Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - மார்ச் 4 - மார்ச் 7

 மார்ச் 4

மியான்தத் செய்த மிமிக்ரி

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காதுஅதிலும்உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த அணிகள் மோதினால் கேட்கவே வேண்டாம்ஆரம்பம் முதல் இறுதிவரை அனல் பறக்கும்.

1992-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும்பாகிஸ்தானும் மோதியபோது அப்படி ஒரு சம்பவம் நடந்ததுஇப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்ததுஅடுத்து ஆடிய பாகிஸ்தான்அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்ததுஇந்த கட்டத்தில் பாகிஸ்தானை மீட்கும் முயற்சியில் மியான்தத் ஈடுபட்டிருந்தார்அவரது கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகஇந்திய கீப்பர் கிரன் மோரேஸ்டம்புக்கு பின்னால் நின்று பந்துவீச்சாளரிடம் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்இது மியான்தத்தை கோபப்படுத்தியது.

அப்போது டெண்டுல்கர் வீசிய ஒரு பந்துமியான்தத்தின் பேட்டுக்கு நெருக்கமாக சென்றுகீப்பர் மோரேவின் கைகளைச் சென்றடைந்ததுபந்து பேட்டில் பட்டிருக்குமோ என்று சந்தேகப்பட்ட மோரேதுள்ளிக் குதித்து அம்பயரிடம் ‘அவுட்’ கேட்டார்ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லைமோரேவின் இந்தச் செயல் மியான்தத்தின் கோபத்தை அதிகரித்ததுமோரேவைப் பார்த்து சத்தம்போடஅவரும் பதிலுக்கு பேசியுள்ளார்.

மோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில்தவளைபோல் குதித்து மிமிக்ரி செய்து மோரேவை கிண்டலடித்தார் மியான்தத்பதிலுக்கு மோரே முறைக்கஇருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை வந்ததுநடுவர் டேவிட் ஷெப்பேர்ட் தலையிட்டு இருவரையும் விலக்கினார்.

அதே நேரத்தில் மோரேவுடனான சண்டை மியான்தத்தின் கவனத்தை திசை திருப்பசில நிமிடங்களில் அவர் அவுட் ஆனார்இந்தியாவும் வெற்றி பெற்றது.

------------------------------------------------------------------------------

மார்ச் 5

மன்பிரீத் கவுரின் போராட்டம்

குண்டு எறியும் போட்டியில் தேசிய சாதனை படைத்த மன்பிரீத் கவுரின் பிறந்தநாள் இன்று (மார்ச் 5).

பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் 1990-ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் பிறந்தார்மன்பிரீத் கவுரின் அப்பா ஒரு விவசாயி. 3 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர்தான் மூத்தவர்மன்பிரீத்தின் உறவினர்கள் இருவர் தடகள வீரர்களாக இருந்ததால்இவருக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டதுஇதை தந்தையிடம் கூறஅவரும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதி அளித்துள்ளார்.

முதலில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரவே மன்பிரீத் கவுர் விரும்பியுள்ளார்ஆனால் சற்று குண்டான அவரது உடல்வாகு ஓட்டப்பந்தயத்துக்கு சரிப்பட்டு வராது என்பதால்குண்டு எறியும் போட்டியில் கவனத்தைச் செலுத்துமாறு அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார்இதைத்தொடர்ந்து மன்பிரீத்தும் குண்டு எறியும் போட்டியில் பயிற்சிபெறத் தொடங்கினார்.

மன்பிரீத்துக்கு 13 வயதாக இருந்தபோதுஅவரது அப்பா காலமானார்இதைத்தொடர்ந்து அவரது தாயாரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்இப்படி அடுத்தடுத்து சோதனைகள் வந்தபோதிலும் மன்பிரீத் கவுர் பயிற்சியை விடவில்லைவிளையாட்டு வீராங்கனையாகி இந்தியாவுக்காக பதக்கங்களைக் குவிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் போராடினார்.

2007-ம் ஆண்டு நடந்த சர்வதேச இளையோர் தடகளப் போட்டியில் அவரால் 9-வது இடத்தையே பிடிக்க முடிந்ததுஆனாலும் மனம் தளராமல் போராடிய மன்பிரீத் கவுர்இந்தியாவின் முன்னணி குண்டு எறியும் வீராங்கனையாக உருவெடுத்தார். 2015-ல் நடந்த தேசிய ஓபன் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றர்இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ம் அண்டில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 18.86 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்கரம்ஜீத் சிங் என்பவரிடம் பயிற்சி பெற்றுவந்த மன்பிரீத் கவுர்பின்னர் அவரையே திருமணம் செய்துகொண்டார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

மார்ச் 6

முகமது அலியாக மாறிய காஸியஸ் கிளே

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் பிறந்துபுகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக உருவெடுத்த காஸியஸ் கிளேதனது பெயரை ‘முகமது அலி’ என்று மாற்றிக்கொண்ட நாள் மார்ச் 6, 1964.

