Powered By Blogger

Monday, November 8, 2021

ஆகஸ்ட் 20 -23

 ஆகஸ்ட்  20

மிளகாய்
1. மிளகாய்கள் முதலில் மெக்சிகோ நாட்டில் விளைந்ததாக  அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2. உலகில் 400-க்கும் அதிகமான மிளகாய் வகைகள் உள்ளன.
3. உலகில்  மொத்தமாக தேவைப்படும்  மிளகாயில் பாதி சீனாவில் விளைகிறது.
4. ஆப்பிரிக்க விவசாயிகள், தங்கள் வயலில் யானைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க, வேலியாக மிளகாயைப் பயிரிடுகின்றனர்.
5. ஆஸ்திரேலியாவில் விளையும், ‘பட்ச் டி’ எனப்படும் மிளகாய், உலகிலேயே அதிக காரம் கொண்ட மிளகாயாக உள்ளது.
6. ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி மாதம் 4-வது வியாழக்கிழமை, உலக மிளகாய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
7.   15-ம் நூற்றாண்டில்   கிறிஸ்டபர் கொலம்பஸ், ஐரோப்பாவுக்கு முதல் முறையாக மிளகாயைக் கொண்டுவந்தார்.
8. மிளகாய்ச் செடிகள் 3 மீட்டர் உயரம் வரை வளரும்.
9. இந்தியாவில் போர்ச்சுகீசியர்களால் மிளகாய் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இந்தியாவில் காரத்துக்காக மிளகுதான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
10. சில்லி சாஸ்கள் 1807-ம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகமானது.
------------------------------------------------------------------------------
ஆகஸ்ட்  21
ஐஎன்எஸ் விக்ராந்த்
1. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம், 59 மீட்டர் அகலம் கொண்டது.
2. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடட் நிறுவனத்தில் இக்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
3. ரூ. 23,000 கோடி செலவில் இக்கப்பல் தயாரிப்பட்டுள்ளது.
4. இக்கப்பலால் அதிகபட்சமாக மணிக்கு 28 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்ல முடியும்.
5. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் 40 ஆயிரம் டன் எடை கொண்டதாக உள்ளது.
6. இக்கப்பலில்  பயன்படுத்தப்படும் மின்சாரத்தை வைத்து கேரளாவின் கொச்சின் நகரத்தில் உள்ள பாதி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியும்.
7. இக்கப்பலில் சுமார் 2,600 கிலோமீட்டர் நீளத்துக்கான மின்சார கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
8. 2 ஆயிரம் பேருக்கு சமைக்கும் வகையில், மிகப் பிரம்மாண்டமான சமையலறை இந்த கப்பலில் உள்ளது.
9. இக்கப்பலின் மேல்தளத்தில் 20 போர்விமானங்களை நிறுத்திவைக்க முடியும்.
10. இக்கப்பலில் 25-க்கும் மேற்பட்ட பெண் கடற்படை அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
--------------------------------------------
ஆகஸ்ட் 22
ஆப்கானிஸ்தான்
1. 1946-ம் ஆண்டில் ஐநா சபையில் ஆப்கானிஸ்தான் உறுப்பு நாடானது.
2. ஆப்கானிஸ்தான் குடிமக்களில் 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்.
3. கடந்த 50 ஆண்டுகளாக அதிக அளவில் உள்நாட்டு போர்கள் நடந்துவரும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
4. உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த சில் ஆண்டுகளில் மட்டும் 26 லட்சம் பேர் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
5.  ஆப்கான் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்நாளை, ‘நவ்ரோஸ்’ என்று அவர்கள் அழைக்கின்றனர்.
6. ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் குகைகளில் கிமு 650-ல் உலகின் முதல் ஆயில் பெயின்டிங்குகள் வரையப்பட்டன.
7. 1996 முதல் 2001-ம் ஆண்டுவரை தலிபான்களின் ஆட்சியின்கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது.
8. ஆப்கானிஸ்தானின் முக்கிய நீராதாரமாக ஹெல்மண்ட் நதி உள்ளது.
9. மது குடிப்பது ஆப்கானிஸ்தானில் சட்ட விரோத செயலாகும்.
10. ஆப்கானிஸ்தான் மக்களின் முக்கியத் தொழில் விவசாயமாகும்.
----------------------------------------------------
ஆகஸ்ட் 23
சாக்லேட்
1. ஆரம்ப காலத்தில் சாக்லேட்கள் பானமாக மட்டுமே அருந்தப்பட்டு வந்தன.
2. ஜோசப் ஃப்ரை என்பவர் 1847-ம் ஆண்டில் சாக்லேட் பாரை கண்டுபிடித்தார்.
3.  ஆண்டுதோறும்  110 பில்லியன் டாலர் மதிப்புக்கு சாக்லேட்கள்  விற்கப்படுகின்றன.
4.உலகில் உற்பத்தியாகும் சாக்லேட்களில் சுமார் 50 சதவீதத்தை அமெரிக்கர்கள்தான் சாப்பிடுகிறார்கள்.
5.உலகின் மிகப்பெரிய சால்லேட் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் எடை 5,792 கிலோ.
6. உலகில் அதிகம் சாக்லேட் விற்பனையாகும் இடம் பிரஸல்ஸ் விமான நிலையம். இங்கு ஆண்டுதோறும் 800 டன் சாக்லேட்கள் விற்கப்படுகின்றன.
7. சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும்  கோகோ, மேற்கு  ஆப்பிரிக்க நாடுகளில்   அதிகமாக  விளைகிறது.
8. சாக்கோ மரங்கள் 200 வருடங்கள் வரை இருக்கும்.
9. காதலர் தினத்தில் ஜப்பானிய பெண்கள், இதய வடிவத்தில் செய்யப்பட்ட சாக்லேட்களை தங்கள் காதலர்களுக்கு கொடுப்பார்கள்.
10. மாவீரன் நெப்போலியன் சாக்லேட்களை அதிகம் விரும்பியதாகவும், மனதளவில் தளரும்போதெல்லாம் சாக்லேட்களை சாப்பிட்டதாகவும்  கூறப்படுகிறது.

No comments:

Post a Comment