Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - பிப்ரவரி 16 - பிப்ரவரி 19

 பிப்ரவரி 16

மயங்க் அகர்வாலும் விபாசனா தியானமும்

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமான மயங்க் அகர்வாலின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 16).

கடந்த 2018-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான இவர், 2 ஆண்டுகளுக்குள் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். 1991-ம் ஆண்டு பெங்களூருவில் மயங்க் அகர்வால் பிறந்தார்அவரது தந்தை அனுராக் அகர்வால்கட்டிடங்களைக் கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார்மயங்க் அகர்வால் 2018-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அறிமுகமானார்மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால்முதல் இன்னிங்ஸில் 76 ரன்களைக் குவித்தார்ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக இருந்த பிரவீன் சூட்டின் மகளான ஆஷிதா சூட்டை மயங்க் அகர்வால் திருமணம் செய்துள்ளார்இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்தினமும் மணிநேரம் பேட்டிங் பயிற்சி செய்யும் மயங்க் அகர்வால்உடலை உறுதியாக வைத்திருப்பதற்காக தினமும் கிலோமீட்டர் ஓடுகிறார்மேலும் மைதானத்தில் பதற்றமில்லாமல் மனதை அமைதியாக வைத்திருப்பதற்காக விபாசனா முறை தியானத்தையும் கடைபிடிக்கிறார்.

2017-18-ம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த மயங்க் அகர்வாலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ‘மாதவராவ் சிந்தியா விருது’ வழங்கியுள்ளதுகிரிக்கெட்டைப் போலவே கால்பந்து விளையாட்டையும் அதிகம் நேசிக்கும் மயங்க் அகர்வாலுக்கு ஆர்செனல் அணியை மிகவும் பிடிக்குமாம்.

-----------------------------------------------------------------------------------------



பிப்ரவரி 17

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்

கூடைப்பந்து விளையாட்டில் ஏகபோக சக்ரவர்த்தியாக இருந்த மைக்கேல் ஜோர்டனின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 17).

விளையாட்டு வீரர்களிலேயே அதிகம் சம்பாதித்தவர் (இவரது சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்என்று பெயர்பெற்றவர் மைக்கேல் ஜோர்டன், 1963-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரில் பிறந்தார்வங்கி ஊழியரான அவரது அப்பாவுக்கு 1968-ம் ஆண்டில் வடக்கு கரோலினாவுக்கு இடமாற்றம் கிடைக்கஅங்கு குடியேறினார்கூடைப்பந்து வீரரான மேஜிக் ஜான்சனின் ஆட்டங்களால் கவரப்பட்ட மைக்கேல் ஜோர்டன்அவரைப்போன்று தானும் ஒரு சிறந்த கூடைப்பந்து வீரராக விரும்பினார்ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையிடம் பயிற்சி பெற்றார்கூடைப்பந்து விளையாட்டில் மட்டுமின்றி பேஸ்பால் மற்றும் கால்பந்து போட்டிகளிலும் அவர் வல்லவராக இருந்தார்.

பின்னாளில் பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றதால் சிறு வயதிலேயே உள்ளூரில் பிரபலமானார்சிறந்த கூடைப்பந்து வீரராக இருந்ததால் விளையாட்டு கோட்டாவில் அவருக்கு வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததுஅங்கு படிப்போடு சேர்த்துஅவரது கூடைப்பந்து ஆடும் திறனும் மெருகூட்டப்பட்டது. 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க அணியில் மைக்கேல் ஜோர்டன் இடம்பெற்றிருந்தார்அந்த அணிதங்கப் பதக்கம் வெல்லமைக்கேல் ஜோர்டனின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

கல்லூரிப் படிப்பை முடிக்கும்முன்பே 1984-ல் அமெரிக்காவின் புகழ்பெற்ற என்பிஏ கூடைப்பந்து தொடரில் சிகாகோ புள்ஸ் அணிக்காக ஆட தேர்ந்தெடுக்கப்பட்டார்அக்கிளப்புக்காக ஆண்டுகள் ஆடிய மைக்கேல் ஜோர்டன்ஒவ்வொரு போட்டியிலும் சரசரியாக 28.2 புள்ளிகளை ஈட்டினார்என்பிஏ கூடைப்பந்து போட்டிகளின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வீரராக வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜோர்டன் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்புகழ்பெற்ற மேற்கத்திய விளையாட்டு பத்திரிகையான ’ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேடட் மேகசின்’இவருக்கு 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் என்ர விருதை 1996-ல் வழங்கியது.

