.
3. நாய்கள் குட்டிகளாக இருக்கும்போது 18 முதல் 20 மணிநேரம் வரை தூங்கும்.
4. மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காணும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
5. நாய்கள் சராசரியாக 10 முதல் 14 வருடங்கள் வரை உயிர்வாழும்.
6. சிறிய வகை நாய்கள், பெரிய வகை நாய்களைவிட அதிக நாட்கள் உயிர்வாழும்.
7. ரஷ்யாவைச் சேர்ந்த லைகா எனும் நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயாகும். 1957-ம் ஆண்டில் இது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
8. நாய்க் குட்டிகளுக்கு 28 பற்களும், பெரிய நாய்களுக்கு 42 பற்களும் இருக்கும்.
9. நாய்களை வளர்ப்பதால், ரத்த அழுத்தம் குறையும் என்று கூறப்படுகிறது.
10. நாய்களின் சராசரி உடல் வெப்ப நிலை 101 டிகிரி முதல் 102.5 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.
-------------------------------------------------------------------------
ஜூலை 19
ஐஸ் கிரீம்
1.கி.பி. 7-ம் நூற்றாண்டில், சீனாவில் ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2.தண்ணீரில் இனிப்பைக் கலந்து உறையவைத்து, பின்னர் அதை துண்டுகளாக்கி பழத்துண்டுகளைக் கலந்து முதலில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டன.
3. குளிர்சாதனப் பெட்டிகளை கண்டுபிடிப்பதற்கு முன்பு, பனிமலைகளில் இருந்து ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்துவந்து ஐஸ்கிரீம்களை தயாரித்து வந்தனர்.
4. ரோமானிய மன்னர்கள் அடிமைகளை பனிமலைகளின் உச்சிக்கு அனுப்பி, ஐஸ் கட்டிகளைக் கொண்டுவந்து ஐஸ் கிரீம்களை தயாரித்துள்ளனர்.
5.பனிமலைகளில் இருந்து நகரங்களுக்கு ஐஸ்கட்டிகளை உருகாமல் எடுத்துவருவது சிரமமாக இருந்ததால், முதலில் ஐஸ்கிரீம்கள் அதிக விலையுள்ளதாக இருந்தன.
6.அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன், 1790-ம் ஆண்டிலேயே, ஐஸ்கிரீம்களை சாப்பிடுவதற்காக 200 அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளார்.
7.செயின்ட் லூயிஸ் நகரில் 1904-ம் ஆண்டில் நடந்த உலகக் கண்காட்சியில் முதல் முறையாக கோன் ஐஸ்கிரீம்கள் அறிமுகமாகின.
8.அமெரிக்காவில் ஜூலை மாதம், ஐஸ் கிரீம் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
9.மிகப்பெரிய கோன் ஐஸ் கிரீம் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது. அதன் உயரம் 9 அடி.
10.உலக அளவில் ஆண்டுதோறும் 15 பில்லியன் லிட்டர் ஐஸ் கிரீமை மக்கள் சாப்பிடுகிறார்கள்.
-----------------------------------------------
ஜூலை 20
சீனப் பெருஞ்சுவர்
1.சீனப் பெருஞ்சுவர் 21,196 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது சீனாவின் 9 மாகாணங்களில் பரந்து விரிந்துள்ளது.
2. இச்சுவரின் சராசரி உயரம் 7.88 மீட்டர். ஒரு சில இடங்களில் இச்சுவர் 14 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.
3.மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பாக சீனப் பெருஞ்சுவர் உள்ளது.
4. சீனப் பெருஞ்சுவரை கட்டும் பணியை கின் ஷி ஹாங் (கிமு 260 - 210) என்ற மன்னர் தொடங்கிவைத்துள்ளார்.
5. சீனாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்ட மன்னர்கள், இச்சுவரின் பல்வேறு பாகங்களை கட்டி முடித்துள்ளனர்.
6. இச்சுவரை கட்டும் பணியில் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
7. சீனப் பெருஞ்சுவரை கட்டும்போது, , கற்களின் இணைப்பு பலமாக இருக்க அரிசிக் கஞ்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.
8. இச்சுவரின் பல இடங்களில் சீனாவின் போர்க்கடவுளுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.
9. சீனப் பெருஞ்சுவரை நிலவில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பது தவறு. தொலைநோக்கி மூலம்தான் பார்க்க முடியும்.
10.ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், சீனப் பெருஞ்சுவரைப் பார்க்க வருகிறார்கள்.
-----------------------------------------------------
ஜூலை 21
சுனாமி
1. கடற்பகுதியில் 6.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்களால் சுனாமிகள் ஏற்படுகின்றன.
2. சுனாமிகள் மணிக்கு 700 கிலோமீட்டர் வேகத்தில் கரையைத் தாக்கும்.
3. சுனாமிகளின்போது கடல் மட்டம் 10 அடிகள் வரை உயரும்.
4. இந்தியப் பெருங்கடலில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 2.40 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
5. 2004-ல் ஏற்பட்ட சுனாமி, 23 ஆயிரம் அணுகுண்டுகளின் ஆற்றலைக் கொண்டதாக இருந்தது.
6. 80 சதவீதம் சுனாமிகள், பசுபிக் பெருங்கடல் பகுதியிலேயே ஏற்படுகின்றன.
7. ஒரே பகுதியில் ஆண்டுக்கு 2 முறைகூட சுனாமி தாக்க வாய்ப்புகள் உள்ளன.
8. பொதுவாக சுனாமியின் முதல் அலையால் அதிக பாதிப்பு ஏற்படாது. அடுத்தடுத்த அலைகளால்தான் அதிக பாதிப்பு ஏற்படும்.
9. சுனாமி அலைகள் அதிக அளவில் தாக்கும் நாடாக ஜப்பான் உள்ளது.
10. 1956-ம் ஆண்டு ஹவாய் தீவை தாக்கிய சுனாமியின்போது கடல் மட்டம் 50 அடிவரை உயர்ந்தது.
No comments:
Post a Comment