அமெரிக்காவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரராக இருந்தவர் காஸியஸ் கிளே. 1960-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதால் அமெரிக்க மக்களிடையே புகழ்பெற்றவராக இருந்தார்அதே நேரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்கு எதிராக நடந்த சில இனவெறி சம்பவங்கள்அவரது மனதை பாதித்தனநாட்டுக்காக தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்தாலும்தன்னை வெள்ளையின மக்கள் இனவெறிக் கண்களுடன் பார்த்ததால் அவர் வருத்தினார்.

இத்தகைய சூழலில் 1964-ம் ஆண்டு முஸ்லிமாக மாறிய காஸியஸ் கிளேதனது பெயரை ‘முகமது அலி’ என்று மாற்றிக்கொண்டார்மார்ச் 6-ம் தேதி அவர் இதை அறிவித்தார். ‘நான் அடிமையாக இருந்தபோது எனக்கு இருந்த பெயர்தான் காஸியஸ் கிளேஇப்போது நான் முகமது அலிசுதந்திரமான மனிதன் ’ என்று முழங்கினார்மால்கம் எக்ஸ் என்பவரின் வழிகாட்டுதல்படி அவர் மதத்தையும்தன் பெயரையும் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

முகமது அலியின் இந்தச் செயல் ஒரு பிரிவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியதுஆனால் அவர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லைகாலமும் காஸியஸ் கிளே என்ற பெயரை மறந்து முகமது அலி என்ற பெயரிலேயே அவரைக் கொண்டாடியது.

அதே நேரத்தில் முகமது அலி தனது பெயரை சட்டபூர்வமாக மாற்றவில்லை என்றும்பல பத்திரங்களில் அவரது பெயர் காஸியஸ் கிளே என்றே இருந்தது என்றும் 2016-ம் ஆண்டில் ‘யுஎஸ்ஏ டுடே’ இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

---------------------------------------------------------------------------------

மார்ச் 7

சுனில் கவாஸ்கரும் 10,000 ரன்களும்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் படைத்த நாள் மார்ச் 7. இவர் 1987-ம் ஆண்டு அகமதாபாத் நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை படைத்தார்.

கிரிக்கெட் உலகில் கவாஸ்கர் கால்பதித்த நாட்களில் பந்துவீச்சாளர்களின்குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் கையே ஓங்கி இருந்ததுஇந்த காலகட்டத்தில் அவர்களை எதிர்த்தும் ரன்களைக் குவிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் சுனில் கவாஸ்கர்சர்வதேச அரங்கில் ‘லிட்டில் மாஸ்டர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது தொடர் சாதனைகள் இந்தியாவுக்கு பெருமையை பெற்றுத் தந்தன.

ஆரம்ப கட்டத்தில் கிரிக்கெட் உலகில் வேகமாக முன்னேறிய கவாஸ்கர்தன் இறுதிக் இறுதிக் காலத்தில் கொஞ்சம் தடுமாறத் தொடங்கினார்இதனால் ஒரு கட்டத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விடலாமா என்றுகூட அவர் யோசித்தார்ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் யாரும் செய்ய முடியாத சாதனையை, 10 ஆயிரம் ரன்களை எட்ட வேண்டும் என்ற லட்சியம் அவரை தொடர்ந்து ஆடவைத்தது.

1987-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி அவரது ஆசை நிறைவேறியதுஇப்போட்டியில் அரைசதம் அடித்த கவாஸ்கர், 58 ரன்களை எட்டிய நிலையில், 10 அயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்பேட்டைத் தரையில் ஓங்கி அடித்து தனது மகிழ்ச்சியை கவாஸ்கர் வெளிப்படுத்தபாகிஸ்தான் வீரர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் கரகோஷத்துடன் அவரை வாழ்த்தினர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் டெஸ்ட் பேட்ஸ்மேன் எற பெருமையுடன் அடுத்த சில நாட்களில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார் கவாஸ்கர்.

No comments:

Post a Comment