----------------------------------------------------------------------------------------------------------------



பிப்ரவரி 18

வெற்றிக்கு உதவிய இசை

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மிக இளம் வயதில் (16 வயதில்தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமைக்குரிய மனு பாகரின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 18).

சிறு வயதில்தான் படித்துவந்த பள்ளியில்அனில் ஜாகர் என்ற பயிற்சியாளரின் மேற்பார்வையில் மனு பாகர் பயிற்சி பெற்றுவந்தார்ஆனால் மனுவுக்கு 14 வயதாக இருக்கும்போதுமுக்கிய போட்டிகளில் பங்கேற்கும் தருணத்தில்அவரது பயிற்சியாளர் வேலையை விட்டு நின்றுவிட்டார்.

பயிற்சியாளர் இல்லாத சூழ்நிலையிலும் 2017-ம் ஆண்டில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் மனு பாகர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் மனுஇதைத்தொடர்ந்து உலகக் கோப்பை உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ளார்இதுகுறித்து கூறும் அவர், “துப்பாக்கி சுடுதலின் அடிப்படைகள் தெரிந்ததால்என்னால் ஓரளவு சமாளிக்க முடிந்ததுபயிற்சியாளரின் மேற்பார்வையில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டுதினமும் பல மணிநேரம் பயிற்சி செய்தேன்நாம் தீவிரமாக முயற்சி செய்தால் பயிற்சியாளர் இல்லாமல்கூட சாதிக்க முடியும் என்பதை இந்த காலகட்டத்தில் உணர்ந்துகொண்டேன் ” என்கிறார்.

போட்டிகளின்போது இலக்கை சரியாக குறிபார்த்து சுடுவதற்கு மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் அவசியம்இதற்காக முக்கிய போட்டிகளுக்கு நடுவில் இசையைக் கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார் மனு பாகர். “போட்டிகளின்போது நான் எப்போதும் மற்ற வீரர்கள் எத்தனை புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள் என்பது பற்றி கவலைப்பட மாட்டேன்என்னைப் பற்றியும்எனது இலக்குகளைப் பற்றியும்தான் சிந்திப்பேன்போட்டியில் எனது முறை வருவதற்கு முன்பு ஹெட்செட்டில் மனதுக்கு இனிய பாடல்களைக் கேட்பேன்இது எனக்கு புத்துணர்ச்சி தரும்” என்கிறார் மனு பாகர்.

----------------------------------------------------------------------------------------------------------------

பிப்ரவரி 19

இளம் வயதில் நிராகரிக்கப்பட்ட பந்த்

விராட் கோலிரோஹித் சர்மாவுக்கு அடுத்துஇந்தியாவின் பேட்டிங் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் ரிஷப் பந்த்ஆஸ்திரேலிய தொடரில் கடைசி டெஸ்ட்டில் இந்தியாவை வெற்றிபெற வைத்ததுஅவரது கிராஃபை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளதுஇதன்மூலம் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்தை எட்டியுள்ள பந்த்ஒரு காலத்தில் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்உத்திரப் பிரதேச மநிலத்தில் பிறந்த ரிஷப் பந்த்சிறுவயதில் கிரிக்கெட் பயிற்சிக்காக டெல்லிக்கு சென்றார்ஷிகர் தவனின் பயிற்சியாளர் தாரக் சின்ஹாதான் ரிஷப் பந்துக்கும் பயிற்சியாளராக இருந்தார்அக்காலகட்டத்தில் டெல்லி அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி இருந்ததால்ராஜஸ்தானுக்கு குடிபெயரும்படி ரிஷப் பந்த்திடம் ஆலோசனை கூறியுள்ளார் தாரக் சின்ஹா.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் சென்ற ரிஷப் பந்த்அம்மாநிலத்தின் 15 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார்ஆனால் அதன்பிறகு ரிஷப் பந்த் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால்ராஜஸ்தான் அணிக்காக அவர் ஆட எதிர்ப்பு எழுந்ததுஇதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்இதனால் மீண்டும் டெல்லி திரும்பிய ரிஷப் பந்த்அந்த அணிக்காக ஆடத் தொடங்கினார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பந்த், 2016-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார்இதில் ஒரு போட்டியில் 18 பந்துகளில் 50 ரன்களையும்மற்றொரு போட்டியில் 24 பந்துகளில் 70 ரன்களையும் குவித்ததன் மூலம் இளைஞர்களின் ஹீரோ ஆனார்கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்துஅவரது நகலாக தற்போது கிரிக்கெட்டில் தடம்பதித்து வருகிறார் ரிஷப் பந்த்.

No comments:

Post a Comment